அரசுப் பணிகளில் பணியிடங்களை குறைப்பதற்கான அரசாணை.. நடவடிக்கையை அரசு துவங்கியுள்ளது.... இக்கடிதமே அதற்கான ஆரம்பம்...
ஆனால் "தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்'" இவற்றை எல்லாம்
முழுமையாக ஆராய்ந்து....
அனைத்து தரப்பு மக்களின் ஆதி முதல் அந்தம் முடிய அனைத்து சேவைகளையும் செய்து வரும் வருவாய்த்துறையில் ஏற்கனவே, பணித்தன்மைக் கேற்பவும், பணிப்பளுவிற்கேற்பவும் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படாமல் துறையானது பல ஆண்டுகளாக திணறிக் கொண்டிருக்கும் வேளையில், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர் திரு.எஸ்.ஆதிஷேசையா, அவர்கள் தலைமையில், அரசாணை எண்: 56, நிதி (சி.எம்.பி.சி.) துறை,நாள்: 19.02.2018ன்படி அமைக்கப்பட்;டுள்ள பணியாளர் மறுசீரமைப்பு குழு (Staff Rationalisation Committee)) என்பது துறையின் நிர்வாகத்தை முழுமையாக முடக்கிவிடும் அபாயம் உள்ளது என்றும், பொது மக்களின் சமூக வாழ்க்கையோடு, சட்டம் ஒழுங்கு, அரசின் சிறப்பு திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லுதல், பேரிடர் மேலாண்மை, தேர்தல், முக்கிய பிரமுகர் வருகை என அனைத்து நுண்ணிய பணிகளையும் வருவாய்த்துறையில் மேற்கொண்டு வருவதால், இவை தேவையற்ற பணியிடங்கள் ((Non-essential posts) என்று வகைப்பாடு செய்வதோ, புறஒப்படைப்பு முறையிலோ (Outsourcing) ஒப்பந்த அடிப்படையிலான (Contract) நியமனம் என்பது நிர்வாகத்தை பாதிப்படைவதாக அமைவதோடு பொது மக்கள் நலனையும் வெகுவாக பாதிப்படையச் செய்யும் என்பதை தெரிவித்தும்...
ஏற்கனவே, தமிழக அரசால் அரசாணை எண்: 467, நிதித் (சி.எம்.பி.சி.) துறை, நாள்: 26.11.2001ன்படி அமைக்கப்பட்ட முனைவர்.ஏ.எம்.சுவாமிநாதன், இ.ஆ.ப. குழு மற்றும் பல நிர்வாக சீர்திருத்தக் குழுக்களிலிருந்து காவல் துறை மற்றும் வருவாய்த்துறை ஆகியவை சட்டம் ஒழுங்கு, மாநிலத்தின் பாதுகாப்புத் தொடர்பானது எனக் கருதி, விலக்களிக்கப்பட்டதைப் போன்றே, தற்போது அமைக்கப்பட்டுள்ள பணியாளர் மறுசீரமைப்பு குழுவிலிருந்து (Staff Rationalisation Committee) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைக்கு முழுமையாக விலக்களிக்க வேண்டும் என தெரிவித்தும், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் அரசுக்கு விரிவாக முறையீடு அளித்துள்ளோம்....
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஊழியர்களின் எதிர்கால நலன்களை சரியாக புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்பட்டு வருகிறது.
"STAFF RATIONALISATION COMMITTEE" பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டால்
வருவாய்த்துறையில் பதவி உயர்வு என்பது "கானல் நீர்" போல் ஆகிவிடும் என்பதை வருவாய்த்துறையில் பணிபுரியும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்....
நமக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகளை தெரிவித்து, அதிலிருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகளை
சரியாக திட்டமிட்டு மேற்கொள்வது தான் ஊழியர் நலன் காக்கும் அமைப்புகளின் கடமையாகும்...
அந்த கடமையை சரியாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மேற்கொண்டு வருகிறது....
எனவே, சரியான திசைவழியில் வருவாய்த்துறை ஊழியர்களை பாதுகாப்பாக பயணிக்க வைக்க பல்வேறு இயக்க நடவடிக்கைகளை
மேற்கொண்டு வரும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவிக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் முழுமையாக பங்கேற்று, நமது உரிமையை நிலை நாட்டுவோம்.....
நமது பணியினை பாதுகாப்போம்....