மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Thursday 26 July 2018

பிளஸ் 2வில் குரூப் பெயர் மாற்றம் கணினி அறிவியல் பாடம் மூன்று வகையாக பிரிப்பு:அரசாணை வெளியீடு



சென்னை: பிளஸ் 2 வகுப்புகளில் உள்ள பாடப்பிரிவுகளின் பெயர்கள் இந்த  ஆண்டு முதல் மாற்றி அமைத்து அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது: பள்ளிக் கல்வித்துறையில் தொழில் கல்வி மற்றும் கலைப் பிரிவுகளில் முதன்மைப் பாடப் பிரிவுகளின் பெயர்கள், முதன்மைப்  பாடங்களில் மாற்றம் செய்து கலைத்திட்ட வடிவமைப்பு(curriculum) குழு மற்றும் உயர்மட்டக் குழு ஆகியவை பரிந்துரை  செய்துள்ளன. அதற்கு மாநில பொதுப் பள்ளிக் கல்வி வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.  இது தவிர மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், இதுவரை கணினி அறிவியல் பாடம் மட்டுமே  அனைத்து பிரிவுகளுக்கும் ( அறிவியல் மற்றும் கலைப் பிரிவு) இருந்து வருகிறது.

இதில் கணினி அறிவியல் பாடத்தை மூன்று  வகையாக நடப்பு கல்வி ஆண்டு முதல் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.  அவரைத் தொடர்ந்து மேனிலைப் பாடப்பிரிவுகளில் தொழில் கல்வி பாடப்பிரிவுகளின் பெயர்கள் மாற்றம் செய்துள்ளதற்கும்,  முதன்மைப் பாடங்களில் மாற்றம் செய்ததற்கும், வணிக கணிதம், புள்ளி இயல், அறிவியல், இந்திய பண்பாடு, செவிலியம் பொது  என்று பாடப் பெயர்கள் மாற்றம் செய்துள்ளதற்கும், புதிய ெ தாழில் கல்வி மற்றும் கலைப் பிரிவு பாடப் பிரிவுகளின் பெயர் மற்றும்  முதன்மை பாடங்கள் மாற்றம் நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 1 வகுப்புக்கும், 2019-2020ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 வகுப்புக்கும்  நடைமுறைப்படுத்த அரசாணை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுள்ளார்.

பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலித்து  அதை ஏற்கலாம் என்று முடிவு செய்துள்ளது.  அதன்படி மேனிலைப் பாடப் பிரிவுகளில் முதன்மைப் பாடங்களில் மாற்றம் செய்துள்ளதற்கு அரசு அனுமதி அளித்து  உத்தரவிடுகிறது.

இதன்படி,
* அறிவியல் பிரிவு(இயற்பியல், வேதியியல், கணிதம்) கணினி அறிவியல் முதன்மைப் பாடமாக இருக்கும்.
* கலைப்பிரிவுகளில் 3 வகை உள்ளது. இவற்றுக்கு கணினி பயன்பாடு முதன்மைப்பாடமாக இருக்கும்.
* தொழில் கல்வியில் 10 பிரிவுகள் உள்ளன. இவற்றுக்கு கணினி தொழில் நுட்பம் முதன்மைப் பாடமாக இருக்கும்.
* பொது இயந்திரவியல் என்பது அடிப்படை இயந்திரவியல் என்று மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முதலாம் மற்றும் இரண்டாம்  ஆண்டுக்கு கணக்கு, அடிப்படை இயந்திரவியல் கருத்தியல், கணினி தொழில் நுட்பம், அடிப்படை இயந்திரவியல் செய்முறை  ஆகியவை முதன்மைப்பாடங்களாக இருக்கும்.


Monday 23 July 2018

அரசுப் பள்ளிகளில் 4 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 10 லட்சம் குறைவு!




10 ஆண்டுகள் முன்பு வரை,  அரசு பள்ளிகளில் 90 லட்சம் மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 30 லட்சம் மாணவர்களும் படித்து வந்தனர். இந்த நிலை தற்போது தலைகீழாக மாறியிருக்கிறது. அதுவும், கடந்த நான்கு ஆண்டுகளில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மிக கடுமையாக சரிந்திருக்கும் அதிர்ச்சித் தகவல், சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட புத்தகத்தின் மூலமாகவே வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது..


இதன்படி, 2014-15ல் அரசு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 56 லட்சத்து 55 ஆயிரத்து 628 மாணவர்கள் படிப்பதாக கூறப்பட்டது. இது, 2018 -19 ல் 46 லட்சத்து, 60 ஆயிரத்து 965 ஆக குறைந்துள்ளது, கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


நான்கே ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 10 லட்சம் சரிந்திருக்கிறது.


இதேநேரத்தில், தனியார் பள்ளி மாணவர் எண்ணிக்கையை பொறுத்தவரை, 2014-15-ல், 45 லட்சத்து 96 ஆயிரத்து 909 ஆகவும், 2018-19-ல் 52 லட்சத்து 71 ஆயிரத்து 543 ஆக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


நகரங்களுக்கு புலம் பெயரும் மக்கள், தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதே, அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிய முக்கிய காரணம் என கூறும், கல்வியாளர் அஜீத் பிரகாஷ் ஜெயின், தனியார் பள்ளிகளை போல், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் நவீன முறைகளில் பாடம் நடத்த பயிற்சி அளித்தால், மாணவர் எண்ணிக்கை மேலும் சரியாமல் இருக்கும் என்கிறார்.  



இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி, அவர்களுக்கான கட்டணத்தையும் அரசே கொடுக்கும் நிலை இருப்பதை சுட்டிக்காட்டும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், அதையும் தாண்டி, மாணவர்களை சேர்க்க ஆசிரியர்களும் பல்வேறு முயற்சிகளை எடுக்கிறோம் எனவும் தெரிவிக்கின்றனர்.



இதே நிலை இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடித்தால், அரசு பள்ளிகளே இல்லாத அபாய நிலை உருவாகிவிடும் என்பதால், இந்த விவகாரத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே கல்வியாளர்களின் வேண்டுகோள்

Sunday 22 July 2018

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016 பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ள இணைப்பில் புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.!!!

புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்ய…

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016
பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ளஇணைப்பில் புதிய   அடையாள அட்டையைத் தரவிறக்கம்செய்து கொள்ளலாம்.

CLICK HERE TO DOWNLOAD THE NHIS CARD

பயனர்எண் :
பழைய காப்பீட்டு அடையாள அட்டை எண். (எண் &எழுத்துகள் அடங்கிய 23 உறுப்புகள் உடையது)

கடவுச்சொல் :
பிறந்த தேதி:

TET – ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வா?



டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வு ஏன் என்று ஜாக்டோ ஜியோ பொது செயலாளர் மீனாட்சி சுந்தரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தேர்ச்சியடைந்து, அதற்குப்பின் தகுதித்தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சி பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகங்களிலே பதிவு செய்து 2013ம் ஆண்டு முதல் பணிக்காகக் காத்திருப்போர் தமிழக அரசு அண்மையில் தந்துள்ள புள்ளிவிவரப்படி 82 ஆயிரம் பேர்களாவர்.

தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கே மீண்டும் ஒரு தகுதித் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் முறை இரண்டையும் எதிர்த்துப் போராடியதால் பள்ளிக் கல்விதுறை அமைச்சர் ஆசிரியர் பணிநியமனத்திற்குக் கடைப்பிடித்து வந்த “வெயிட்டேஜ்” முறையை ரத்து செய்திருப்பதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வு நடத்தித்தான் பணியளிக்கப்போவதாக அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.

   


கேரளவில் தமிழில் கணினி அறிவியல் பாடபுத்தகங்கள் விரைவில் ஆசிரியர்களை நியமிக்க முடிவு ... அசத்தும் கேரள முதல்வர் பினாராயி விஜயன்

கேரளவில் தமிழில் கணினி அறிவியல் பாடபுத்தகங்கள் விரைவில் ஆசிரியர்களை நியமிக்க முடிவு ...
அசத்தும்  கேரள முதல்வர் பினாராயி விஜயன்

http://tamil.asianetnews.com/politics/information-tecjnology-books-in-tamil-in-kerala-schools





NEWS SOURCE:


செய்தி:
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014 .

POPULAR POSTS