மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Friday 23 February 2018

தனியாருக்கு ஏலமா ???

அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பு: ‘மைக்ரோ சாப்ட்’ நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்புகள் தொடங்கி உள்ள தமிழக அரசு ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–கணினி வழியில் கல்வி கற்பிக்கும் பகையில் ‘ஸ்மார்ட்’ வகுப்புகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. இதற்காக பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்துடன் பள்ளி கல்வித்துறை ஏற்படுத்தியுள்ளது.புதிய பாடத்திட்டத்தை வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தும் நிலையில், 2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ‘365’ என்ற மென்பொருளை ‘மைக்ரோ சாப்ட்’ நிறுவனம் இலவசமாக தரவுள்ளது.

‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் கரூர், கன்னியாகுமரி, திருப்பூர் வடக்கு, ஒசூர், கடலூர் மாவட்டங்களில் தலா ஒரு பள்ளிக்கூடத்தையும், சென்னையில் எழும்பூர் மாகாண மகளிர் பள்ளி மற்றும் லேடி வெலிங்டன் பள்ளி உள்ளிட்ட 7 பள்ளிகளை தத்தெடுத்துள்ளது.இந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு அந்த நிறுவனம் சார்பில் கணினி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக ‘கிளவ்ட் கம்ப்யூட்டிங்’ என்ற தொழில்நுட்பத்தை பள்ளிகளில் பயன்படுத்த உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

கணினி அறிவியல் பாடம் துணைப் பாடமாக மட்டும் இணைப்பு..

மாண்புமிகு தமிழக அரசு கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக அரசுப்பள்ளியில் கொண்டு வராமல் துணைப்படமாக கொண்டுவந்துள்ளது.


            ஏழை மாணவர்கள் கல்வியில்
                             (ஏ)மற்றமா?


தமிழகத்தின் தற்போது மாணவர்களுக்கு மூன்று பருவங்களாக புத்தகங்கள் வழங்கி வருகின்றது. வரும் கல்வியாண்டில் 2018-2019 ஆண்டில் புதிய வரைவு பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது  பாடமாக கொண்டுவரப்படும் என அனைவராலும் எதிர் பார்க்கப்பட்ட வேலையில் தற்போது துணைப் பாடமாகவும் பருவத்திற்கு இரண்டு பாடங்களை மட்டும் TWO UNIT ஆக இணைத்துள்ளது.

40000கணினி ஆசிரியர்களும் அரசுப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் என அனைவரும்   எதிர்பார்த்த நிலையில் தற்போது துணைப்படமாக வெளிவருவது அனைவருக்கும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

Tuesday 20 February 2018

6ம் வகுப்பிலிருந்து 10வகுப்புறை கணினி பட்டதாரி பணியிடங்கள் தோற்றுவிக்கப்படவில்லை...

6ம் வகுப்பிலிருந்து 10வகுப்புறை கணினி பட்டதாரி பணியிடங்கள் தோற்றுவிக்கப்படவில்லை..

கணினி ஆசிரியர்கள் சார்ந்த கேள்விக்கு முதல்வர் தனிப்பிரிவு பதில்

900 கோடிக்கு நிதி எங்கே ???

கணினிக்காக  வருகின்ற நிதியை தமிழக அரசு என்ன செய்கின்றது ??-
முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு..

Monday 19 February 2018

வேலூரில் கணினி ஆய்வகம்..

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 50கணினியுடன் ஆய்வகங்கள் கணினி ஆசிரியர்களை அரசு நியமித்தால் மாணவர்கள் கல்வித் தரம் உயரும்...

அரசுப்பள்ளி இங்கே!!! மாணவர்கள் எங்கே ?

அரசுப்பள்ளியில் சரிந்து வரும் மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்ககம், தொடக்கக் கல்வி இயக்ககம் ஆகியவை அண்மையில்  வெளியிட்ட சில புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து பார்க்கும் போது அரசு தொடக்கப் பள்ளிகளும், நடுநிலைப் பள்ளிகளும் எந்த அளவுக்கு மோசமான நிலையில் உள்ளன என்பதை அறிய முடிகிறது.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 39,348 அரசு நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகள் உள்ளன.

அவற்றில் 32,053 பள்ளிகளில், அதாவது 81.46% அரசு பள்ளிகளில் 80-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படிப்பதாக அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களில் இருந்து அறிய முடிகிறது.

அரசுத் தொடக்கப்பள்ளிகளை மட்டும் கணக்கில் கொண்டால் மொத்தமுள்ள 29,696 பள்ளிகளில் 3917 பள்ளிகளில் மட்டும் தான்  80&க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.

 மீதமுள்ள 25,779 பள்ளிகளில், 80-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். இது மொத்தப்பள்ளிகளில் 86.81% என்பது குறிப்பிடத்தக்கது...

POPULAR POSTS