மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday 23 June 2018

"அனைவரும் வாரீர்"திருமண விழா அழைப்பிதழ்"




தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின்  மாநில மகளிர் அணித் தலைவி

"ரங்கநாயகி-ஜீவானந்தம்"

அவர்களுக்கு 


25.6.2018 வருகின்ற  திங்கள் அன்று காலை 5-6மணிக்கு இருமனங்கள் இணைகின்ற திருமணவிழா ஈரோடு மாவட்டத்தில் நடைபெறுகிறது அனைத்து கணினி ஆசிரியர்களும் வருகை புரிந்து மணமக்களை பல்லாண்டு வாழ வாழ்த்துங்கள்...


வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறோம்..

வெ.குமரேசன்..
பொதுச் செயலாளர்,
9626545446 ,
தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.655/2014.

அரசு பள்ளிகளில் கூடுதலாக 17 ஆயிரம் ஆசிரியர்கள்



அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு தேவையானதை விட, 17 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், ஒரு வாரமாக நடந்தது*

இந்த முறை, மாணவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட்டு, ஆசிரியர்களின் தேவையை அறிந்து கொள்ள, கல்வித்துறை திட்டமிட்டது

இதற்காக, கல்வி மேலாண்மை தகவல் தொழில்நுட்ப திட்டமான, 'எமிஸ்' வாயிலாக, ஆதார் விபரங்களுடன் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை; 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம், ஆசிரியர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. இதில், 5.64 லட்சம் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, 16 ஆயிரத்து, 114 ஆசிரியர்களே தேவை. ஆனால், 33 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

அதனால், கூடுதலாக உள்ள, 17 ஆயிரம் ஆசிரியர்களின் விபரங்கள், மாவட்ட வாரியாக தொகுக்கப்பட்டன. அவர்கள் அனைவரையும், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் நியமிக்க, பணி நிரவல் கவுன்சிலிங், சமீபத்தில் நடந்தது. ஆனால், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க, போதுமான அளவுக்கு பள்ளிகளில் காலியிடங்கள் இல்லை*

இதனால், காலை, 9:00க்கு வரவழைக்கப்பட்ட ஆசிரியர்கள், இரவு, 10:00 மணி வரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் காத்திருந்தனர். மாநிலம் முழுவதும், 2,500 காலியிடங்களின் விபரம் சேகரிக்கப்பட்டு, நள்ளிரவில், உபரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது.அதிலும், 2,500 ஆசிரியர்களுக்கு மட்டுமே, இடமாறுதல் வழங்கப்பட்டது*

மீதமுள்ள, 14 ஆயிரத்து, 500 ஆசிரியர்களுக்கு, இடமாறுதல் வழங்க முடியாததால், தற்போது அவரவர் பணியாற்றும் பள்ளிகளிலேயே, பணியை தொடர அனுமதிக்கப்பட்டு உள்ளனர்


தற்போதைய நிலையில், அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 17 ஆயிரம் ஆசிரியர்களுக்கும், ஆண்டுக்கு, 800 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.'இந்த சிக்கலுக்கு தீர்வு காண, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, ஆசிரியர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

பள்ளி மாணவர்களுடன் மதிய உணவருந்திய கலெக்டர்


கேரள அரசு பள்ளியில், மதிய உணவு திட்டத்தின் தரத்தை சோதிக்க சென்ற கலெக்டர், மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய சம்பவம், பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள நீர்குன்னம் என்ற இடத்தில், ஸ்ரீதேவி விலாசம் என்ற அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.


இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.ஆலப்புழா மாவட்ட கலெக்டர், சுஹாஸ், இந்த பள்ளிக்கு, அதிரடியாக சோதனை நடத்த வந்தார்.


அப்போது மதிய நேரம் என்பதால், மதிய உணவு வழங்கப்படும் அறைக்கு சென்றார். அங்கு, மாணவர்கள், உணவருந்திக் கொண்டு இருந்தனர்.



உடனே, அவர்களுடன் அமர்ந்து, கலெக்டர் சுஹாசும், உணவருந்த தொடங்கினார். மாவட்ட கலெக்டர் தங்களுடன் அமர்ந்து உணவருந்துவதைக் கண்ட மாணவர்கள், உற்சாகம் அடைந்தனர்.

மாணவர்களுடன் உரையாடியபடி, அங்கு பரிமாறப்பட்ட சாதம், வெள்ளரிக்காய் குழம்பு, உருளைக்கிழங்கு பொறியல், மோர் ஆகியவற்றை, கலெக்டர் சாப்பிட்டார்.

உணவு தரமாக இருந்ததை தொடர்ந்து, பள்ளியில் உள்ள நுாலகம் மற்றும் கணிப்பொறி கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

மாணவர்களுடன், கலெக்டர் உணவருந்தும், 'வீடியோ' சமூக வலைதளங்களில், வேகமாக பரவி, பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Friday 22 June 2018





காலியாக உள்ள பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

திருப்பூர், முதலிபாளையம், ஹவுசிங் யூனிட் பகுதியில் புதிய துவக்கப்பள்ளி திறப்பு விழா நேற்று நடந்தது.

 பள்ளியை திறந்து வைத்து, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

திருப்பூரில் பள்ளி இல்லாத இடத்தில், துவங்கியுள்ள அரசு பள்ளிக்கு, 98 பேர் வந்துள்ளனர். இது, கல்வித்துறையின் மீது, மக்கள் வைத்துஉள்ள நம்பிக்கையை காட்டுகிறது.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அடுத்த ஆண்டு, அரசு பள்ளிகளின் சீருடைகள் மாற்றி அமைக்கப்படும்.தற்போது, ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது.

அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாடத்திட்டம் அமலாகிய பின், பிளஸ் 2 முடித்து, வெளியே வருவோருக்கு, வேலை கிடைக்கும் நிலை உருவாக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

பின், நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், ''பள்ளிகளுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்த, நடப்பாண்டு, 1,800 கோடி ஒதுக்க முடிவெடுக்கப்பட்டுஉள்ளது.

''கட்டடம் இல்லாத பள்ளிகளுக்கு, தேவையான புதிய கட்டடங்கள், நபார்டு திட்டத்தின் கீழ் ஜூலை இறுதிக்குள் கட்டப்படும். காலியாக உள்ள பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என்றார்.

Monday 18 June 2018

CTET தேர்வை தமிழில் நடத்த ஆணை!

CTET தேர்வைத் தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளில் நடத்த சிபிஎஸ்இ-க்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 4 மாதத்தில் தேர்வு நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து 3 மொழிகளில் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டது. 3 மொழிகளில் தமிழ் இல்லாததால் பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, தமிழிலும் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

Sunday 17 June 2018

சிறப்பாசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோர் பட்டியல்: விரைவில் வெளியீடு:TRB





சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் நடந்த எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்று  சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி ேபான்ற சிறப்பு பாடங்களை கற்றுக் கொடுக்க சிறப்பாசிரியர்கள் உள்ளனர்.

இவர்கள் கடந்த ஆண்டு  வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் பள்ளிகளில் நியமிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் முதல்முறையாக மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 1,325 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு  ஆசிரியர் தேர்வாணையம் கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம்தேதி எழுத்துத்தேர்வை நடத்தியது. இத்தேர்வை 35,781 பேர் எழுதினர்.

 உத்தேச விடைகள்  அக்டோபர் 10ம் தேதி வெளியான நிலையில் தேர்வு முடிவுகள் நவம்பரில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், பல்வேறு காரணங்களால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

 சிறப்பாசிரியர் எழுத்துத்தேர்வு முடிவுகளை வெளியிட்டு  தங்களுக்கான வேலைவாய்ப்பை வழங்க அரசிடம் வேலையில்லா சிறப்பாசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 14ம்தேதி தேர்வுமுடிவுகள் வெளியானது.

இதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்களின் பட்டியலை விரைவில்  வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மேற்கொண்டுள்ளதாகவும், ஒரு பணியிடத்துக்கு 2 பேர் என்ற வீதத்தில்  பட்டியல் வெளியாகும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

POPULAR POSTS