மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Wednesday 16 May 2018

தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த தினேஷ், பிளஸ் டூ தேர்வில் எடுத்த மதிப்பெண்!



தந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால் மனமுடைந்து நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் டூ மாணவன் தினேஷ் எடுத்துள்ள மதிப்பெண்ணைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. கூலித் தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். அவரது மகன் தினேஷ் நல்லசிவன், நாமக்கல் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதி முடித்துவிட்டு, நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்தார்.


தந்தையின் குடிப்பழக்கத்தை திருத்த முடியாத சோகத்தில் இருந்த அவர், கடந்த 2-ம் தேதி நெல்லை வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச் சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


தற்கொலை செய்து கொண்ட தினேஷ், தற்கொலைக்கு முன் தனது தந்தைக்கு மனமுடைந்த நிலையில் எழுதிய கடிதத்தில், ``அப்பா.. நான் இறந்த பிறகாவது நீ குடிக்காமல் இரு. நான் இறந்த பிறகு எந்தக் காரியமும் செய்யக் கூடாது.

இதன் பிறகாவது குடிக்காமல் இருந்தால்தான் எனது ஆன்மா சாந்தியடையும். நான் இறந்த பிறகாவது நாட்டின் பிரதமர், முதலமைச்சர் ஆகியோர் மதுபானக்கடைகளை அடைக்கிறார்களா என்று  பார்ப்போம் இல்லாவிட்டால் ஆவியாக வந்து மதுபானக் கடைகளை ஒழிப்பேன்’’ என்று எழுதப்பட்டிருந்தது.


இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தினேஷ் மரணம், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக இளைஞர்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், மாணவன் தினேஷ் நல்லசிவன் எடுத்துள்ள மதிப்பெண் விவரம் தெரியவந்துள்ளது.

அவர் 1024 மார்க் எடுத்துள்ளார். அவர் தமிழ்ப் பாடத்தில் 194 மதிப்பெண் எடுத்துள்ளார். ஆங்கிலத்தில் 148 மதிப்பெண்ணும் இயற்பியலில் 186 மதிப்பெண்ணும் எடுத்துள்ளார். வேதியலில் 173, உயிரியலில் 129 மதிப்பெண், கணிதத்தில் 194 மதிப்பெண் எடுத்துள்ளார்.

தந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால் மனமுடைந்து நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் டூ மாணவன் தினேஷ் எடுத்துள்ள மதிப்பெண்ணைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. கூலித் தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்.

No comments:

Post a Comment

POPULAR POSTS