மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday 5 May 2018

NEET SAD NEWS:நீட் தேர்வு எழுத மகனை எர்ணாகுளம் அழைத்துச்சென்ற தந்தை மரணம்! தந்தை இறந்தது தெரியாமல் மகன் நீட் தேர்வு எழுதி வருகிறார்!!



நீட் தேர்வு எழுத மகனை எர்ணாகுளம் அழைத்துச்சென்ற தந்தை  மாரடைப்பால் மரணம்..

  தந்தை இறந்தது தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுதி வருகிறார்

"கிருஷ்ணசாமியின் சொந்த ஊர் திருத்துறைப்பூண்டி"

FLASH NEWS:நீட் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது

சிபிஎஸ்இ தென்மண்டல இயக்குநர் விளக்கம்!


சேலம் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த மாணவி ஜீவிதாவிற்கு நீட் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது குறித்து சிபிஎஸ்இ தென்மண்டல இயக்குநர் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். கொண்டலாம்பட்டிக்கு மையத்திற்கு கொண்டுவந்த மாணவியின் ஹால் டிக்கெட் ஒரிஜினல் இல்லை. ஹால்டிக்கெட்டில் தேர்வு மையத்தின் பெயர் குறிப்பிடவில்லை என்றும் அவர் தெரவித்தார்.

தமிழகத்திற்கு மத்திய அரசு 1427.37 கோடி நிதி




Friday 4 May 2018

புதிய பாடத்திட்டத்தை கற்றுக் கொடுக்க சிறப்பு ஆசிரியர்கள் தேவை- அரசு விவரம் சேகரிப்பு



.புதிய பாடத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான பாட நூல்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 4) வெளியிடுவார்.

இந்தப் பாடத்திட்டங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பயிற்சிகள் வரும் ஜூன் 1 முதல்ஜூன் 15 வரை நடைபெறும்.தமிழகப் பள்ளிகளில் மாணவர்- ஆசிரியர் விகிதம் குறித்து கணக்கிட்டு வருகிறோம். இதையடுத்து எந்தெந்த மாவட்டங்களில் ஆசிரியர்கள் குறைவாக உள்ளனர் என கணக்கெடுத்து அதன் அடிப்படையில் அரசுப் பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோன்று சிறப்பு ஆசிரியர்களுக்கான தேவை குறித்த விவரங்களை அரசு சேகரித்து வருகிறது. அடுத்த 15 நாள்களுக்குள் இது தொடர்பான பட்டியல் தயார் செய்யப்பட்டு ஜூன் மாதத்தில் முடிவெடுக்கப்படும் என்றார்

புதிய பாடத்திட்டம் அறிமுகம்: முதலமைச்சர்!!



சென்னை, மே 4:1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட அதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பெற்று கொண்டார்.
1 முதல் 12-ம் வகுப்புவரை 14 ஆண்டுகளாக பாடத்திட்டங்கள் மாற்றப்படாமல் இருந்தது. ஆகவே பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இதை தொடர்ந்து பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வந்தது. மேலும் மத்திய அரசு சார்பில் தற்போது நுழைவு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
நீட் உட்பட மத்திய அரசு கொண்டு வரும் எந்தவித நுழைவு தேர்வாக இருந்தாலும் அதனை சமாளிக்க மாணவர்களை தயார் படுத்தும் பொருட்டு பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் 28 பேர் அடங்கிய உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் புதிய பாடத்திட்டங்களில் ஆலோசனை வழங்குவதற்கு ஏதுவாக சென்னை கலைவாணர் அரங்கில் 3 நாட்கள் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக, கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பாடத்திட்டங்களில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். இந்த ஆலோசனைகளை பெற்று புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணியில் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு தீவிரமாக ஈடுபட்டது.
இதை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையறுக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்திட்ட அறிக்கை வெளியிடப்பட்டு அதில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ள கருத்துரு கேட்கப்பட்டிருந்தது. அந்த கருத்துருவின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்து சிபிஎஸ்இ புத்தகங்களுக்கு இணையாக தற்போது 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் மாணவர்கள் எளிதில் கிழிக்க முடியாத அளவில் லேமினேஷன் செய்யப்பட்டு பைண்டிங் செய்யப்பட்டுள்ளது. மேலும் பார்கோட் ஆகியவைகளும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
உயர்தர, நவீன முறையில் இந்த புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பாடத்திட்டங்களை சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, அதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பெற்று கொண்டார்.
தற்போது முதற்கட்டமாக1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாடபுத்தகங்கள் வெளியிடப்பட் டுள்ளது. அடுத்தமாக 2,3,4,5,7,8,12 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டம் தயாரிக்கும் பணியில் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்த ஆண்டு இந்த வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் என தெரிகிறது. இதையொட்டி தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த புதிய பாடத்திட்டங்கள் மாணவர்கள் அறிவுத்திறனை வளர்க்க ஏதுவாகவும் தகவல் தொழில்நுட்பங்களை பயன் படுத்தும் வாய்ப்புகளை அளிப்பதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சிறந்த எதிர்கா லத்தை இது அமைத்து தரும் என்பது உறுதி என்று கூறப்பட்டுள்ளது.

PRESS RELEASE-Honble Chief Minister released the new books for all subjects of the classes 1,6,9, and 11 of the Tamil Nadu State Board..!

➠❄கணினி கல்வியின் புதுமை❄➠


Thursday 3 May 2018

புதிய பாடத்திட்டமா? குழப்பத்தில் தேர்வர்கள்!


BREAKING NEWS:நீட் தேர்வு: தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு



நீட் தேர்வை தமிழக மாணவர்கள் தங்களுக்குரிய வெளி மாநில மையங்களில்தான் எழுத வேண்டும்

தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

Wednesday 2 May 2018

கணினி ஆசிரியர்கள் தேர்வு இந்த ஆண்டு இல்லை TRB திட்டவட்டம் -முதல்வர் தனிப்பிரிவு பதில்!

Thank:THAJUDEEN.


திரு.தாஜ்தீன்,
மாநில அமைப்பாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம். பதிவு எண்:655/2014.

கணினி ஆசிரியர்கள் TRB பற்றிய CM CELL Reply!!

"நமது நிலையை அனைஅனைவருக்கு பகிர்வோம்"


 திரு.தாஜ்தீன்,

மாநில அமைப்பாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம். பதிவு எண்:655/2014.

PGTRB Exam எப்போது? CM CELL Reply!


Tuesday 1 May 2018

9பள்ளிகளை மூட உத்தரவு-அதிர்ச்சியில் பெற்றோர்களும் ,மாணவர்களும்..!

9 பள்ளிகளை மூட ரெயில்வே நிர்வாகம் உத்தரவு மாணவர்கள்-பெற்றோர் ..


தெற்கு ரெயில்வே சார்பில் பெரம்பூர், ஜோலார்ப்பேட்டை, அரக்கோணம், மதுரை, திருச்சி பொன்மலை, விழுப்புரம், போத்தனூர், ஈரோடு, மற்றும் பாலக்காடு (கேரளா) ஆகிய 9 இடங்களில் ரெயில்வே பள்ளிகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இதில் சென்னையில் உள்ள பெரம்பூர், மதுரை, திருச்சி பொன்மலை மற்றும் பாலக்காட்டில் உள்ள ரெயில்வே பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகும்.

குறைந்த கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் இந்த பள்ளிகளில் ரெயில்வே ஊழியர்களின் குழந்தைகள் மற்றும் ரெயில்வே ஊழியர் அல்லாதவர்களின் குழந்தைகள் என 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மதுரை மற்றும் பெரம்பூர் ரெயில்வே பள்ளிகளில் மட்டும் தலா ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர் அல்லாத ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் உள்ள 9 ரெயில்வே பள்ளிகளையும் மூடுவதற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இருக்கிறது. நடப்பு கல்வி ஆண்டில் எந்த மாணவர் சேர்க்கையும் கூடாது என்று ரெயில்வே பள்ளி முதல்வர்களுக்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும் ரெயில்வே பள்ளிகளில் தற்போது படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளுமாறு, பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்கள் வாயிலாக மாணவர்களின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதேபோல ரெயில்வே பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ரெயில்வேயின் பிற பணிகளில் மறுபணியமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவு கடந்த 30-ந்தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.

ரெயில்வே பள்ளிகள் மூடப்படும் உத்தரவு மத்திய அரசின் நிதி ஆயோக் குழுவின் விவேக் தேப்ராய் பரிந்துரையின்படி எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ‘திடீர்’ முடிவு காரணமாக ரெயில்வே பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

குறிப்பாக பத்தாம் வகுப்புக்கு செல்ல இருக்கும் மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். புதிய பள்ளியில் எந்த அணுகுமுறையுடன் கல்வியை தொடருவது? பிற பள்ளிகளில் இடம் கிடைக்குமா? என்ற கலக்கம் அடைந்து உள்ளனர்.

ரெயில்வே பள்ளிகளை மூடும் இந்த நடைமுறைக்கு அங்கீகரிக்கப்பட்ட ரெயில்வே தொழிற்சங்கமான சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து அத்தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் என்.கண்ணையா கூறியதாவது.

2004-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரெயில்வே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்தது. தவிர ரெயில்வே ஊழியர் அல்லாதவர்களின் குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களாலும் ரெயில்வே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.

இதனால் ரெயில்வே பள்ளிகளை ஏன் நடத்தவேண்டும்? என்று கேள்வி எழுந்துவந்த சூழ்நிலையில், விவேக் தேப்ராயின் பரிந்துரையை காரணம் காட்டி ரெயில்வே பள்ளிகளுக்கு முழுக்கு போட ரெயில்வே நிர்வாகம் முயற்சி எடுத்து இருக்கிறது.

விவேக் தேப்ராய் பரிந்துரைகளில் ரெயில்வே பள்ளிகள், ரெயில்வே ஆஸ்பத்திரிகள் போன்றவற்றை ஏன் நடத்தவேண்டும்? என்று கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. ஆக ரெயில்வே துறையை தனியார் மயமாக்கவே இதுபோன்ற நடவடிக்கைகளில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இது மிகவும் தவறான முடிவு ஆகும்.

ஏற்கனவே ரெயில்வே பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும், சி.பி.எஸ்.இ. பாடமுறையை அனைத்து ரெயில்வே பள்ளிகளிலும் அமல்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே சூழ்நிலைகளையும், மாணவர்-பெற்றோர் நலனையும் முன்னிறுத்தி ரெயில்வே பள்ளிகள் மூடும் முடிவை கைவிடவேண்டும். ரெயில்வே பள்ளிகள் தொடர்ந்து செயல்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ரெயில்வே நிர்வாகத்தின் ஒருமித்த கொள்கை முடிவுகள் எனும் அடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கு ரெயில்வே மண்டலங்களில் உள்ள ரெயில்வே பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.

தற்போது தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரெயில்வே பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதின் மூலம் ரெயில்வே பள்ளிகள் மூடப்படுவது உறுதியாகி உள்ளது

இந்த RO தண்ணீரை இனி குடிக்காதீங்க!!!

 


நம் வீடுகளில் ஆர்.ஓ.சிஸ்டம் எனும்
தண்ணீரைச் சுத்தம் செய்வதற்கு
சாதனங்களை வைத்திருக்கிறோம்.

இந்த R.O சாதனத்தில் மூன்று
மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை
வெளியில் எடுத்துப் பார்த்தால்
வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்.

அதை உதறி தட்டினால் அதிலிருந்து
மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும்.

நாம் என்ன நினைப்போம்...அப்பப்பா நல்ல வேளை, இந்த
வாட்டர் பில்டர் இருந்ததால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று.

ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த தாதுப் பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள மனிதர்களின் உடம்பில் செல்லவில்லையே...நிச்சயமாக
அவர்கள் நோயோடு இருப்பார்கள் என்று நினைப்பேன்.

கண்ணுக்கே தெரியாத அந்தத் தூசுகளை பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கி அதிலுள்ள தாதுக்களை பிரித்து
எடுத்துக் கீழே கொட்டுகிறோமே!.


அது தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத்
தேவைப்படும் அத்தியாவசிய
தாதுப் பொருட்கள் ஆகும்.

நீங்கள் தண்ணீரைப் பார்த்தால் அதில் அந்தத் தூசுகள் உங்கள் கண்ணுக்கே தெரியாது.

ஆர்.ஓ.சாதனத்தை பயன் படுத்தினால் மட்டுமே அந்தத்
தூசுகள் கண்ணுக்குத் தெரியும்.

தண்ணீரில் கண்ணுக்கே தெரியாத
தூசுகளைப் பார்த்து பயப்படுகிறோமே...ஆனால்
கொத்து பரோட்டா, சிக்கன் 65, ஆனியன் ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச்
சாப்பிடும் நாம் கண்ணுக்கே தெரியாத அந்த சின்னச் சின்ன தாதுப் பொருட்களை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு ஆர்.ஓ வில் ஊற்றி வடிக்கச் செய்ய வேண்டும்.

யாருடைய வீட்டில் தண்ணீரை சுத்தம்
செய்வதற்கு R.O மெஷின் இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் இரத்தத்தில் உங்களுக்குத் தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில் சென்று இந்த தூசுகளை மருந்து என்ற பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே அசைக்க இயலாத உண்மை.

தண்ணீரில் இருக்கும் அந்தத்
தாதுப் பொருட்களை R.O செய்யாமல் குடித்தால் நாம் மருந்து மாத்திரை என்ற தூசுக்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

எனவே தண்ணீரை ஆர்.ஓ (R.O) செய்யக் கூடாது.

தண்ணீரை R.O செய்து குடித்தால்
மனிதனுக்கு நோய் வரும்.வாழ்நாள் முழுவதுமே தீராது.

சரி...

மினரல் பாட்டில் வாட்டர் -ஐ
பயன்படுத்தலாமா?

மினரல் வாட்டர் பயன்படுத்தவே கூடாது.

மினரல் வாட்டர் கம்பெனிகளில் Anti Scale Dosing Machine என்று ஒரு மெஷின் இருக்கும்.

இந்த மெஷினின் வேலை தண்ணீரில் உள்ள அனைத்து தாதுப் பொருட்களையும் எடுத்து விட்டு சப்பைத் தண்ணீராக மாற்றுகிறது.

எனவே நல்ல தண்ணீரை
ஒன்றுமில்லாத சப்பைத் தண்ணீராக
மாற்றுவதற்கு நாம் பல வேலைகளை
செய்து அதை பாட்டிலில் அடைத்துப்
பணம் கொடுத்து வாங்கி
குடிக்கிறோம்.

எனவே தயவு செய்து பாட்டிலில்
அடைக்கப் பட்ட மினரல் வாட்டர்
என்று அழைக்கப்படும் தண்ணீரில் உள்ள இயற்கையான சத்துகளே இல்லாத Packaged Drinking Water ஐ யாருமே பயன்படுத்தக் கூடாது.

குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும் முறைதான் என்ன?...

தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது.

ஆர்.ஓ R.O செய்யக் கூடாது.

பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது.

வேறு எப்படித்தான் தண்ணீரை
சுத்தப் படுத்துவது என்று கேட்டால்,
சாதாரணமாக குழாயில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம்.

அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச் சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே.

யார் ஒருவர் குழாய் தண்ணீரை
நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க் கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக
இருக்கும். எனவே தயவு செய்து குழாயில் வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடுங்கள்.

குழாயில் வரும் தண்ணீரை எப்படிக்
குடிப்பது?...

தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது.தாதுப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது.

சாக்கடை நீர் கலந்து வருகிறது
என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றும்.

எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என TV, பேப்பர் மூலமாகத் தெரிந்துக் கொண்டோம் என்று பலர் கூறுகிறீர்கள்.

உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் தண்ணீர்
கெட்டு விட்டதாக அந்தந்த ஊரில் உள்ள தண்ணீரைப் பாட்டிலில்
மூலமாக வியாபாரம் செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து
பிரச்சாரம் செய்கிறது.

அப்பொழுதுதானே நீங்கள் குழாய் தண்ணீரைக் குடிக்காமல் பாட்டிலில்
தண்ணீரை வாங்கிக் குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள்
பிரச்சாரம் செய்கிறார்கள்.

மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள் தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும் R.O பிளான்ட் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரைப் பருகுவதால் உலக மக்களுக்கு நோய் வருகிறது என்பதை புரிந்து கொண்டு நல்ல விஷயத்தைப் பிரச்சாரம் செய்வது போல கெட்ட விஷயத்தை பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு இருக்க வைத்து, அதன் மூலமாக மருந்து மாத்திரை வியாபாரம் செய்வதற்குத் திட்டமிட்டு உள்ளார்கள்.

உண்மையிலேயே குழாய் தண்ணீர்
குடித்தால் ஒன்றும் ஆகாது.

இருந்தாலும் சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது,

தண்ணீர் கெட்டிருக்கிறது என்று
ஒரு வேளை நாங்கள் நினைத்தால் உங்களது மன திருப்திக்காக சில காரியங்களை செய்யலாம். நான் கூறுவது போல உங்கள்
தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில்
இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை
சுத்திகரிக்கும் கருவி.

மண் பானையில் குடி தண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட
பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் இயற்கையாகவே சக்தியை அளிக்கிறது.

எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த Water Filter மண் பானை ஆகும்.

நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து
உங்கள் வீட்டில் ஆர்.ஓ எனும் குப்பை மிஷினை வாங்கி வைத்து இருக்கிறீர்களே நாற்பதாயிரம்
ரூபாய்க்கு மண் பானை வாங்கினால்
எவ்வளவு பானை கிடைக்கும். தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூட தீராது.

ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான
இயற்கையான ஒரு Water Filter வாட்டர் பில்டரை யாரும் பயன்படுத்துவதே இல்லை.

எனவே தயவு செய்து தண்ணீரை மண் பானையில் வைத்து குடித்தால் கெட்ட பொருள்களும்
அழியும். மண் சக்தியும் கிடைக்கும்,
பிராண சக்தி அதிகரிக்கும்.

வெள்ளை நிற பருத்தித் துணியால் தண்ணீரை வடி கட்டலாம்.

வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால் தண்ணீரை வடி கட்டினால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து
நோயை உண்டு செய்யும் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது என்ற உண்மை, அறிவியல்
பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் அம்மை போன்ற நோய்கள் வரும் பொழுது நமது முன்னோர்கள் எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல்
மருத்துவமனைக்குச் செல்லாமல்
வெள்ளைத் துணியில் வடி கட்டிய நீரில் குளிப்பாட்டி குணப் படுத்தி இருக்கிறார்கள்.

எனவே தேவைப் பட்டால் இந்த
முறையில் தண்ணீரைச் சுத்தப் படுத்தலாம்.

செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலமாகவும் தண்ணீரை சுத்தப் படுத்தலாம்

செம்பு என்ற உலோக பாத்திரத்தின்
மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான
சக்தி கிடைக்கிறது.

அதில் உள்ள கெட்டப்
பொருள் அழிக்கப் படுகிறது. தாமிரத்திற்கு அந்த சக்தி இயற்கையிலேயே உள்ளது.

எனவே செம்பு என்ற தாமிர உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க
பயன் படுத்தலாம். அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை
சுத்தப் படுத்திக் கொண்டே இருக்கும்.

பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக்
கொண்டு இருப்பார்கள் என்பதை அறவீர்களா?.

அவர்களிடம் சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால்
அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக போவதைப் போல நாம் படங்களில் பார்த்திருப்போம்.

செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப் படுத்த முடியும்.

எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில் மண்பானை, வெள்ளை பருத்தித் துணி,செம்பு என்ற தாமிர உலோகம் மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை
சுத்தப்படுத்துவதற்கு பல உத்திகள்
இருக்கும் பொழுது நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு R.O. சிஸ்டத்தை உபயோகிக்க வேண்டும்?.

இதுவும் இல்லாமல் பூமியில் உள்ள மண்ணில் உள்ள அடுக்குக்கு எத்தகைய தண்ணீரையும் சுத்தப்படுத்தும் சக்தி உண்டு.

அதே போல் மண்ணை சுட்டு கேன்டில் முறையில் எவர்சில்வர் வாட்டர் பில்டர் பாத்திரக் கடைகளில் கிடைக்கும்.அதுவும் இயற்கையான எளிதான முறைதான்.அதில் மூன்று கேன்டில் உள்ள வாட்டர் பில்டர் அனைத்து குடும்பத்துக்கும் உகந்தது.

வடிந்த தண்ணீரை மண் பானையில் ஊற்றி மகிழ்வுடன் அருந்துங்கள்.

என் அருமை மக்களே!...
நோய் தீர்க்கும் குடி தண்ணீரை உதாசீனம் செய்யாதீர்கள்.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்க்காதே எனும் முன்னோர் வாக்கை நம்புங்கள்.

ஆசிரியர்கள் பீதி: அரசுப்பள்ளி குறைந்து வரும் மாணவர் சேர்க்கையால்..!




சேலம்: அதிகரித்து வரும் உபரி ஆசிரியர் பணியிடங்கள், பள்ளிகளை மூட நடவடிக்கை உள்ளிட்டவைகளால், பீதியடைந்துள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்காண்டு, மாணவர் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருகிறது. இதனால், 8,000க்கும் மேற்பட்ட உபரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாகியுள்ளன. பற்றாக்குறை இல்லாததால், வேறு பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை பயன்படுத்துவதிலும், சிக்கல் நிலவி வருகிறது. ஆசிரியர்கள் ஓய்வு பெறுவது, பதவி உயர்வு பெறுவது உள்ளிட்டவைகளால், காலியாகும் இடங்களுக்கு, உபரி ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் என்ற பெயரில், கட்டாய இடமாற்றம் வழங்கப்படுகிறது. இந்தாண்டு, நகர்ப்பகுதிகளில், 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளும், கிராமப்பகுதிகளில், 30 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தகவல் பரவி வருகிறது. இதுநாள் வரை, மாணவர் சேர்க்கையில், அலட்சியமாக இருந்த ஆசிரியர்கள், பீதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து, கல்வி அலுவலர்கள் கூறியதாவது: மாணவர்கள் எண்ணிக்கை குறையும் போது, அப்பள்ளி சீனியாரிட்டியில், கடைசி இடத்தில் உள்ளவர், வேறு பள்ளிக்கு மாற்றப்படுவது வழக்கம். இது இப்படியே குறைந்து, பல பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாக மாறியுள்ளன. தற்போது அவையும் மூடப்பட உள்ளதாக, தகவல் பரவி வருவதால், அப்பள்ளி ஆசிரியர்கள், தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மாவட்டத்துக்குள் உபரி பணியிடங்கள் இல்லாத நிலையில், வேறு மாவட்டத்துக்கு மாறுதல் செய்தால், வீண் அலைச்சல் ஏற்படும். மேலும், மீண்டும் பணிமாறுதல் பெற்று வருவதற்குள், பல லட்ச ரூபாய் வரை செலவழிக்க வேண்டியுள்ளது. இதற்கு பதில், மாணவர் எண்ணிக்கையை அதிகரித்தாலே, ஆசிரியர் பணியிடத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். இதனால், பல ஆசிரியர்கள், தங்களது கைக்காசை போட்டு, அரசு பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் போட்டிகள் நடத்தி, மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Monday 30 April 2018

ஆசிரியர் பணியிடங்களை வரும் கல்வி ஆண்டுக்குள் நிரப்ப வேண்டும் -சமக தலைவர் சரத்குமார் அறிக்கை!


➠❄கணினி கல்வியின் புதுமை❄➠

ஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல் திறனை ஊக்குவிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டம்..!



"வியர்வைத் துளிகளுக்கான விலையைக் கேளுங்கள்"-மே தின வாழ்த்துக்கள்

"தொழிலாளர் தின வாழ்த்துக்கள்"

நாம் ஓய்வெடுக்க ஒதுங்கினால்
ஓட்டத்தை நிறுத்திக் கொள்ளும்
இந்த உலகம்
#savecsteacherslife 


அனைவருக்கும் தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் "தொழிலாளர் தின வாழ்த்துக்கள்"



திரு. வெ.குமரேசன்,
9626545446,
மாநிலப் பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம். பதிவு எண்:655/2014.


கணினி மயமாக்கப்படும் 9,10,11,12-ம் வகுப்பு பாடத் திட்டம் -கல்வி அமைச்சர்



1-முதல் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் வெளியீடு!


1-முதல் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் வெளியீடு!

மே 2-ம் தேதி 1,6,9,11ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!  

1,6,9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது......!
தமிழக அரசுப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் 1,6,9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி நாளை மறுநாள் வெளியிடுகிறார்
அதன்படி, 9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்துப் பாடத் திட்டங்களும் கணினி மயமாக்கப்படும். 
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களை மிஞ்சுகின்ற அளவிற்கு புதிய பாடத்திட்டம் அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

Flash News: 1,6,9,11 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது

Flash News:                                        1,6,9,11 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது*

புதிய பாடத்திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி நாளை மறுநாள் வெளியிடுகிறார்

- அமைச்சர் செங்கோட்டையன்
   

புதிய பாட புத்தகத்தில் வேலை வாய்ப்பு தகவல்



Sunday 29 April 2018

6,000 ஆசிரியர் பணியிடம் குறைப்பு : சிக்கலில் அரசு நடுநிலைப்பள்ளிகள்


ஆறாயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை குறைப்பதால் அரசு நடுநிலைப் பள்ளிகளை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது,'' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர் பேட்ரிக் ரெய்மண்ட் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
தற்போது 6,7,8 ம் வகுப்புகளில் 100 மாணவர்களுக்கு ஒரு தலைமை ஆசிரியர், மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர்.உபரி என கணக்கிட்டு ஒரு ஆசிரியரை குறைப்பதால், மூன்று ஆசிரியர்கள் சேர்ந்து ஐந்து பாடங்களை நடத்துவது சாத்தியம் ஆகாது. ஏற்கனவே ஆங்கிலம், கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் பாடத்துடன் தமிழ், சமூக அறிவியல் பாடத்தை கூடுதலாக எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் உபரி என கூறி மேலும் ஒரு பாட ஆசிரியர் குறையும் போது மாணவர்கள்மேலும் பாதிக்கப்படுவார்கள்.உபரி என கணக்கிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 200 பேர், கோவையில் 173 என ஆறாயிரம் ஆசிரியர் பணியிடம் குறைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்

தமிழ் நாட்டில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகள் எத்தனை என்பது பற்றிய தகவல்கள்


பதற்றமடைந்திருக்கும் தமிழகக் கல்விச் சூழல்.


➠❄கணினி கல்வியின் புதுமை❄➠

அவரது பதினாறு வயது மகன் இந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதி முடித்திருக்கிறான். அரசுப் பள்ளி மாணவன். இப்போது கோடை விடுமுறை தொடங்கியிருக்கிறது, கடந்த மூன்று நான்கு வாரங்களாக இரண்டு வாரங்களாக நீடித்துவந்த பதற்றத்திலிருந்து விடுபட்டிருக்கும் அந்த மாணவனுக்கு இப்போது கிரிக்கெட் விளையாட நேரம் கிடைத்திருக்கிறது, நண்பர்களைச் சந்திப்பதற்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கும் நீடித்துவந்த தடை நீங்கியிருக்கிறது, தேநீர்க் கடை வைத்திருப்பவர்களான அவனது பெற்றோர் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக அவற்றுக்கெல்லாம் தடைவிதித்திருந்தார்கள். கேபிள் இணைப்பைத் துண்டித்திருந்தார்கள், தாயோ, தந்தையோ யாராவது ஒருவர் பிழைப்பைக் கெடுத்துக்கொண்டு அவனைத் தம் கண்காணிப்பில் வைத்திருந்தார்கள். வரவிருக்கும் தேர்வு முடிவுதான் அந்தக் குடும்பத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். அவன் தங்களைப் போல் டீக்கடை வைத்துப் பிழைக்காமல் நல்ல விதமாக வாழ வேண்டும், அவனை மருத்துவராகவோ பொறியாளராகவோ ஆக்கிப் பார்க்க வேண்டும் என்பது அவர்களது கனவு. இரண்டாண்டுகளுக்கு முன்பு அவர்களது மகன் எட்டாம் வகுப்பைக் கடந்தபோது தோன்றிய கனவு அது. அப்போதுதான் அவர்கள் தங்கள் மகனின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கியிருந்தார்கள்.

யோசிப்பதற்கு அவர்களிடம் அதிகம் ஒன்றுமில்லை. ஏறத்தாழப் பதினெட்டு வருடங்களுக்கு முன் பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்திருந்த அந்தத் தந்தை வாழ்வாதாரத்திற்காகத் தான் வசித்துவரும் அந்தச் சிறிய நகரத்தில் டீக்கடை ஒன்றைத் தொடங்கியபோது வாழ்க்கை அவ்வளவு சவாலானதாகத் தென்படவில்லை. எட்டாம் வகுப்புப் படித்த தன் உறவுக்காரப் பெண் ஒருத்தியை எளிய முறையில் கல்யாணம் செய்துகொள்ளவும் ஒரு படுக்கையறையும் சமையல்கட்டும் சிறு ஆசாரமும் கொண்ட ஓட்டு வீடு ஒன்றை வாடகைக்குப் பிடித்து அதில் குடியேறவும் இரண்டு குழந்தைகளைப் பெற்று வளர்க்கவும் அந்த தேநீர்க் கடை வருவாய் போதுமானதாக இருந்தது. குழந்தைகளின் எதிர்காலம் குறித்த பெரிய கவலைகள் எதுவும் அப்போது அவருக்கு உருவாகியிருக்கவில்லை. ஆனால் கடந்த பதினாந்தாண்டுகளில் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் உருவான தனியார் பள்ளிகள் கல்வி குறித்து ஏற்படுத்திய கற்பனைகளும் கனவுகளும் பேராசைகளும் பதற்றங்களும் அவரைப் பீடிக்கத் தொடங்கின.

தன் குழந்தைகளை ஒரு மருத்துவராகவோ பொறியாளராகவோ ஆக்கிப் பார்க்க வேண்டுமென்ற கனவு அவரைப் பீடிக்கத் தொடங்கியதும் அவர் கவலைகளில் மூழ்கத் தொடங்கினார். அரசுப் பள்ளிகள் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் அவரைப் பதற்றமடையச் செய்தன. கூடவே நீட் தேர்வு பற்றிய அச்சங்கள்.

இப்போது அவர் வேறுவிதமாக யோசிக்கத் தொடங்கியிருக்கிறார். தனது மகனைத் தனியார் பள்ளியொன்றில் சேர்ப்பதற்கான முயற்சிகளைப் பற்றி யோசிக்கிறார். பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுவிட்டால் தனியார் பள்ளிகளில் இடம் கிடைக்கும். கட்டணத்தைக் குறைத்துக்கொண்டுவிடுவார்கள். விடுதிக் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். விடுதிக் கட்டணம் ஐம்பதாயிரத்திலிருந்து எழுபத்தைந்தாயிரம் வரை, மற்ற செலவுகளைக் கணக்கிட்டால் ஏறத்தாழ ஒரு லட்சம். பனிரெண்டாம் வகுப்பு முடிப்பதற்கு இரண்டு லட்சம் வரை தேவைப்படும். வீட்டிலிருந்து பள்ளிக்கு வருவதாக இருந்தால் வேன், பஸ் கட்டணம் செலுத்த வேண்டும். கணக்குப் போட்டுப் பார்த்தால் எல்லாம் சரியாகவே இருக்கும். தேநீர்க் கடை நடத்தும் அவருக்கு அது பெரிய தொகை. அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வின் தேவைகளைக் குறைத்துக்கொள்ள நேரிடும்.

அதனால் என்ன, மகன் தரமான கல்வியைப் பெறுவதற்கு அந்தச் சுமையை ஏற்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால் இரண்டாண்டுகளுக்குப் பிறகு அவனால் நீட் தேர்வில் பங்கேற்று மருத்துவப்படிப்புக்குப் போக முடியாது. மருத்துவம், பொறியியல், மென்பொருள் சார்ந்த துறைகளில் வேலைக்குச் சேர வேண்டுமானால் பிள்ளைகளுக்கு ஆங்கில அறிவு அவசியம். தனியார் பள்ளிகள் வழியாகவே ஆங்கில அறிவைப் பெற முடியும். ஆங்கிலத்தில் படிக்க, பேச, எழுதத் தெரியாவிட்டால் வாழ்க்கை அவ்வளவுதான். சிபிஎஸ்சி பள்ளி என்றால் தரமான கல்விக்கு நூறு சதவீத உத்தரவாதமுண்டு.

கற்பிதங்களும் கனவுகளும்

இதுபோன்ற கற்பனைகள் கீழ் மத்திய தர வர்க்கக் குடும்பங்களில் அவற்றின் உயிராகக் குடியேறியிருக்கின்றன. எந்த ஆதாரமுமில்லாமல் பரப்பப்பட்டிருக்கும் இந்தக் கற்பனைகளுக்குத் தமிழகத்தின் கீழ் மத்தியத்தர வர்க்கக் குடும்பங்களில் பல தங்கள் வாழ்வை ஒப்புக்கொடுத்திருக்கின்றன. எல்கேஜி படிக்கத் தொடங்கும்போதே குழந்தைகளின் மீது இந்தக் கனவு திணிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட சிறைக்கூடங்களாகிவிட்ட பள்ளிகளிலிருந்து வீடு திரும்பும்போது பெற்றோர்கள் பிரம்புகளுடன் காத்திருக்கிறார்கள். கொஞ்சம் காபி, ஹார்லிக்ஸ், அல்லது ஜுஸ், பிஸ்கட் அல்லது ஏதாவதொரு கேக் சாப்பிட்டுவிட்டு அவர்கள் ஹோம் வொர்க்கைப் பார்க்க வேண்டும். தாய் அல்லது தந்தையின் மேற்பார்வையில் கண்கள் செருகும்வரை புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டிருக்க வேண்டும். விளையாடுவதற்கோ தாத்தா பாட்டிகளின் மடியில் உட்கார்ந்து கதை கேட்டுக்கொண்டு கிடக்கவோ இப்போது அனுமதியில்லை. பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு நீட் முதலான தகுதித் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக அவர்கள் தங்கள் விளையாட்டுக்களையும் பொழுதுபோக்குகளையும் குழந்தைமையையும் இழக்க வேண்டும்.

கல்வியில் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேல் நிலவிவரும் ஏற்றத்தாழ்வைக் கற்பனையான முறையில் கடந்து செல்வதற்கு முற்பட்டிருக்கும் மத்திய தர வர்க்க, கீழ் மத்திய தர வர்க்கக் குடும்பங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் மன அழுத்தம் குடும்ப அமைப்பையே சீர்குலைக்கும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. குடும்பம் இப்போது பேராசைகளால் சூழப்பட்ட ஒன்றாக, சுயநலத்தால் பீடிக்கப்பட்ட அமைப்பாக மாறிக்கொண்டிருக்கிறது.

இந்தியக் குழந்தைகளைப் போல பதற்றத்திற்கான குழந்தைகள் உலகில் வேறு எங்குமே இல்லை என இதுபற்றி கல்வியாளர் வசந்திதேவி சொன்னது நினைவுக்கு வருகிறது. கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்னும் கல்வியாளர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை. கல்வியாளர்களின் வற்புறுத்தலை ஏற்று சமச்சீர் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும்போதிலும் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் தந்திரமான முறையில் ஏற்றத்தாழ்வைத் திணித்துக்கொண்டிருக்கிறன. பல தனியார் பள்ளிகள் தமக்கான நிழல் பாடத்திட்டங்களை உருவாக்கிக்கொண்டுள்ளன. கல்வி உரிமைச் சட்டம் பெயரளவுக்குக்கூட நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. இருபதாண்டுகளுக்கு முன் நடைமுறைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் தன் நோக்கங்களை நிறைவேற்ற முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

அரசு, மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் இயங்கும் தொடக்கக் கல்வி முறையில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் மாற்றங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் கல்வித்தரம் குறிப்பிட்டுச் சொல்லும்படி மேம்படவில்லை. இதன் காரணமாக அரசு, தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் மீதான மக்களின் நம்பிக்கை வேகமாகச் சரிந்துகொண்டிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் மாணவர் பற்றாக்குறையால் மூடப்படும் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இது விரைவிலேயே உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் இருப்புக்குச் சவாலாக உருவாகும்.

நீட் தந்த நிர்ப்பந்தம்

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு அரசு அவசரஅவசரமாக விழித்துக்கொண்டிருக்கிறது. பாடத்திட்டத்தை மாற்றுவதற்கும் கற்றல், கற்பித்தல் முறைகளை மேம்படுத்துவதற்கும் தமிழகக் கல்வித்துறை பல அதிரடி முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருக்கிறது. நீட் முதலான எல்லாவிதமான போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்வதற்கு மாணவர்களைத் தயார்படுத்துவதாகச் சொல்லிக்கொண்டு கல்வித்துறை எடுத்திருக்கும் சில முடிவுகள் மாணவர்களின் பதற்றத்தை அதிகரிக்கும் நடைமுறைகளாகவே மாறிக்கொண்டிருக்கின்றன.

பத்து, பன்னிரெண்ணடாம் வகுப்புத் தேர்வுகளைப் போலவே பதினொன்றாம் வகுப்புக்கான தேர்வுகளும் பொதுத்தேர்வுகளாக மாற்றப்பட்டிருப்பது ஒரு உதாரணம். இது உண்மையில் தனியார் பள்ளிகளின் தந்திரங்களுக்கு எதிரான நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. பல தனியார் பள்ளிகள் பதினொன்றாம் வகுப்புப் பாடங்களின் மீது தேவையான அக்கறை செலுத்தாமல் நேரடியாகப் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பாடங்களில் கவனத்தைக் குவித்துத் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்திக்காட்டுவததில் வெற்றி பெற்றுவந்தன. கல்வித் துறையின் தற்போதைய நடவடிக்கை அதற்குத் தடையாக இருக்கும். அதைவிட முக்கியமானது தேர்வு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.

இந்த ஆண்டு நடைபெற்ற 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில் பல பாடங்களின் கேள்வித்தாள்கள் கடினமானவையாக இருந்ததாகத் தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கேள்விகளைத் தவிர அவற்றில் இடம்பெற்றிராத கேள்விகள் பலவும் இடம் பெற்றிருந்தன. மாணவர்களின் பொது அறிவைச் சோதிக்கும் கேள்விகள் அதிகமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பெரும்பாலான கேள்விகள் பாடப்புத்தகங்களின் உள் பகுதிகளிலிருந்து கேட்கப்பட்டிருந்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

உண்மையில் இந்தக் குற்றச்சாட்டு மனப்பாடக் கல்வியின் மீதான குற்றச்சாட்டு. அது மாற்றப்பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பதற்றமடைந்திருக்கும் கல்வித் துறை ஒரே நாளில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறது. ஒன்பதாண்டுகளாக ஒரே விதமான மனப்பாடக் கல்விக்குப் பழக்கப்படுத்தப்பட்டு வந்த மாணவர்களை சிபிஎஸ்சிக்கு நிகரான கல்விமுறைக்கு மாற்ற முனைந்திருக்கும் கல்வித் துறையின் பேராசையின் விளைவே இது.

கல்வியாளர்கள் வலியுறுத்திவரும் பொதுப்பள்ளி முறை போன்ற கல்வியில் சமத்துவத்துவத்தை உருவாக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டுச் சில பத்தாண்டுகளாகவே கல்விக் கொள்ளையில் மூழ்கித் திளைத்திருக்கும் தனியார் பள்ளிகளுடன், அடைப்படையான கட்டமைப்பு வசதிகள்கூடப் பூர்த்திசெய்யப்படாத அரசுப் பள்ளி மாணவர்களை சமமற்ற போட்டி ஒன்றுக்குள் திணிக்கும் முயற்சியாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் தமிழகக் கல்வித் துறை தனியார் கல்வி நிறுவனங்களின் அடையாளங்களை அரசுப் பள்ளி மாணவர்களின் மீது திணிக்க முயன்றுவருகிறது.

இந்த முயற்சி மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிப்பதோடு தனியார் பள்ளிகளின் பெருக்கத்திற்கே வழி வகுக்கும்.

கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் இதுபற்றிய விவாதங்களை முன்னெடுப்பதும் அரசின் கல்விக் கொள்கையைக் கேள்விக்குள்ளாக்குவதும் தனியார் பள்ளிகளின் கல்விச் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி யோசிப்பதும் உடனடித் தேவையாகியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

தெலங்கானா, தமிழக மாணவர்கள் சாதனை விஐடி பல்கலை பி.டெக் நுழைவுத்தேர்வு முடிவுகள்..


வி.ஐ.டி.  பி.டெக் நுழைவுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டதில் டெல்லி, தெலங்கானா, ஒடிசா, தமிழக மாணவர்கள் முதல் 10 இடங்களை பிடித்து சாதித்துள்ளனர். வி.ஐ.டி. பல்கலை  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வி.ஐ.டி. வேலூர், சென்னை, போபால் மற்றும் அமராவதி வளாகங்களில் இந்த ஆண்டு (2018) பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு கடந்த 4ம் தேதி முதல் 16ம் தேதி வரை துபாய், குவைத், மஸ்கட், கத்தார் ஆகிய வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள 124 முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்ட 175 மையங்களில் கணினி முறையில் நாள்தோறும் 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் 2 லட்சத்து 12 ஆயிரம் ேபர் தேர்வு எழுதினர். நுழைவுத்தேர்வு முடிவுகள் www.vit.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 

இதில் டெல்லியை சேர்ந்த கலாஸ் குப்தா முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். தெலங்கானாவை சேர்ந்த சரிகொண்ட அனந்த ராமாராவ் 2வது இடத்தையும், ஒடிசாவை சேர்ந்த அனிருத் பானிகிரஹி 3வது இடத்தையும் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்.விஷால் 9ம் இடத்தை பிடித்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்த சாய் அனிருத், ஜார்கண்ட்டை சேர்ந்த சுபம்கர், மேற்கு வங்கத்தை சேர்ந்த சுபம் அகர்வால், சண்டிகரை சேர்ந்த பிரனவ் கோயல், டெல்லியை சேர்ந்த சான்சிட் அகர்வால் ஆகியோர் முறையே 4முதல் 8 வரையிலான இடத்தை பிடித்துள்ளனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த அன்மோல் குப்தா 10வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

பள்ளி கல்வித்துறையுடன் இணைக்காமல் தொடக்க கல்வி துறை தனித்து இயங்க ஆசிரியர்கள் கோரிக்கை..




 பள்ளிக் கல்வித்துறையுடன் தொடக்க கல்வித்துறையை இணைக்காமல் தற்போது உள்ளது போல தனித்து இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த 2000ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம்(SSA) 10 ஆண்டுகள் அனைத்து மாநிலங்களிலும் செயல் படுத்தப்பட்டு பின்னர் அந்த திட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் 2010ம் ஆண்டில் அந்த திட்டத்தின் நோக்கம் முழுமை பெறாத நிலையில் மேலும் அந்த திட்டத்தை மத்திய அரசு நீட்டித்தது. அத்துடன் மத்திய இடைநிலை கல்வி திட்டம்(RMSA) என்ற புதிய திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டம் தற்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், மேற்கண்ட இரு திட்டங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இயங்கி வரும் இரண்டு திட்டங்களும் ஒன்றாக இணைக்கப்பட உள்ளன. இதற்கு முன்னதாக தமிழகத்தில் பொதுக் கல்வி வாரியம் கொண்டு வரப்பட்டது. 

அதனால் ஏற்கெனவே இருந்து வந்த நான்கு கல்வி வாரியங்கள் கலைக்கப்பட்டன. இதன் காரணமாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் என்று தனியாக ஒன்று தேவையில்லை என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து அதை மூட வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். இந்நிலையில்,  தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருவதாலும், ஆசிரியர் மாணவர்கள் விகிதாசாரப்படி பள்ளிகளை மாற்றி அமைக்கப்பட உள்ளதாலும் தொடக்க கல்வித்துறையை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு எடுத்துள்ளது. இணைப்பதால் ஏற்படும் சாதக பாதகங்கள்பற்றி கல்வி அதிகாரிகளை அழைத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வாரம் பேச்சு வார்த்தை நடத்தினார். 

இதையடுத்து, தொடக்க கல்வித்துறை தனியாக இயங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டு வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ரெங்கராஜன், முதல்வரிடம்  கொடுத்த கோரிக்கை மனுவின் விவரம்: ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பல புதிய கல்வித்திட்டங்களை செயல்படுத்த வசதியாக ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பணியாற்றும் 1.50 லட்சம் ஆசிரியர்களை அரசு அலுவலர்களாக மாற்றி கடந்த 1981ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ஆணையிட்டார். அதன்படி பள்ளிக் கல்வித்துறையில் உள்ள பணிச்சுமையை கணக்கில் கொண்டும், தொடக்க ்கல்வி ஆசிரியர்களின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்காகவும், நிர்வாக வசதிக்காகவும் தொடக்க கல்வி இயக்ககத்தை உருவாக்கினார். அதன்படி தொடக்க கல்வி இயக்ககம் தனியாக இயங்கி வருகிறது.

 இந்நிலையில், தொடக்க கல்வித்துறையை பள்ளிக் கல்வித்துறையோடு இணைக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தொடக்க கல்வித்துறையின் கீழ் ஊராட்சி ஒன்றியம், அரசு உதவி பெறும் பள்ளிகள் என பல ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஆசிரியர்களின் நலன்சார்ந்த பல்வேறு பிரச்னைகள் தீர்வு காண்பதில் இப்போதும் காலதாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறையுடன் தொடக்க கல்வித்துறையை இணைத்தால் மேலும் கால தாமதம் ஏற்பட்டு பணிகள் ஸ்தம்பித்துப்போகும் நிலை ஏற்படும். எனவே தொடக்க கல்வித்துறை சீரான வளர்ச்சியுடன் தரமான கல்வி கிடைக்க செய்யவும், ஆசிரியர்கள் நலன் காக்கவும் தொடக்க கல்வித்துறை தனியாக செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ரெங்கராஜன் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்

பள்ளி திறந்த பின் இடமாறுதல் கவுன்சிலிங்? ஆசிரியர்கள் அதிர்ச்சி...


பள்ளிகள் திறந்த பின் ஜூன் மாதம் ஆசிரியர் கவுன்சிலிங் நடத்த கல்வித்துறை ஆலோசிப்பதால், ஆசிரியர்கள் கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.ஓராண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் ஆசிரியர், பணி மாறுதல் பெற, ஒவ்வொரு ஆண்டும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். மாவட்டத்துக்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம், பட்டதாரி, முதுகலை ஆசிரியர், தலைமை ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர் உள்ளிட்ட பல பிரிவுகளில் கவுன்சிலிங் நடக்கும்.
தற்போது, 'ஆன்லைன்' மூலம் கவுன்சிலிங் நடப்பதால், முறைகேடு தவிர்க்கப்பட்டு, கல்வித்துறையின் பணி எளிதாகிறது. இருப்பினும், கவுன்சிலிங் நடக்கும் தேதிக்கு முன் தயாராக ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வழக்கமாக, மே மாதம் கவுன்சிலிங் நடத்தப்படும்.
ஆனால், நடப்பாண்டு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடப்பதால், மே மாதம், 2வது வாரம் வரை ஆசிரியர்களுக்கு சரியாக இருக்கும்.தேர்வு முடிவு வெளியீடு, அட்மிஷன், பள்ளி திறப்புக்கான பணி இருப்பதால், மீதமுள்ள நாட்களில் கவுன்சிலிங் நடத்தி முடிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.அதே நேரம், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு மே, 20ம் தேதிக்கு பின்னரும், பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஜூன் முதல் வாரமும் கவுன்சிலிங் நடத்த கல்வித்துறை உயரதிகாரிகள் ஆலோசிப்பதால், ஆசிரியர்கள் கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளளனர்.-
















POPULAR POSTS