மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Friday 7 December 2018

கணினி ஆசிரியர்களை அரசுப்பள்ளியில் விரைவில் நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவு..!



அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்கலாம் : அரசாணை வெளியீடு


அரசு மற்றும்  நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களில்  814 கணினி ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது  இதுகுறித்து நேற்று வெளியான அரசாணை


கடந்த அக்டோபர் மாதம் பள்ளிக் கல்வி இயக்குநர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் தற்போது 2939 அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.  அவற்றில் தற்போது 814 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன

இந்த பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

பொதுத் தேர்வு எழுதும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் நலன் கருதி மேற்கண்ட 814 கணினி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

தற்காலிக ஏற்பாடாக நவம்பர் 2018 முதல் பிப்ரவரி 2019 முடிய 4 மாதங்கள் அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய நேரடி நியமனம் மூலம் கணினி ஆசிரியர்கள் நியமிக்கும் வரை, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் மாதம்  ஒன்றுக்கு ₹7500 தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் போது குழு ஒன்று அமைத்து ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியம் வழங்க வசதியாக ₹250 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலித்து அதை ஏற்று ஆணையிட்டுள்ளது


அதன்படி, மேற்கண்ட பணியிடங்களில் கணினி ஆசிரியர்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, அந்தந்த ஊர்களில் பள்ளி அருகில் வசிக்கும் உள்ளூர் இளைஞர்களில் கணினி பட்டம் பெற்று பிஎட் தகுதி பெற்றவர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் தேர்வுக் குழு மூலமாக நியமனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் ெதரிவித்துள்ளார்

செய்தி:தினகரன்.

FLASH NEWS : தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு..








Thursday 6 December 2018

பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தொடர்பான டெண்டர் எதிர்த்து வழக்கு: அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தொடர்பான டெண்டர் எதிர்த்து வழக்கு: அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு


அரசு பள்ளிகளில்  ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழக அரசு, பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைக்க டெண்டர் கோரியுள்ளது. இதை  எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது*


தமிழக அரசு பள்ளிகளில், 420 கோடி ரூபாய் செலவில், 6,029, ‘ஹை – டெக்’ கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட  இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்*

தற்போது தமிழக பள்ளிப்பாடப் புத்தங்களில் பார் கோடு இணைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பார் கோடுகளை பயன்படுத்தி, வீடியோவாகவும் பாடத்தை காண முடியும். அதற்கு ஏற்றார் போல்  தமிழகம் முழுவதும், 3,000 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது*

மேலும், மத்திய அரசின், ஐ.சி.டி., என்ற, கணினி வழி கற்றல் திட்டத்தை, தமிழக அரசு முழுமையாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக  மாநிலம் முழுவதும், 3,090 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 2,939 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், ஹை – டெக் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன இந்த பணிகள் அனைத்தும், தனியார் வசம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அதற்காக, 420 கோடி ரூபாயில் டெண்டர் கோரியுள்ளது. இதில், சர்வதேச அளவில், பிரபலமான நிறுவனங்கள் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது*

அதன்படி ஒவ்வொரு ஆய்வகங்களிலும்,  தலா, 10 கணினிகள் வீதம், மொத்தம், 60 ஆயிரத்து, 290 கணினிகள், இணையதளம், ‘வை – பை’ வசதியுடன் இடம் பெறும் என்று கூறப்பட்டுள்ளது*
இந்த டெண்டர் முறையாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது*

மனுவில்,  ரூ.50கோடிக்கு மேலான டெண்டரை வர்த்தக இதழிலும் வெளியிட வேண்டும் என்பது விதி. ஆனால், அரசு அதை பின்பற்றவில்லை என்று குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்*
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  இதுகுறித்து  தமிழ்நாடு பாடநூல் கழகமும் பதிலளிக்க உத்தரவிட்டுவழக்கை ஜன8க்கு ஒத்தி வைத்தது*
ஏற்கனவே இதுபோன்ற டெண்டர்கள் 6 முறை வெளியிடப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது*

SOURCE PATRIKAI  WEBSITE

Tuesday 4 December 2018

FLASH NEWS:பெற்றோர் ஆசிரியர்கள் கழகத்தின் வாயிலாக 800 கணினி ஆசிரியர்கள் நியமனம்:மாண்புமிகு கல்வி அமைச்சர்



பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை: பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன்
பயோமெட்ரிக் முறையில், பள்ளிக்குள் மாணவன் நுழைந்ததும்,பெற்றோருக்கு குறுஞ்செய்தி சென்றுவிடும் பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.


ஈரோடு மாவட்டம், கோபி மற்றும் நம்பியூரில், நான்கு பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பினர் 1,303 பேருக்கு, இலவச சைக்கிள்களை வழங்கி, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது*

ஜன., மாதம் முதல் வாரத்தில், மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்க வாய்ப்புள்ளது. புதிய ஸ்மார்ட் கார்டு மூலம், நீங்கள் இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும், அதன் மூலம், பள்ளி மாற்று சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்

ஸ்மார்ட் கார்டில் உள்ள சிம்கார்டை உபயோகித்தால், மாணவனின் சரித்திரமே, அந்த பள்ளிக்கு தெரிய வரும்.பயோ மெட்ரிக் முறையாக, பள்ளிக்குள் மாணவன் நுழைந்ததும், அதுகுறித்து பெற்றோருக்கு, குறுஞ்செய்தி சென்றுவிடும்

பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை. 'உள்ளேன் ஐயா' என்பதே, வகுப்பறையில் இனி தேவைஇல்லை

மாணவன் பள்ளிக்குள் நுழையும் போதே, அனைத்து விபரங்களும் பதிவாகி விடும். எங்களுக்கும், லேப் டாப் வேண்டும் என ஆசிரியர்கள் கேட்கின்றனர். இதுகுறித்து, மத்திய அரசிடம் பேசி வருகிறோம்
ஆசிரியர்களுக்கும், லேப் டாப் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.ஆறு முதல், எட்டாம் வகுப்பினருக்கு டேப் வழங்கப்படும். இதன் மூலம், இரு மொழிகளில் கற்றுத்தரப்படும்


 கம்ப்யூட்டர் ஆசிரியர்களில்,ரூ  7,500 சம்பளத்தில், 800 பேரை நியமிக்க, அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்


பின், நிருபர்களிடம், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது.


*பொதுத்தேர்வுக்கான மையங்கள் குறித்து நாளை அறிவிக்கப்படும். 'கஜா' புயலால் பாதித்த மாவட்டங்களில், நடத்தப்படும் தேர்வை, மாற்றி அமைப்பதில், சிரமம் இருப்பதாக துறையினர் தெரிவித்துள்ளனர்*


 *இருந்தாலும், அதையும் அரசு பரிசீலித்து வருகிறது. 10 முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, பொதுத்தேர்வு உள்ளது*


 *இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆசிரியர் போராட்டம் குறித்து முதல்வரிடம் பேசி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்*

SOURCE :DINAMALAR WEBSITE

POPULAR POSTS