மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday 24 March 2018

நாற்பது ஆயிரம் பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழுங்குமா தமிழக அரசு

நாற்பது ஆயிரம் பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழுங்குமா தமிழக அரசு!!

 
நன்றி: TN NEWS.

CLIK HERE:கணினி கல்வியின் புதுமை காணொளிப்பதிவு.

கணினி வழி பாடம் உருவாக்கும் PG/BT ஆசிரியர்களுக்கான தேடல்

கணினி வழி பாடம் உருவாக்கும் PG/BT ஆசிரியர்களுக்கான தேடல்...


CLICK below LINK:


(வேலூர்/திருப்பத்தூர் கல்வி மாவட்ட ஆசிரியர்கள் மட்டும்).

IAS, IPS பதிவி போன்று , அதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்



IAS, IPS பதவி போன்று வேறு என்னென்ன ஆட்சி படிப்புகள் இருகின்றது?



நம்பில் பலருக்கும்  தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.

ஆனால், இதே அளவு  தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-


1. IAS - Indian Administrative Service 

2. IPS - Indian Police Service 

3. IFS - Indian Foreign Service 

4. IFS - Indian Forest Service 

5. IRS - Indian Revenue Service (Income Tax )

6. IRS - Indian Revenue Service ( Customs & Central Excise )

7. IAAS - Indian Audit and Accounts Service 

8. ICAS - Indian Civil Accounts Service 

9. ICLS - Indian Corporate Law Service 

10. IDAS - Indian Defence Accounts Service 

11. IDES - Indian Defence Estate Service

12. IIS - Indian Information Service 

13. IPTAS - Indian Post & Telecom Accounts Service

14. IPS  - Indian Postal Service

15] IRAS - Indian Railway Accounts Service 

16. IRPS - Indian Railway Personal Service 

17. IRTS - Indian Railway Traffics Service 

18. ITS - Indian Trade Service

19. IRPFS - Indian Railway Protection Force Service

இத்தனை பதவிகளும்  தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.  

இவை அனைத்துக்கும்  தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே...

பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும்  முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும்  இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம். 

இத்தனை வாய்ப்புகள்  இருப்பது பெரும்பாலான  இளம் பட்டதாரிகளுக்கு  தெரிவதில்லை. 

நம் தமிழக இளைஞர்களுக்கு  தெரிந்தது எல்லாம்,
விஏஒ பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே.

இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.

எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி  ஒரே ஒரு  பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும்  முறையான பயிற்சி தான் முக்கியம். 

இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள். 3நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள். இதை பகிர்ந்து கொள்ளுங்கள்.

கணினி பயிற்றுனர் காலிப்பணியிடம் கோருதல் சார்பு சுற்றறிக்கை.

கணினி பயிற்றுனர் காலிப்பணியிடம் கோருதல் சார்பு சுற்றறிக்கை...



தொழிற்க்கல்வி  இணை இயக்குனர்.


அரசுப்பள்ளி கம்ப்யூட்டர் பாடம் அசத்தல் ஆசிரியர் முயற்சியால் ! அரசு எப்போது சிந்திக்கும் ?

மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் அரசு பள்ளி கம்ப்யூட்டர் பயிற்சியிலும் அசத்தல்..




உடுமலை:கம்ப்யூட்டர் முதல் கலை வரை, மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதில் ஊக்கத்தோடு செயல்படுகிறது எலையமுத்துார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.


உடுமலை ஒன்றியத்தில், அதிக மாணவர்கள் எண்ணிக்கை உள்ள அரசு துவக்கப்பள்ளியில், இரண்டாவதாகஇருப்பது எலையமுத்துார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. இப்பள்ளியில், ஒன்று முதல்ஐந்தாம் வகுப்பு வரை, 147 மாணவர்கள் படிக்கின்றனர்.
அரசுப்பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், மாணவர் எண்ணிக்கையில் சரிவை நோக்கி செல்வதில்,முதன்மையானது துவக்கப்பள்ளிகள் தான். இந்நிலையில், கிராமப்புறத்தில் இருக்கும் இப்பள்ளி, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டிருப்பது மற்ற பள்ளிகளுக்கு எடுத்துக்காட்டாக செயல்படுகிறது.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வகுப்பறை வசதிகள், பல வண்ணங்களில், பாடங்கள் சித்திரமாய் கொண்டுள்ள வகுப்பறை சுவர்களுமாய் உள்ளது.மூன்றாம் வகுப்பு முதல், கம்ப்யூட்டர் பயிற்சி கட்டாயம். கம்ப்யூட்டரின் அடிப்படை செயல்பாடுகளை, மாணவர்களாகவே இயக்கும்அளவுக்கு பயிற்சி பெறுகின்றனர்.
ஒன்றாம் வகுப்பு முதல், ஆங்கிலவழிக் கல்வியும் உள்ளது. ஓவியம், கட்டுரை, பேச்சு, என இலக்கியப் போட்டிகளில் தொடர்ந்து மாணவர்களை ஈடுபடுத்தி, பரிசுகளையும் பெறுகின்றனர். துவக்க நிலையிலும், நுனி நாக்கு ஆங்கிலத்தில், நாடகம் நிகழ்த்தி பாராட்டு பெறுகின்றனர் மாணவர்கள்.குழந்தைகளோடு குழந்தைகளாய் ஆசிரியர்கள் மாறி, ஆடிப்பாடி பாடம் நடத்துவதை, மழலையருக்கே உண்டான மொழியில் பின்தொடர்கின்றனர் குழந்தைகள்.
சிறுகதை, தேசத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு என இடைநிற்றல் இல்லாமல் பேசி, குழந்தைகள் பாராட்டு பெறுகின்றனர். அரசுப்பள்ளிகளில் சேரவும், குழந்தைகள் கல்வி பயிலவும், பெற்றோருக்கு விருப்பம் இருந்தாலும், அதற்கான செயல்வடிவம் தருவதற்கு, ஆசிரியர்களும் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதை இப்பள்ளி உறுதிப்படுத்தியுள்ளது.
விரைவில் 'ஸ்மார்ட் கிளாஸ்' தலைமையாசிரியர் ஜனகம் கூறியதாவது:
பள்ளிகளுக்கு, அரசு வழங்கும் திட்டங்களை முறையாகவும் முழுமையாகவும்
பயன்படுத்தினாலே, மாணவர்கள் விரும்பும் பள்ளியாக மாறிவிடும். பாடப்புத்தகங்களில் 
இருப்பதை மட்டுமின்றி, அவர்களின் அடிப்படை திறன்களை மேம்படுத்துவதிலும், துவக்கப்பள்ளிகளுக்கு தான் முதன்மையான கடமை உள்ளது


.இதை உணர்ந்து, செயல்படுவதால், பெற்றோரும், ஒத்துழைப்பு தருகின்றனர். தொழில்நுட்ப கல்வியை  அனைத்து நிலைகளிலும் தமிழக அரசே வழங்கினால் கிராமப்புற மாணவர்களும் பயன் பெருவார்கள்.

கணினி ஆசிரியர்கள் சாரந்த MEMES ....

Yeanna da ithu CS B.Ed complete pannavangalukku vantha sothanai!!

அது எப்படி தம்பி ??


TET TRB CSக்கு வருமா சார்???          
 

நமக்கு எப்ப சார் வேலை கிடைக்கும் ??





Friday 23 March 2018

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தரவரிசைப் பட்டியல்வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம் :


TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தரவரிசைப் பட்டியல்வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம் :




கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடக் கோரி, தேர்வெழுதியவர்கள் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றுவதற்காக இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசியர்களுக்கான தகுதித் தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தம் 7.4 லட்சம் பேர் எழுதினர்.தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் ஜூலை 24 -ஆம் தேதி நடைபெற்றன.
ஆனால், இந்தத் தேர்வுகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை வெளியிடவில்லை. இதையடுத்து, தரவரிசைப் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்; தேர்ச்சிக்கான சான்றிதழை வழங்க வேண்டும்; புதிய ஆசிரியர்கள் நியமனத்தை தொடங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 2017 -ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய தேர்வர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறும்போது, "எங்களது கோரிக்கைகள் குறித்த மனுவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் கே.நந்தகுமாரை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வழங்கியுள்ளோம்.அப்போது இரு மாதங்களில் தேர்ச்சிக்கான சான்றிதழ் வழங்கவும், தரவரிசைப்பட்டியல் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்' என்றனர்

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் : விஜயகாந்த் கோரிக்கை



அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் : விஜயகாந்த் கோரிக்கை 



சென்னை: 
“அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்” என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 3.92 லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும், 2.17 லட்சம் இடைநிலை ஆசிரியர்களும் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து காத்திருக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், அரசு மேல்நிலை பள்ளிகளில் 1,938 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நீண்டகாலமாக நியமிக்கப்படாமல் உள்ளது.

தமிழகத்தில் உயர்நிலை பள்ளிகளின் எண்ணிக்கை 6,081, மேல்நிலை பள்ளிகளின் எண்ணிக்கை 5,803, இதில் உயர்நிலை பள்ளிகளில் 884 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், மேல்நிலை பள்ளிகளில் 34 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. மாணவர்களின் கல்வித்தரம் உயர அனைத்து பாடங்களுக்கும், தனித்தனியாக ஆசிரியர்களை பாடம் வாரியாக உடனடியாக நியமிப்பது அவசியமானது. கற்றுத் தருவதற்கு ஆசிரியர்களே இல்லாத நிலையில், மாணவர்கள் எவ்வாறு தேர்வினை துணிவோடு எழுத முடியும்?. இதனால் மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் அரசு 100 சதவீதம் மாணவர்கள் தேர்வடைய வேண்டுமென தலைமை ஆசிரியர்களையும், ஆசிரியர்களையும் கட்டாயப்படுத்துவது நியாயம் தானா?.

2018-19ம் கல்வி ஆண்டில் 200 அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்ற நிதிநிலை அறிக்கை அறிவிப்பின் மூலம், மேலும் புதிதாக 700 ஆசிரியர்கள் தேவையாக உள்ளது. எனவே மாணவர்கள் மேலும், மேலும் இடர்படாது பயில அந்தந்த பாடங்களுக்கு உரிய ஆசிரியர்களை உடனடியாக நியமித்து, அனைத்து ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நியமித்து, தமிழகத்தில் கல்வித்தரம் உயர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

40000 கணினி ஆசிரியர்கள் சார்பிலும் மற்ற பாட ஆசிரியர்கள் சார்பிலும் 
மனமார்ந்த  நன்றிகள் ஐயா அவர்களுக்கு,


வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014



புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் 1ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை ஓர் பார்வை!!

புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் 1ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை ஓர் பார்வை!!

     

முதல்வர் தனிப்பிரிவு பதில்

தொடக்க கல்வியில்  ஏங்கே கணினி பாடம்?


                           CLICK:          TNSCERT


  தொடக்கப்பள்ளியில் மாற்றம்:
முனைவர் K.S.மணி துணை இயக்குநர்  (மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) அவர்கள் கணினி அறிவியல் பாடத்தை 3ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தில் சேர்ப்பதற்க்காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.



வரும் கல்வியாண்டில் 3ம் வகுப்பில் புதிய பாடத்திட்டம். 3ஆம் வகுப்பில் அரசு சொன்னது போல் கணினி  அறிவியல் பாடம் கொண்டு வரவில்லை.
           

நடுநிலை ,உயர்நிலை கல்வியில் மாற்றம்:


                            CLICK:  TNSCERT

        2018-2019ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் 6வகுப்பு மற்றும் 9வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறைக்கு வர உள்ளது.இதில் அறிவியல் பாடத்தின்  இணைப்பு பாடமாகவும் பருவத்திற்கு இரண்டு பாடங்களை மட்டும் TWO UNIT ஆக இணைத்துள்ளது தவிர  அனைவரும் எதிர் பாரத்து போல் ஆறாவது பாடமாக கொண்டுவரவில்லை    இதற்கான செய்முறை பயிற்சியே  அதனை கற்பிக்க முறையான     ஆசிரியர்கள் இன்றி வெறும் பாடத்தை மட்டும் அறிவியல் பாடத்தின் ஓர்  அங்கமாக இணைத்துள்ளது .

      மாணவர்கள் எதிர்கால வாழ்வில் அங்கமான கணினி அறிவியல் பாடத்தை துணைப்படமாக இணைத்துள்ளது. செய்முறை பயிற்சியின்றி ,முறையான கணினி ஆசிரியர்கள் இன்றி   வெறும் பாடத்தை மட்டும்  இணைத்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த நினைக்கிறது  அரசு.

  புதிய பாடத்திட்டத்தில் தமிழக கல்வித்துறை மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் காத்திருந்த வேலையில் கணினி அறிவியல் பாடம்  துணைப்படமாக இணைத்துள்ளது. அரசுப்பள்ளியில்     மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்  நீண்ட நாள் போராடி வரும் 40000 கணினி ஆசிரியர்களக்கும் ஏமாற்றத்தை தரும் வகையில்  அமைந்துள்ளது.

மேல்நிலைப்பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றம்:

         
                               CLICK:    TNSCERT

     2020ம் நூற்றாண்டில் அடி எடுத்து வைக்க உள்ளோம் தனியார் பள்ளிகளில்  தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கற்கும் கணினி பாடம் 11ம் ,12 ம்  வகுப்பு பாடமாக புதிய பாடத்திட்டதில் உள்ளது தற்போதும் கூட கணினியின் வரலாறு,Windows ,word ,excel,power point.

மத்திய அரசின் மூலம் கிடைக்கப் பெறும் நிதியை முறையாக செயல்படுத்தி அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை முறையாக மாணவர்களுக்கு கற்பிக்க மாநில அரசும், பள்ளி கல்வித்துறையும் 
விரைந்து நடவடிக்கை எடுக்கமா  இனியாவது...???.


வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014

NEET, JEE தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச கையேடு இணையதளத்தில் வெளியீடு.!!!

NEET, JEE தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச கையேடு இணையதளத்தில் வெளியீடு.

இலவச கையேட்டை ammakalviyagam.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அம்மா கல்வியகம் சார்பில் இலவச கையேடு பதிவிறக்கம் செய்வதை ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடங்கி வைத்தார்.
    
                     clik here:ammakalviyagam

ஆசிரியை -ஐ கத்தியால் குத்திய 9ஆம் வகுப்பு மாணவர்

திருவள்ளூரில் ஆசிரியை -ஐ  கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய, 9ஆம் வகுப்பு மாணவரை போலீஸார் தேடி வருகின்றனர்...


திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர் அனிஷ். இவர் அதே பகுதியில் உள்ள அம்பிகா என்ற ஆசிரியையிடம் டீயூஷன் படித்து வந்துள்ளார். மாணவனின் நடைமுறைகள் சரியில்லாத காரணத்தால், ஆசிரியர் அவரை டியூஷனுக்கு வரவேண்டாம் என்று நிறுத்தியுள்ளார். 

ஆனால் ஆசிரியர் அம்பிகா 5 சவரன் தங்கச் சங்கிலி அணிந்திருப்பதை, டியூஷன் படிக்கும் போதே மாணவர் நோட்டிமிட்டு வைத்துள்ளார். 


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், ஆசிரியர் அம்பிகாவின் வீட்டையே, அனிஷ் சுத்தி வந்துள்ளார். இதைக்கண்ட ஆசிரியரின் மகள் ஏன்? இந்தப் பக்கமே சுற்றித்திரிகிறாய் என்று சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் வெளியே செல்ல, அம்பிகா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். 

இதையறிந்து வீட்டிற்குள் நுழைந்த அனிஷ், ஆசிரியரின் 5 சவரன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவரை அம்பிகா தடுக்க முயன்றபோது, அனிஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கியுள்ளார். இதில் அம்பிகாவின் முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. 


இதையடுத்து அம்பிகா சத்தம் போட, பயத்தில் அனிஷ் தப்பி ஓடியுள்ளார். தற்போது காயமடைந்த அம்பிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், தப்பி ஓடிய மாணவரை தேடி வருகின்றனர்

Thursday 22 March 2018

அரசு முடிவால் ஆசிரிய, மாணவர்கள் ஏமாற்றம்!

அரசு முடிவால் ஆசிரிய, மாணவர்கள் ஏமாற்றம்...



புதிய பாடத்திட்டத்தில் பல மாற்றங்களை கொண்டுவரும் அரசு கணினி பாடத்தை அறிவியலின் துணைப்   பாடமாக கொண்டுவர உள்ளது .நிதி பிரச்சனை காரணம் காட்டி முறையான ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் ஆய்வாகங்கள் அமைக்காமல் ,     செய்முறை பயிற்சி இன்றி  வெறும் பாடத்தை வைத்து மட்டும்  பெயரளவில் இணைத்து என்ன பயன்.

எந்த தனியார் பள்ளியில் கணினி பாடம் கற்று கொடுக்கவில்லை.? முதல் வகுப்பிலிருந்தே கணினி பாடம் கற்றுக் கெடுகக்கப்படுகிறது அதற்கும் அரசு அங்கிகாரம் தருகின்றது .






ஏழைக்கு கல்வி வழங்குவதில் ஏன்  இந்த  பாரபட்சம்(Partiality)? 

அரசுப்பள்ளியின் சொத்து கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் தான்  இவர்களுக்கு முறையான கல்வி வழங்க வேண்டமா இலவச கணினி ஆசிரியர்கள் மனுவை கூட நிராகரிப்பு செய்துவிட்டதான் வேதனை

கணினியே இல்லாமல் கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் வெறும் பெயருக்காக மட்டும் அறிவியல் பாடத்துடன் இணைக்கும் தமிழக  அரசு.புதிய பாடத்திட்டமும் பொய்த்து போனது ..

அறிக்கையில் மட்டும் கணினி பாடம் அரசுப்பள்ளியில் இல்லாத நிலை இன்றும் !


மடிக்கணினி மட்டும் இலவசமாக கொடுக்கும் அரசு அதற்கான கல்வியை மட்டும் கொடுக்க மறுப்பது ஏன்???  அதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை என்பதுதான் அதில் வேதனை! 

       மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுப்பது வரவேற்புக்குரியது என்ற போதிலும் மாணவர்களுக்கு முறையான கணினி கல்வியை  வழங்கினால் மடிக்கணினியை தனது சுய சம்பதியத்திலே  வாங்கும் நிலையை தமிழக அரசு என்று ஏற்படுத்த போகிறது.கல்வியில் இலவசத்தை தவிர்த்து அதற்கான கல்வியை மட்டும் இலவசமாக தாருங்கள் அரசுப்பள்ளியும்,மாணவர்கள் மேன்மை அடைவர்கள்.

பல இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி மட்டும் இலவசம்  பள்ளி ஆய்வகத்தில் கணினி எங்கே??

இந்த திட்டம் 2011-2012ஆம் கல்வி ஆண்டிலிருந்து இன்று வரை நடைமுறையில் இருந்த போதிலும் தமிழக  அரசுப்பள்ளியில் மட்டும் கணினிப்பொறி இல்லா நிலையை உருவாக்கிவிட்டது அரசு.

     கடந்த 2016-17ம் கல்வியாண்டில் மட்டுமே 5.6 இலட்சம்    மடிக்கணினிக்கு ஒப்பந்தப்புள்ளியை வழங்கியுள்ளது.ஒரு மடிக்கணினியின் சராசரி விலை ரூ 16,785 ஆகும். மத்திய அரசின் தகவலின் படி தமிழக அரசுப்பள்ளியில் 36.72% கணினிகள் உள்ளன என்ற அதிர்ச்சி தகவலை தந்துள்ளது வேதனைக்குறியது.

தொடக்க,நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகள் என தமிழகத்தில் 50000 அரசுப்பள்ளிகள் உள்ளன பள்ளிகளில் 10கணினியை கொண்ட ஆய்வகம் அமைத்திருந்தால் அதாவது (50000*10=500000கணினி )ஒரு வருடாத்திற்கு இலவசமாக வழங்கும் மடிக்கணினியை அரசுப்பள்ளிக்கு வழங்கியிருந்தால் தமிழகம் 100%  அரசுப்பள்ளிகள் கணினி பள்ளியாக மாற்றம் பெற்று இருக்கும்.

அரசு அங்கீகாரம் பெறாத 1,500 பள்ளிகளுக்கு நோட்டீஸ்...

திருவனந்தபுரம்: அரசின் அங்கீகாரம் பெறாத 1,500 பள்ளிகளுக்கு கேரள அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேரள மாநிலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முஸ்லிம் லீக் கட்சி, எம்.எல்.ஏ., காதர் கேள்வி எழுப்பினார்.


தொடர்ந்து, “அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு கடந்த 2013ஆம் ஆண்டு அவகாசம் அளிக்கப்பட்டது. அப்போது, 1,194 பள்ளிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பித்தன. அந்தப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்த பிறகு, 395 பள்ளிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டது.


மற்ற பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்துகொள்ள அவகாசம் தரப்பட்டது. ஆனால், இன்னும் அதற்காக எந்த முயற்சியும் எடுக்காமல், இயங்கும் அங்கீகாரம் இல்லாத 1,500 பள்ளிகளை மூட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் பினராயி கூறினார்.

இதனால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட பள்ளிகளில் படிக்கும் 15 லட்சம் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப கல்வியில் பின் தங்கும் தமிழக கல்விமுறை மத்திய அரசு தகவல்...

தகவல் தொழில்நுட்ப கல்வியில் பின் தங்கும் தமிழக கல்விமுறை மத்திய அரசு தகவல்...




கணினியே இல்லாமல் கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் வெறும் பெயருக்காக மட்டும் அறிவியல் பாடத்துடன் இணைக்கும் தமிழக  அரசு.புதிய பாடத்திட்டமும் பொய்த்து போனது ..

அறிக்கையில் மட்டும் கணினி பாடம் அரசுப்பள்ளியில் இல்லாத நிலை இன்றும் !

மடிக்கணினி மட்டும் இலவசமாக கொடுக்கும் அரசு அதற்கான கல்வியை மட்டும் கொடுக்க மறுப்பது ஏன்??? 

       மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுப்பது வரவேற்புக்குரியது என்ற போதிலும் மாணவர்களுக்கு முறையான கணினி கல்வியை  வழங்கினால் மடிக்கணினியை தனது சுய சம்பதியத்திலே  வாங்கும் நிலையை தமிழக அரசு என்று ஏற்படுத்த போகிறது.கல்வியில் இலவசத்தை தவிர்த்து அதற்கான கல்வியை மட்டும் இலவசமாக தாருங்கள் அரசுப்பள்ளியும்,மாணவர்கள் மேன்மை அடைவர்கள்.

பல இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி மட்டும் இலவசம்  பள்ளி ஆய்வகத்தில் கணினி எங்கே??

இந்த திட்டம் 2011-2012ஆம் கல்வி ஆண்டிலிருந்து இன்று வரை நடைமுறையில் இருந்த போதிலும் தமிழக  அரசுப்பள்ளியில் மட்டும் கணினிப்பொறி இல்லா நிலையை உருவாக்கிவிட்டது அரசு.

     கடந்த 2016-17ம் கல்வியாண்டில் மட்டுமே 5.6 இலட்சம்    மடிக்கணினிக்கு ஒப்பந்தப்புள்ளியை வழங்கியுள்ளது.ஒரு மடிக்கணினியின் சராசரி விலை ரூ 16,785 ஆகும். மத்திய அரசின் தகவலின் படி தமிழக அரசுப்பள்ளியில் 36.72% கணினிகள் உள்ளன என்ற அதிர்ச்சி தகவலை தந்துள்ளது வேதனைக்குறியது.

தொடக்க,நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகள் என தமிழகத்தில் 50000 அரசுப்பள்ளிகள் உள்ளன பள்ளிகளில் 10கணினியை கொண்ட ஆய்வகம் அமைத்திருந்தால் அதாவது (50000*10=500000கணினி )ஒரு வருடாத்திற்கு இலவசமாக வழங்கும் மடிக்கணினியை அரசுப்பள்ளிக்கு வழங்கியிருந்தால் தமிழகம் 100%  அரசுப்பள்ளிகள் கணினி பள்ளியாக மாற்றம் பெற்று இருக்கும்.

புதுவை அரசுப்பள்ளி இன்று 99.74%கணினி பள்ளி:

       2016 ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கிய திட்டம் இன்று இரண்டே வருடத்தில்    அரசுப்பள்ளி அனைத்திலும் அதிநவின கணினி ஆய்வகம் அமைத்து 99.74 இலக்கை அடைந்துள்ளது..

கேரளம் கணினி கல்வியில் முதலிடம்:

      கேரள அரசு கணினி கல்வியும் ,கணினி வழிக்கல்வியும் வழங்கி வருகின்றது.2011-2012ஆம் ஆண்டில்   தமிழகத்தில் சமச்சீர் கல்வி அறிமுகமானது அதில் 6-10 வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வரப்பட்டது. அந்த திட்டமும் ஆச்சி மாற்றத்தில்  கானல் நீரானது அச்சிடப்பட்ட புத்தகமோ குப்பை தொட்டியில் உருங்கும் நிலையை உருவாக்கிவிட்டது அரசு.அதற்கு பின் கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் கொண்டுவந்த கேரள அரசு இன்று இந்தியா அளவில் கணினி அறிவியல் கல்வி வழங்குவதில் முதல் மாநிலமாக உள்ளது.

2016-2017ஆண்டு அறிக்கை:

     கல்வி அறிக்கையில் கல்வி சார்ந்த பல முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் 22 சதவீத குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவர் கணினிக் கல்வி பயின்றவராக உள்ளனர்.

கேரளாவில் 49 சதவீதத்தினர் அதாவது 39.17 லட்சம் குடும்பங்களில், தலா ஒருவர் கணினி அறிவு பெற்றிருப்பதால் அம்மாநிலம் கணினி கல்வி அறிவில் முதன்மை மாநிலமாக உள்ளது. பஞ்சாப், சிக்கிம் மாநிலங்கள் 47% மற்றும் 43% பெற்று அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளன.


2018 ஆண்டு மத்திய அரசு தகவல்:

 (கேரள அரசுப்பள்ளியில் 70.19%கணினிகள் உள்ளன.)

இன்று கேரளத்தில் கணினி கல்வியால் இன்று  அரசுப்பள்ளியில் இணைந்த  தனியார் பள்ளி மாணவர்கள்.
கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற மற்ற பாடங்களைப் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், அம்மாநிலத்துக்கு முன்னோடியாக 2011-ம் ஆண்டே அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை தமிழக அரசு தொடங்கியது. ஆனால், தற்போது தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களிான அந்திர தெலுங்கான கர்நாடக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் கட்டாயப் பாடமாக உள்ளது. ஆனால்,இன்று வரை  தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தை பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்த முடியவில்லை இன்றுவரை.


ஐந்து பாடங்களை மட்டும் மாற்றினால் போதுமா ?

        CBSE, matriculation போன்ற தனியார் பள்ளிக்கு  இணையான கலைத்திட்டத்தில்  மாற்றம் உண்டா புதிய பாடத்திட்டத்தில்.

அரசுப்பள்ளி சிருடையில் மட்டுமே மாற்றம்.  கலைத்திட்டத்தில் மாற்றம் இல்லாத புதிய வரைவு பாடத்திட்டம்.பத்தாண்டுகளுக்கு முன்பே கணினி அறிவியல் பாடத்தை முதல் வகுப்பிலிருந்தே கற்றுக் கொடுக்கிறது தனியார் பள்ளிகளில்.இங்கு ஐந்து பாடத்துடன் முக்கிய பாடமாக   கணினி அறிவியல் பாடத்தை கற்றுக் கொடுக்கின்றனர் இதனுடன்  ஹிந்தி யோகா போன்ற பாடங்களும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் .

புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் ஏமாற்றம்..!!!


தொடக்க கல்வியில்  ஏங்கே கணினி பாடம்?

  தொடக்கப்பள்ளியில் மாற்றம்:
முனைவர் K.S.மணி துணை இயக்குநர்  (மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) அவர்கள் கணினி அறிவியல் பாடத்தை 3ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தில் சேர்ப்பதற்க்காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

வரும் கல்வியாண்டில் 3ம் வகுப்பில் புதிய பாடத்திட்டம். 3ஆம் வகுப்பில் அரசு சொன்னது போல் கணினி  அறிவியல் பாடம் கொண்டு வரவில்லை.


நடுநிலை ,உயர்நிலை கல்வியில் மாற்றம்:

        2018-2019ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் 6வகுப்பு மற்றும் 9வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறைக்கு வர உள்ளது.இதில் அறிவியல் பாடத்தின்  இணைப்பு பாடமாகவும் பருவத்திற்கு இரண்டு பாடங்களை மட்டும் TWO UNIT ஆக இணைத்துள்ளது தவிர  அனைவரும் எதிர் பாரத்து போல் ஆறாவது பாடமாக கொண்டுவரவில்லை    இதற்கான செய்முறை பயிற்சியே  அதனை கற்பிக்க முறையான     ஆசிரியர்கள் இன்றி வெறும் பாடத்தை மட்டும் அறிவியல் பாடத்தின் ஓர்  அங்கமாக இணைத்துள்ளது .

      மாணவர்கள் எதிர்கால வாழ்வில் அங்கமான கணினி அறிவியல் பாடத்தை துணைப்படமாக இணைத்துள்ளது. செய்முறை பயிற்சியின்றி ,முறையான கணினி ஆசிரியர்கள் இன்றி   வெறும் பாடத்தை மட்டும்  இணைத்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த நினைக்கிறது  அரசு.

  புதிய பாடத்திட்டத்தில் தமிழக கல்வித்துறை மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் காத்திருந்த வேலையில் கணினி அறிவியல் பாடம்  துணைப்படமாக இணைத்துள்ளது. அரசுப்பள்ளியில்     மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்  நீண்ட நாள் போராடி வரும் 40000 கணினி ஆசிரியர்களக்கும் ஏமாற்றத்தை தரும் வகையில்  அமைந்துள்ளது.

மேல்நிலைப்பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றம்:
     2020ம் நூற்றாண்டில் அடி எடுத்து வைக்க உள்ளோம் தனியார் பள்ளிகளில்  தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கற்கும் கணினி பாடம் 11ம் ,12 ம்  வகுப்பு பாடமாக புதிய பாடத்திட்டதில் உள்ளது தற்போதும் கூட கணினியின் வரலாறு,Windows ,word ,excel,power point.

மத்திய அரசின் மூலம் கிடைக்கப் பெறும் நிதியை முறையாக செயல்படுத்தி அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை முறையாக மாணவர்களுக்கு கற்பிக்க மாநில அரசும், பள்ளி கல்வித்துறையும் 
விரைந்து நடவடிக்கை எடுக்கமா  இனியாவது...???.


வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ICT TRAINING ஆரம்பம்...


அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வியில் கல்வியில் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப பயிற்சியை துவங்க உள்ளது..



CS b.ed படிக்க வாங்க ???


கணினி ஆசிரியர்கள் முகநூல் பதிவில் அதிகம் பகிர்ந்த புகைப்படம்..


Wednesday 21 March 2018

TRB வெளியிட்ட ஆண்டு அறிக்கை!!!

கவலை வேண்டா கணினி ஆசிரியர்களுக்கு இல்லை!!

 Current Recruitments:

SOURCE:

http://trb.tn.nic.in

ஐயா,பார்த்து பண்ணுங்கய்யா'- விடைத்தாளில் ரூபாயை இணைத்து அனுப்பிய மாணவர்கள்..


உத்தரப் பிரதேச மாநிலத்தில், 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விடைத்தாளில் பணத்தை வைத்து இணைத்து அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் என்றாலே பள்ளித் தேர்வுகளில் அடிக்கடி மாணவர்கள் பிட் அடித்து பிடிபடுவதும், மாணவர்களுக்கு பிட்களை பெற்றோர்களே கொடுப்பதும் போன்ற செய்திகளை அறிந்திருப்போம். ஆனால், இப்போது, விடைத்தாளில் பணத்தை வைத்து அதைத் திருத்தும் ஆசிரியர்களுக்கு கையூட்டு வழங்கும் கதையும் நடந்துள்ளது.

 உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் 12-ம் வகுப்பு தேர்வு நடந்து முடிந்துள்ளது. இதில் தேர்வுத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. இதில் பெரோசாபாத் மாவட்டத்தில் ஆக்ராவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்கலையில் கேள்வித்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, மாணவர்கள் தங்களின் விடைத்தாளில் ரூ.100, ரூ.50, ரூ.500 நோட்டுகளை இணைத்து தங்களை தேர்வில் பாஸ் செய்யக் கோரியுள்ளனர்.



இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ''தேர்வுகளை சரியாக எழுதாத மாணவர்கள், இதுபோன்று விடைத்தாளில் பணத்தை இணைத்து அனுப்புகிறார்கள். தங்களின் பணத்தை எடுத்துக்கொண்டு எப்படியாவது பாஸ்செய்யக்கோருகின்றனர்.

ஆனால், ஆசிரியர்களைப் பொறுத்தவரை விடைகளுக்கு மட்டுமே மதிப்பெண் அளிக்கிறோம், பணத்துக்காக அல்ல'' என்று தெரிவித்தார்.

தேர்வு எழுதும் அறைகளில் கண்காணிப்பு கேமிராக்கள் இருந்தபோதிலும், மாணவர்கள் இதுபோன்று செய்துள்ளார்கள். சிலநேரங்களில் தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமிரா பழுதடைந்ததால் இதுபோல் நடந்திருக்கலாம் என்றும் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இயற்பியல் ஆசிரியர் சம்பா சக்ரவர்த்தி கூறுகையில், ''நான் விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்தபோது, அதில் 100 ரூபாய் இணைக்கப்பட்டு இருந்தது. அந்த கேள்வித்தாள் மாணவருடையதா அல்லது மாணவி எழுதியதா எனத் தெரியவில்லை. ஆனால், இறுதியில் மாணவி ஒருவர் எழுதியது என்பது தெரியவந்தது.

அந்த விடைத்தாளில் தயவுசெய்து என்னை பாஸ் செய்துவிடுங்கள், இல்லாவிட்டால் எனது பெற்றோர்கள் எனக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். மற்றொரு மாணவர் என்னை நீங்கள் பாஸ் செய்யாவிட்டால், என்னுடைய பெற்றோர்கள் எனது படிப்பை நிறுத்திவிடுவார்கள் என தெரிவித்து பணம் வைத்திருந்தார். மாணவர்களைப் பொறுத்தவரை ஆசிரியர்கள் பணத்துக்காக மயங்கிவிடுவார்கள் என நினைக்கிறார்கள்'' எனத் தெரிவித்தார்





Tuesday 20 March 2018

அரசாணை நிலை எண்:46 பற்றி அனைவரும் அறிந்து கொள்ள..

கணினி ஆசிரியர்களே அரசாணை :46 பற்றி முழுவிபரம் அறிந்து கொள்வீர்..





அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை; கல்வித்தரம் எப்படி மேம்படும்?-அன்புமணி சாடல்..

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை; கல்வித்தரம் எப்படி மேம்படும்?-அன்புமணி சாடல்

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், கல்வித்தரம் எவ்வாறு மேம்படுத்தப்படும் என, பாமக. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (திங்கள் கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

“வெறும் கைகளால் முழம் போடுவதைப் போல கல்வித்தரத்தை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் தமிழகத்தில் கல்வித்தரம் மேம்படுத்தப்படும் என வெற்று முழக்கத்தை பினாமி அரசு எழுப்பி வருகிறது. கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு அடிப்படைத் தேவையான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்குக் கூட பினாமி அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதுதான் கல்வித்தரம் குறைவதற்குக் காரணம் என்று பா.ம.க. குற்றம்சாட்டி வருகிறது. அக்குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்கள் உறுதி செய்துள்ளன. தமிழ்நாட்டில் 918 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கூடங்களில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று கருப்பையா என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெற்ற புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்திருப்பதாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இது புதிய செய்தி இல்லை என்றாலும், இதன் பின்னணியில் தமிழக அரசு காட்டி வரும் அலட்சியம் எவ்வளவு மோசமானது என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் வெளிப்படுத்தவே இச்செய்தியை சுட்டிக்காட்டுகிறேன்.

தமிழகத்தில் 884 உயர்நிலைப் பள்ளிகளிலும், 34 மேல்நிலைப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் இரு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக கிடப்பதுதான் கொடுமை ஆகும். கடந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் 900 உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. அவற்றில் 100 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அவற்றுக்கு பதிலாக, 150 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதனால் 950 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஆசிரியர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அப்பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. தமிழக அரசு நினைத்திருந்தால் அந்த வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவந்து பணியிடங்களை நிரப்பியிருக்கலாம். ஆனால், ஆட்சியாளர்கள் அதை செய்யவில்லை. அரசின் அலட்சியம் காரணமாக இரு ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 1000 பள்ளிகள் தலைமை ஆசிரியர்களின்றி தடுமாறுகின்றன.

அதுமட்டுமின்றி, மேல்நிலைப்பள்ளிகளில் 1640 ஆசிரியர் பணியிடங்கள், உயர்நிலைப்பள்ளிகளில் 2405 பணியிடங்கள் உட்பட 4963 பணியிடங்கள் காலியாக உள்ளன. வரும் மே மாதத்துடன் முடிவடையும் கல்வியாண்டின் இறுதியில் இது 10 ஆயிரத்தை நெருங்கக்கூடும். ஆனால், இந்த பணியிடங்களை நிரப்ப கடந்த இரு ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்காமல் கல்வித் தரத்தை எவ்வாறு உயர்த்த முடியும்? மாணவர்களால் எவ்வாறு அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வி கற்க முடியும்? ஆட்சியாளர்களின் இத்தகைய அலட்சியம் காரணமாகத் தான் ஒரு காலத்தில் அனைவரும் அரசு பள்ளிகளில் படித்த நிலை மாறி, இப்போது அரசு பள்ளிகள் என்றாலே மக்கள் விலகி, ஒதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அரசு பள்ளிகளை சீரழிப்பதில் ஆட்சியாளர்களின் கைங்கர்யம் இத்துடன் முடிவடைந்துவிடவில்லை. பள்ளிக் கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தென் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட 4742 ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது. இதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் ஒப்புக்கொண்டிருக்கிறார். நிர்வாக இட மாறுதல் என்ற பெயரில் பணம் வாங்கிக்கொண்டு ஆசிரியர்களுக்கு இட மாறுதல் வழங்கியதுதான் இந்த நிலைக்குக் காரணமாகும். ஒருபுறம் வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாத நிலையில், தென் மாவட்டங்களில் ஒரு பாடத்தை நடத்த பல ஆசிரியர்கள் உள்ளனர். கல்வித்துறையைப் பொறுத்தவரை இரு தமிழகங்கள் இருப்பதையே இது காட்டுகிறது.

பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும், வட மாவட்டங்களில் ஆசிரியர்களே இல்லாமல், தென் மாவட்டங்களில் கூடுதலாக ஆசிரியர்கள் இருப்பதும் இப்போது புதிதாக ஏற்பட்ட சிக்கல் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளாகவே இந்த நிலை காணப்படுகிறது. ஆனால், ஊழல் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தும் ஆட்சியாளர்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை. ஏழைகளின் கல்வி ஆதாரமாக அரசு பள்ளிகள் தான் திகழ்கின்றன. ஏழைகள் பயில்கிறார்கள் என்பதாலேயே அரசு பள்ளிகளை ஆட்சியாளர்கள் சீரழித்து விடக்கூடாது. நடப்புக் கல்வியாண்டு நிறைவுக்கு வரும் நிலையில், தென் மாவட்டங்களில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் தேவைப்படும் இடங்களில் பணியமர்த்த வேண்டும். அதன்பிறகும் காலியாக உள்ள பணியிடங்களை போட்டித்தேர்வு மூலமும், தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்று பணிக்காக காத்திருப்பவர்கள் மூலமும் நிரப்ப வேண்டும்”
என அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

POPULAR POSTS