தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம். Reg No:655/2014. வெ.குமரேசன் , பொதுச் செயலாளர், EMail: tnbedcsvips@gmail.com WhatsApp: 9626545446
மலர்கள்
BREAKING NEWS
Flash News
Saturday 4 August 2018
Thursday 2 August 2018
Wednesday 1 August 2018
Sunday 29 July 2018
6,029, 'ஹை - டெக்' ஆய்வகங்கள் 60 ஆயிரம் கணினியுடன் பள்ளிகளுக்கு புது திட்டம்
தமிழக அரசு சார்பில்,
அரசு பள்ளிகளில், 420 கோடி ரூபாய் செலவில், 6,029, 'ஹை - டெக்' கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.தமிழக பள்ளிக் கல்வித்துறையில், கல்வித் தரத்தை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பாடத்திட்டம் மாற்றப்பட்டு, பாடப் புத்தகங்களில், க்யூ.ஆர்., கோடு மற்றும், 'பார் கோடு' இணைத்து, பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பார் கோடுகளை பயன்படுத்தி, வீடியோவாகவும் பாடத்தின் முக்கிய அம்சங்களை பார்க்க முடியும்.
அதுபோல, தமிழகம் முழுவதும், 3,000 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்புகள் துவக்கப்பட உள்ளன. இதற்காக, மாணவர்களுக்கு, 30 ஆயிரம், 'டேப்லெட்' என்ற, கையடக்க கணினிகள் வழங்கப்பட உள்ளன. இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசின், ஐ.சி.டி., என்ற, கணினி வழி கற்றல் திட்டத்தை, தமிழக அரசு முழுமையாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது.மத்திய அரசு நிதி உதவியுடன், இந்த திட்டம், ஐந்து ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், 'டெண்டர்' விடுவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதால், திட்டத்தை செயல்படுத்த முடியாமல், கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில், மத்திய அரசின் விதிகளை ஏற்று, ஐ.சி.டி., திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 3,090 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 2,939 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், ஹை - டெக் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த பணிகள் அனைத்தும், தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதற்காக, 420 கோடி ரூபாயில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில், சர்வதேச அளவில், பிரபலமான நிறுவனங்கள் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஆய்வகங்களில், தலா, 10 கணினிகள் வீதம், மொத்தம், 60 ஆயிரத்து, 290 கணினிகள், இணையதளம், 'வை - பை' வசதியுடன் இடம் பெறும்
கணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் புதிய விதிகள் அறிவிப்பு..
அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, கல்வித் தகுதியை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது
புதிய விதிமுறைப்படி, அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, விரைவில் கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்
பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், 6,000 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2,000 கணினி ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிகின்றனர்
இருப்பினும், பல மாவட்டங்களில், கணினி அறிவியல் பாடம் நடத்த, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.
இந்நிலையில், 748 அரசு பள்ளிகளில், தலா ஒரு கணினி அறிவியல் ஆசிரியரை நியமிக்க* *ஓராண்டுக்கு முன், பள்ளிக்கல்வி இயக்குனரகம் முடிவு செய்தது*
ஆனால், புதிய பாடத்திட்டப்படி, கலை பாடப்பிரிவுக்கு, 'கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்' என்ற பாடமும், தொழிற்கல்விக்கு, கணினி தொழில்நுட்பம் என்ற பாடமும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது
இந்த பாடங்கள் முக்கியமானதாக உள்ளதால், அனைத்து பள்ளிகளிலும், கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கான, கல்வித் தகுதி மாற்றி அமைக்கப்பட உள்ளது.
இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, புதிய கல்வித் தகுதிக்கான கோப்பை தயாரித்து, அரசின் அனுமதிக்காக அனுப்பியுள்ளனர்
தற்போதைய நிலையில், கணினி அறிவியல் பாடம் நடத்த, இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், கணினி பயிற்றுனர்கள் என்ற பதவியில் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, பாடம் எடுக்க வேண்டியுள்ளது
பள்ளிக்கல்வி விதிகளின்படி, பிளஸ் 1, பிளஸ் 2விற்கு, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்
எனவே, இந்த விதிகளின்படி, கணினி அறிவியல் பாட ஆசிரியர் பதவிக்கு, முதுநிலை படிப்புடன், பி.எட்., முடித்தவர்களை நியமனம் செய்ய, விதிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன
கணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் புதிய விதிகள் அறிவிப்பு...
கணினி ஆசிரியர்கள் கவனத்திற்கு அரசாணை இல்லை அறிவிப்பு மட்டும் தான்.
"பத்திரிக்கை செய்தி மட்டுமே அரசு தரப்பு செய்தி அன்று"
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014 .
ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
தமிழக அரசுப் பள்ளிஆசிரியர்களுக்கு
பயோமெட்ரிக் வருகைபதிவு இன்னும் ஒரு வாரக்காலத்தில் தமிழக அரசுநடைமுறைப்படுத்தஉள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்.
பயோமெட்ரிக் வருகைபதிவு இன்னும் ஒரு வாரக்காலத்தில் தமிழக அரசுநடைமுறைப்படுத்தஉள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்.
ரோட்டில் இன்று (ஜூலை29) நடைபெற்ற கொங்குவேளாளர் இளைஞர்சங்கத்தின் வாசக சாலைதிறப்பு விழாவில்அமைச்சர்கள்செங்கோட்டையன்,கே.சி.கருப்பணன்ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர்செய்தியாளர்களிடம்பேசிய அமைச்சர்செங்கோட்டையன், "அரசுப்பள்ளிகளில்மாணவர்களின் ஆங்கிலமொழித்திறனைமேம்படுத்தும் வகையில்கூடுதலாக ஒரு ஆங்கிலவகுப்பு நடத்த ஏற்பாடுசெய்யப்படும்.மாநிலத்தில் 32மாவட்டங்களிலும் உள்ளநூலகங்களிலும் ஐ.ஏ.எஸ்.அகாடமிகள் தொடங்கும்நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக இந்தஆண்டு 25 ஆயிரம்மாணவர்களுக்கு பட்டயக்கணக்கு சிறப்பு பயிற்சிஅளிக்கத் தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது.மாநிலத்தில் மூவாயிரம்பள்ளிகளில் ஸ்மார்ட்வகுப்புகள்ஏற்படுத்தப்பட்டு, 9, 10, 12ஆம் வகுப்புகள்அனைத்தும் கணினிமையமாக்கப்பட உள்ளது"என்று தெரிவித்தார்
பயோமெட்ரிக் வருகைபதிவு இன்னும் ஒரு வாரக்காலத்தில் தமிழக அரசுநடைமுறைப்படுத்தஉள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்.
பயோமெட்ரிக் வருகைபதிவு இன்னும் ஒரு வாரக்காலத்தில் தமிழக அரசுநடைமுறைப்படுத்தஉள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்.
ரோட்டில் இன்று (ஜூலை29) நடைபெற்ற கொங்குவேளாளர் இளைஞர்சங்கத்தின் வாசக சாலைதிறப்பு விழாவில்அமைச்சர்கள்செங்கோட்டையன்,கே.சி.கருப்பணன்ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர்செய்தியாளர்களிடம்பேசிய அமைச்சர்செங்கோட்டையன், "அரசுப்பள்ளிகளில்மாணவர்களின் ஆங்கிலமொழித்திறனைமேம்படுத்தும் வகையில்கூடுதலாக ஒரு ஆங்கிலவகுப்பு நடத்த ஏற்பாடுசெய்யப்படும்.மாநிலத்தில் 32மாவட்டங்களிலும் உள்ளநூலகங்களிலும் ஐ.ஏ.எஸ்.அகாடமிகள் தொடங்கும்நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக இந்தஆண்டு 25 ஆயிரம்மாணவர்களுக்கு பட்டயக்கணக்கு சிறப்பு பயிற்சிஅளிக்கத் தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது.மாநிலத்தில் மூவாயிரம்பள்ளிகளில் ஸ்மார்ட்வகுப்புகள்ஏற்படுத்தப்பட்டு, 9, 10, 12ஆம் வகுப்புகள்அனைத்தும் கணினிமையமாக்கப்பட உள்ளது"என்று தெரிவித்தார்
Subscribe to:
Posts (Atom)
POPULAR POSTS
-
தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு ஓர் கணினி பயிற்றுநர் பணி நியமனம் செய்ய உள்ளது. தமிழக அரசு வருகின்ற கல்வியாண்டு ஜீன் முதல் 6992...
-
முதல்வர் பிறந்தநாளில் முதல்வருக்கு கோரிக்கை வைத்த கணினி ஆசிரியர்கள்!!!... கலைஞரால் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி கணினி அறிவியல் பாட புத்தக...
-
60,000 கணினி ஆசிரியர்களும் ஒரே மாதிரியான (subject)தலைப்புகளில் ஈமெயில் செய்வோம்.. Subject: கலைஞரின் கனவு திட்டமான கணினி அறிவியல் பாடத்தை அரச...
-
அரசுப்பள்ளி கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வியில் மேன்மை அடையவும் ,அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்தவும், 60000 கணினி ஆசிரியர் குடும்பத்த...