பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தில் 3 குரூப்களுக்கு கணினி பாடத்தை இடம் பெற செய்த கல்வித்துறை, அதற்ெகன ஆசிரியர்களை நியமிக்காததால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2008ம் ஆண்டுக்கு பிறகு நிரந்தர கணினி அறிவியல் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை. இதனால் பெற்றோர் ஆசிரியர் சங்க நிதி மூலம் மிகக்குறைந்த ஊதியத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர்கள் பணி செய்து வந்தனர்.
கடந்த மாதம் நடந்த ஆசிரியர் கலந்தாய்வில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு எடுக்கும் நிரந்தர பணியிட கணினி அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இதனால் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சுமார் 600 கணினி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்பிற்கான புதிய பாடத்திட்டத்தின்படி அனைத்து குரூப் மாணவர்களுக்கும் கணினி அறிவியல், கணினி தொழில்நுட்பம், கணினி பயன்பாட்டியல் என 3 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கூடுதல் ஆசிரியர்கள் தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014 .
THANKS :தினகரன்..