மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Wednesday 16 May 2018

பிளாட்பாரத்தில் பள்ளி ஆசிரியர் - வாட்ஸ் அப் மூலம் கண்டுபிடித்த மாணவர்கள்

போபால் பிளாட்பாரத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் அநாதையாகக் கிடந்துள்ளார். அவரை வாட்ஸ் அப் வீடியோ மூலம் அடையாளம் கண்ட மாணவர்கள், குடும்பத்தினருடன் ஆசிரியரைச் சேர்க்க முயற்சி செய்துவருகின்றனர். 
விஜய் சோபி ஆசிரியர்
(PC -TOI)
இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் அப் மூலம் அடையாள காணப்படுபவர்கள் அதிகமாகிவிட்டனர். அந்ததளவுக்கு வாட்ஸ் அப் மக்களுக்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளது. 
மத்திய பிரதேசத்தில் போபாலில் பிளாட்பாரத்தில் முதியவர் ஒருவர் மயங்கிக் கிடந்தார். அவரை அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்தும், பார்க்காதப்படி கடந்து சென்றனர். முதியவர் மீது இரக்கப்பட்ட ஒருவர், தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து, அதை வாட்ஸ்அப் பில் பதிவிட்டுள்ளார். அந்த வாட்ஸ் அப் வீடியோ பல குரூப்களுக்கு ஷேர் செய்யப்பட்டது. 

இந்தச் சமயத்தில் முதியவரின் வீடியோவைப் பார்த்த ஒருவர் அதிர்ச்சியடைந்தார். வீடியோவில் இருக்கும் முதியவர், தனக்கு இயற்பியல் பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர் விஜய் சோபி என்று அடையாளம் கண்டார். உடனடியாக தன்னுடைய பள்ளி நண்பர்களுக்கு அந்த வீடியோவை ஷேர் செய்தார். அதோடு ஆசிரியரை மீட்கும் நடவடிக்கையில் நண்பர்களுடன் ஈடுபட்டார். 
பிளாட்பாரத்திலிருந்த ஆசிரியர் விஜய் சோபியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். பிறகு, ஆசிரியரின் குடும்பத்துடன் அவரைச் சேர்க்க நடவடிக்கை எடுத்துவருகின்றனர். ஆனால், ஆசிரியரின் குடும்பம் எங்கு இருக்கிறது. அவர் எப்படி இங்கு வந்தார் போன்ற விவரங்கள் கிடைக்கவில்லை. 
 இதுகுறித்து விஜய் சோபியிடம் கல்வி கற்ற மாணவர்கள் கூறுகையில், ``ஆசிரியர் விஜய் சோபி, 1990 ல் நாலந்தா பள்ளியில் பணியாற்றினார். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். போபால் நகரில் உள்ள கதார் சாலை பிளாட்பாரத்தில் பிச்சைக்காரர் போல மயங்கிக் கிடந்துள்ளார். அந்த வீடியோவைப் பார்த்து அவரை மீட்டுள்ளோம். விரைவில் அவரின் குடும்பத்தினருடன் சேர்த்துவிடுவோம். தற்போது ஆசிரியர் பேசும் நிலையில் இல்லை. இதனால் அவரின் குடும்ப விவரங்களைச் சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது'' என்றனர்.

No comments:

Post a Comment

POPULAR POSTS