மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Tuesday 15 May 2018

பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் ! பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியீடு !


தமிழகத்தில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகள் மே 16 ஆம் தேதி (புதன்கிழமை) காலை வெளியிடப்படும் நிலையில், அதை மாணவர்களுக்கு வெளியிடுவது குறித்து பள்ளிகளுக்கு கல்வித் துறை சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகள் மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் 3 இடங்கள் வரிசைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு முதல் மதிப்பெண் தரவரிசைப்படுத்தும் முறை கைவிடப்பட்டது. மேலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல்கள் அனுப்பிவைக்கப்பட்டு, அதன்பின் பள்ளிகளுக்கு வழங்கும் முறையும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.நடப்பாண்டில் மதிப்பெண் தரவரிசை கைவிடப்பட்டதால், தேர்வு முடிவுகள், மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள், அந்தந்தப் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் நேரடியாகவே அனுப்பி வைக்கப்படவுள்ளன.
மே 16 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவியரின் தேர்வு முடிவுகளை மின்னஞ்சல் மூலம் பதிவிறக்கம் செய்து, அதை அறிவிப்புப் பலகைகளில் ஒட்டவேண்டும் என கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. அதேநேரம், தனித்தனியாக மாணவ, மாணவியரின் செல்லிடப்பேசிகளுக்கும் குறுந்தகவல்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. செல்லிடப்பேசி இல்லாதவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று தேர்வு முடிவுகளை அறியலாம். மேலும், அனைத்துப் பள்ளிகளும் தேர்வு முடிவுகளை சாதனைபோல் மாணவர்களின் மதிப்பெண்ணைக் குறிப்பிட்டு விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது. தேர்வு முடிவு சதவிகிதத்தை குறிப்பிட்டும் அறிவிப்புகள் வெளியிடக்கூடாது என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மதிப்பெண், தேர்ச்சி விகிதம் போன்றவற்றை குறிப்பிட்டு தங்கள் பள்ளிகளை முதன்மைப்படுத்தும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 39,889 மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

POPULAR POSTS