மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday 23 June 2018

பள்ளி மாணவர்களுடன் மதிய உணவருந்திய கலெக்டர்


கேரள அரசு பள்ளியில், மதிய உணவு திட்டத்தின் தரத்தை சோதிக்க சென்ற கலெக்டர், மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய சம்பவம், பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள நீர்குன்னம் என்ற இடத்தில், ஸ்ரீதேவி விலாசம் என்ற அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.


இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.ஆலப்புழா மாவட்ட கலெக்டர், சுஹாஸ், இந்த பள்ளிக்கு, அதிரடியாக சோதனை நடத்த வந்தார்.


அப்போது மதிய நேரம் என்பதால், மதிய உணவு வழங்கப்படும் அறைக்கு சென்றார். அங்கு, மாணவர்கள், உணவருந்திக் கொண்டு இருந்தனர்.



உடனே, அவர்களுடன் அமர்ந்து, கலெக்டர் சுஹாசும், உணவருந்த தொடங்கினார். மாவட்ட கலெக்டர் தங்களுடன் அமர்ந்து உணவருந்துவதைக் கண்ட மாணவர்கள், உற்சாகம் அடைந்தனர்.

மாணவர்களுடன் உரையாடியபடி, அங்கு பரிமாறப்பட்ட சாதம், வெள்ளரிக்காய் குழம்பு, உருளைக்கிழங்கு பொறியல், மோர் ஆகியவற்றை, கலெக்டர் சாப்பிட்டார்.

உணவு தரமாக இருந்ததை தொடர்ந்து, பள்ளியில் உள்ள நுாலகம் மற்றும் கணிப்பொறி கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

மாணவர்களுடன், கலெக்டர் உணவருந்தும், 'வீடியோ' சமூக வலைதளங்களில், வேகமாக பரவி, பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

POPULAR POSTS