மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Sunday 17 June 2018

சிறப்பாசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோர் பட்டியல்: விரைவில் வெளியீடு:TRB





சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் நடந்த எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்று  சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி ேபான்ற சிறப்பு பாடங்களை கற்றுக் கொடுக்க சிறப்பாசிரியர்கள் உள்ளனர்.

இவர்கள் கடந்த ஆண்டு  வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் பள்ளிகளில் நியமிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் முதல்முறையாக மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 1,325 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு  ஆசிரியர் தேர்வாணையம் கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம்தேதி எழுத்துத்தேர்வை நடத்தியது. இத்தேர்வை 35,781 பேர் எழுதினர்.

 உத்தேச விடைகள்  அக்டோபர் 10ம் தேதி வெளியான நிலையில் தேர்வு முடிவுகள் நவம்பரில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், பல்வேறு காரணங்களால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

 சிறப்பாசிரியர் எழுத்துத்தேர்வு முடிவுகளை வெளியிட்டு  தங்களுக்கான வேலைவாய்ப்பை வழங்க அரசிடம் வேலையில்லா சிறப்பாசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 14ம்தேதி தேர்வுமுடிவுகள் வெளியானது.

இதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்களின் பட்டியலை விரைவில்  வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மேற்கொண்டுள்ளதாகவும், ஒரு பணியிடத்துக்கு 2 பேர் என்ற வீதத்தில்  பட்டியல் வெளியாகும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

POPULAR POSTS