சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் நடந்த எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி ேபான்ற சிறப்பு பாடங்களை கற்றுக் கொடுக்க சிறப்பாசிரியர்கள் உள்ளனர்.
இவர்கள் கடந்த ஆண்டு வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் பள்ளிகளில் நியமிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் முதல்முறையாக மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 1,325 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம்தேதி எழுத்துத்தேர்வை நடத்தியது. இத்தேர்வை 35,781 பேர் எழுதினர்.
உத்தேச விடைகள் அக்டோபர் 10ம் தேதி வெளியான நிலையில் தேர்வு முடிவுகள் நவம்பரில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், பல்வேறு காரணங்களால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
சிறப்பாசிரியர் எழுத்துத்தேர்வு முடிவுகளை வெளியிட்டு தங்களுக்கான வேலைவாய்ப்பை வழங்க அரசிடம் வேலையில்லா சிறப்பாசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 14ம்தேதி தேர்வுமுடிவுகள் வெளியானது.
இதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்களின் பட்டியலை விரைவில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மேற்கொண்டுள்ளதாகவும், ஒரு பணியிடத்துக்கு 2 பேர் என்ற வீதத்தில் பட்டியல் வெளியாகும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment