மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Tuesday 1 May 2018

ஆசிரியர்கள் பீதி: அரசுப்பள்ளி குறைந்து வரும் மாணவர் சேர்க்கையால்..!




சேலம்: அதிகரித்து வரும் உபரி ஆசிரியர் பணியிடங்கள், பள்ளிகளை மூட நடவடிக்கை உள்ளிட்டவைகளால், பீதியடைந்துள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்காண்டு, மாணவர் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருகிறது. இதனால், 8,000க்கும் மேற்பட்ட உபரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாகியுள்ளன. பற்றாக்குறை இல்லாததால், வேறு பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை பயன்படுத்துவதிலும், சிக்கல் நிலவி வருகிறது. ஆசிரியர்கள் ஓய்வு பெறுவது, பதவி உயர்வு பெறுவது உள்ளிட்டவைகளால், காலியாகும் இடங்களுக்கு, உபரி ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் என்ற பெயரில், கட்டாய இடமாற்றம் வழங்கப்படுகிறது. இந்தாண்டு, நகர்ப்பகுதிகளில், 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளும், கிராமப்பகுதிகளில், 30 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தகவல் பரவி வருகிறது. இதுநாள் வரை, மாணவர் சேர்க்கையில், அலட்சியமாக இருந்த ஆசிரியர்கள், பீதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து, கல்வி அலுவலர்கள் கூறியதாவது: மாணவர்கள் எண்ணிக்கை குறையும் போது, அப்பள்ளி சீனியாரிட்டியில், கடைசி இடத்தில் உள்ளவர், வேறு பள்ளிக்கு மாற்றப்படுவது வழக்கம். இது இப்படியே குறைந்து, பல பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாக மாறியுள்ளன. தற்போது அவையும் மூடப்பட உள்ளதாக, தகவல் பரவி வருவதால், அப்பள்ளி ஆசிரியர்கள், தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மாவட்டத்துக்குள் உபரி பணியிடங்கள் இல்லாத நிலையில், வேறு மாவட்டத்துக்கு மாறுதல் செய்தால், வீண் அலைச்சல் ஏற்படும். மேலும், மீண்டும் பணிமாறுதல் பெற்று வருவதற்குள், பல லட்ச ரூபாய் வரை செலவழிக்க வேண்டியுள்ளது. இதற்கு பதில், மாணவர் எண்ணிக்கையை அதிகரித்தாலே, ஆசிரியர் பணியிடத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். இதனால், பல ஆசிரியர்கள், தங்களது கைக்காசை போட்டு, அரசு பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் போட்டிகள் நடத்தி, மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 comment:

  1. அரசு பள்ளி ஆசிரியர்களே உங்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருங்கள். உங்களின் கற்பித்தல் திறன் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லாததால்தான் தனியார் பள்ளிகளில் உங்கள் பிள்ளைகளை சேர்த்துவிடுகிறீர்கள்.

    ReplyDelete

POPULAR POSTS