பெங்களூரு: பெங்களூருவில் நீட் தேர்வு எழுதுவதற்காக சுவர் ஏறி குதித்த 3 மாணவர்களை தேர்வு கண்காணிப்பாளர்கள் வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்தது. பெங்களூரு காமராஜர் சாலையில் உள்ள ராணுவ அரசு பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் காலை 9.30 மணிக்கு நடைபெற்ற தேர்வில் கலந்து கொள்வதற்காக மாணவர்கள் அனைவரும் முன்கூட்டியே காத்திருந்தனர். சரியாக 9.30 மணிக்கு அனைவரும் தேர்வு அறைக்கு அனுப்பபட்டனர்.
இந்நிலையில் ஹுப்பளி, பீதர், கலபுர்கியை சேர்ந்த 2 மாணவிகள் உள்பட 3 பேர் 2 நிமிட தாமதமாக தேர்வு மையத்திற்கு வந்தனர். அவர்களை நுழைவாயிலின் வெளியே நிறுத்திய பாதுகாப்பாளர்கள், தேர்வு கண்காணிப்பாளர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்களும், அங்கிருந்தவர்களும் மாணவர்களை சுவர் ஏறி குதித்து சென்று தேர்வு எழுதும்படி கூறினர்.
இதையடுத்து, 3 பேரும் பள்ளியின் நுழைவாயில் கேட் மற்றும் சுவரை ஏறி குதித்து சென்று தேர்வு அறைக்குள் சென்றனர். அங்கிருந்த தேர்வு அதிகாரிகள் 3 பேரையும் இழுத்து வந்து வெளியே விட்டு சென்றனர். இந்த காட்சிகள் அங்கிருந்த பெற்றோர் மற்றும் பிற மாணவர்களின் தாய், தந்தையை அதிர்ச்சி அடைய செய்தது. தேர்வு அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்கள், மாணவர்களை வெளியே துரத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்
பெங்களூரு: பெங்களூருவில் நீட் தேர்வு எழுதுவதற்காக சுவர் ஏறி குதித்த 3 மாணவர்களை தேர்வு கண்காணிப்பாளர்கள் வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்தது. பெங்களூரு காமராஜர் சாலையில் உள்ள ராணுவ அரசு பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் காலை 9.30 மணிக்கு நடைபெற்ற தேர்வில் கலந்து கொள்வதற்காக மாணவர்கள் அனைவரும் முன்கூட்டியே காத்திருந்தனர். சரியாக 9.30 மணிக்கு அனைவரும் தேர்வு அறைக்கு அனுப்பபட்டனர்.
இந்நிலையில் ஹுப்பளி, பீதர், கலபுர்கியை சேர்ந்த 2 மாணவிகள் உள்பட 3 பேர் 2 நிமிட தாமதமாக தேர்வு மையத்திற்கு வந்தனர். அவர்களை நுழைவாயிலின் வெளியே நிறுத்திய பாதுகாப்பாளர்கள், தேர்வு கண்காணிப்பாளர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்களும், அங்கிருந்தவர்களும் மாணவர்களை சுவர் ஏறி குதித்து சென்று தேர்வு எழுதும்படி கூறினர்.
இதையடுத்து, 3 பேரும் பள்ளியின் நுழைவாயில் கேட் மற்றும் சுவரை ஏறி குதித்து சென்று தேர்வு அறைக்குள் சென்றனர். அங்கிருந்த தேர்வு அதிகாரிகள் 3 பேரையும் இழுத்து வந்து வெளியே விட்டு சென்றனர். இந்த காட்சிகள் அங்கிருந்த பெற்றோர் மற்றும் பிற மாணவர்களின் தாய், தந்தையை அதிர்ச்சி அடைய செய்தது. தேர்வு அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்கள், மாணவர்களை வெளியே துரத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்
No comments:
Post a Comment