கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன*
ஏப்ரல், 21ல் துவங்கிய கோடை விடுமுறை, 41 நாட்களை கடந்து, நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, வகுப்புகள் துவங்க உள்ளன. சில தனியார் பள்ளிகள் மட்டும், பள்ளி திறப்பை, 4ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளன
புதிய கல்வி ஆண்டு துவங்குவதை ஒட்டி, மாணவர்கள் தேர்ச்சியின் அடிப்படையில், இன்று புதிய வகுப்புகளுக்கு மாற்றப்படுகின்றனர். பல பள்ளிகளில், புதிய வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு, வாழ்த்து கூறுவதோடு, இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு பிரார்த்தனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்*
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இலவச பாட புத்தகங்களும், நோட்டு புத்தகங்களும் இன்று வழங்கப்பட உள்ளன. அதேபோல, மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு, இலவச சீருடையும் வழங்கப்படுகிறது*
புதிய கல்வி ஆண்டில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும், ஒன்பது, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கும், சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. ஆறு முதல் எட்டு வரையிலான மாணவர்களுக்கு, பழைய நிறத்திலேயே சீருடை வழங்கப்படுகிறது
No comments:
Post a Comment