மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Friday 6 April 2018

அரசுப்பள்ளியை காக்கும் ஆசிரியர்கள்!!சில தனியார் பள்ளிகளுக்கு அங்கிகாரம் பல அரசுப்பள்ளிகளின் மூடு விழா?? அரசு என்ன தான் செய்கின்றது?

➠❄கணினி கல்வியின் புதுமை❄➠

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கணினிப் பயன்பாடு எட்டாக்கனியாகவே இருந்தது. அந்த எட்டாக் கனியை எட்டும் கனியாக மாற்றி இருக்கிறார்கள். ஆசிரியர்கள்!அரசு அல்ல!

"இதுவரை, தமிழ்நாட்டில் எந்த அரசு நடுநிலைப் பள்ளியிலும் கம்யூட்டர் ஆய்வக வசதி என்பது இல்லை. (ஓரிரு கம்யூட்டர்கள் இருக்கக்கூடிய பள்ளிகள் இருக்கின்றன.) ஆங்கில வழியில் படிக்கக் கூடிய பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் யுகேஜி முடிப்பதற்குள், கணினி போன்ற அத்தியாவசிய தொழில்நுட்ப அறிவைப்பெறத் தொடங்கி விடுகிறார்கள். அரசு நடுநிலைப் பள்ளிகளில் மூன்று மடிக்கணினி மற்றும் கணினி தரப்பட்டு கற்றல் கற்பித்தலுக்கு பயன்படுத்துங்கள் என்று அரசே சொல்லும். ஆனால், பல பள்ளிகள் முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா என்பது பெரும் கேள்விக் குறி."


தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி போன்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடிய ஆசிரியர்களின் ஈடுபாடு குறிப்பிடத்தக்கது..


23 கம்யூட்டர்கள்... ஏ.சி. வகுப்பறை... இன்வெட்டர்... மக்களைக் கவரும் கிராமத்து அரசுப் பள்ளி..

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கணினிப் பயன்பாடு எட்டாக்கனியாகவே இருந்தது. 
அந்த எட்டாக் கனியை எட்டும் கனியாக மாற்றி இருக்கிறார் கடலூர் மாவட்டம் கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் ப.வசந்தன்.



சர்வதேச தரத்தில் ஒரு அரசு பள்ளி... தலைமை ஆசிரியர் சொல்லும் சக்சஸ் ஃபார்முலா!

”மதுரை மாவட்ட ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி"

கரும்பலகையில் இருந்து கணினிக்கு மாறிய அரசு பள்ளி..

நெல்லை அருகேயுள்ள பாலாமடை அரசு பள்ளி..

கணினி செயலி மூலம் கற்பித்தல்: மதகரம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியரின் புதிய முயற்சி


திருவாரூர் அருகேயுள்ள மதகரம் அரசு தொடக்கப் பள்ளி.


கணினிவழி கல்விப் புரட்சியில் அரசு பள்ளி ஆசிரியர்.

புதுக்கோட்டை, கண்ணக்கன்காடு அரசு நடுநிலைப் பள்ளி.



கொத்தவாசல்  அரசு பள்ளியில் நவீன கணினி ஆய்வகம்.


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.


அரசுப்பள்ளியை கணினி பள்ளியாக மாற்றிய ஆசிரியர்



புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அடுத்த மேலூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி.

ரோட்டரி கிளப் மூலம் புரொஜக்டரை நன்கொடையாகப் பெற்று அதன்மூலம் பாடங்களை திரையிட்டுக் காண்பிக்கிறோம்.


3 மாணவர்களுடன் மூடு விழா காணும் நிலையில் இருந்த அரசுப் பள்ளியை தரம் உயர்த்திய ஆசிரியர்!



பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசு பள்ளிகளை தேடி வரும் மாணவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பள்ளிகளின் தரம் உயர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்  ஆனால் தற்போது  மாணவர் எண்ணிக்கை குறைவால் பல பள்ளிகள் மூடு விழா காண உள்ளது.


அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவு!!

அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பெருமளவு சரிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில், மாணவர் எண்ணிக்கை, 1.40 லட்சம் குறைந்திருப்பது, கல்வித்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நடுநிலைப்பள்ளிகள்மூடும் அபாயம் !

 தொடக்கல்வியில் மட்டும் அல்ல மாணவர் சேர்க்கை சரிகின்ற கவலை ஒரு புரம் இருக்க நடுநிலைப் பள்ளிகளிலும் இதே நிலை தான் காணப்படுகிறது.

 மொத்தமுள்ள 9587 அரசு நடுநிலைப் பள்ளிகளில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 3378 பள்ளிகளில் மட்டுமே 80&க்கும் அதிகமான மாணவர்கள் உள்ளனர். மீதமுள்ள 6209 பள்ளிகளில் 80-க்கும் குறைவானவர்களே படிக்கின்றனர். அதாவது இப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் சராசரியாக 10 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர்.

 "மேலும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் மாற்றப்பட உள்ளனர்"

இந் நிகழ்வு தொடர்ந்தால் விரைவில் தமிழகத்தில் பல அரசுப்பள்ளிகள் காணமல் போகும் நிலை விரைவில்   உருவாக்கிவிடும் அரசு!

இதற்கு மிக முக்கிய காரணம் தனியார் பள்ளிகள் தொடங்க அரசே வழங்கும்  அங்கிகாரமும் தனியாரக்கு பள்ளிக்கும் அரசுப்பள்ளிகளுக்கும் தனித்தனி கலைத்திட்டம் ஏன் ? அரசு வழங்குகின்றது 5பாடங்களுக்கு மேல் கட்டுப்பாடு அற்ற கல்விக்கு  அங்கிகாரம் வழங்குவது தான் முக்கிய காரணம். 
""தனியார் பள்ளியின் கலைத்திட்டம்""

இந்நிலையே தொடர்ந்தால் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை விரைவில் மூடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது அரசு கருத்தில் கொண்டு சமமாக கல்வி மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும் .

இந்த நிலை மாற மத்திய அரசு கொடுத்த கோடி நிதியை முறையாக பயன்படுத்தி அரசுப்பள்ளியை மாண்புமிகு தமிழக அரசு காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


'ஆசிரியர் பணி என்பது அறப் பணி; அதற்கு உன்னை அர்ப்பணி'


திருவெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச்செயலாளர் ,
9626545446
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள்சங்கம்655/2014.

No comments:

Post a Comment

POPULAR POSTS