தமிழ்ப் பண்பாட்டையும் வரலாற்றையும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் படைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இடம்பெற்றது மாணவர்களுக்கான " தமிழர் அறிவியல் " எனும் போட்டி.
கட்டடக் கலை, மருத்துவம் போன்ற தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உயர்நிலை, தொடக்கக்கல்லூரி மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
30க்கும் மேற்பட்ட குழுக்களிலிருந்து சிறந்த 2 படைப்புகள் நேற்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் படைக்கப்பட்டன.
தொடக்கக் கல்லூரிப் பிரிவில் முதல் பரிசை குளோபல் அனைத்துலக இந்தியப் பள்ளி (Global Indian International) வென்றது.
உயர்நிலைப் பள்ளிப் பிரிவில் துமாசிக் தொடக்கக் கல்லூரியின் IP திட்டத்தில் பயிலும் உயர்நிலை 2 வகுப்பு மாணவர்கள் முதல் பரிசை வென்றனர்.
இந்தப் போட்டி தங்களுக்குத் தமிழ்மொழியிலும் வரலாற்றிலும் அதிக ஆர்வத்தைத் தூண்டியதாக மாணவர்கள் கூறினர்.
தமிழ்மொழி மாதத்தையொட்டி, அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்திருந்தது.
No comments:
Post a Comment