மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Sunday 22 April 2018

`காமராஜர் பள்ளிகளை திறந்தார்... எடப்பாடி அரசு அதனை மூடுகிறது' - ஆசிரியர் சங்கம் காட்டம்!

`காமராஜர் ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிகளைத் திறந்தார். ஆனால், தற்போதைய தமிழக அரசுப் பள்ளிகளை மூடி வருகிறது என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

கரூரில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்தச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரான அ.சங்கர்,    ``காவிரி மேலாண்மை வாரியத்தினை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு அமைத்திட வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிடவும், ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்தவும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். 
மேலும், அரசு உதவிப் பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும். எட்டாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட முரண்பாடுகளை நீக்கிடவும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்கிடவும், சி.பி.எஸ் ரத்து செய்திடவும், அனைத்து வகை ஊழியர்களையும் நிரந்தரப்படுத்திடவும் அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம். கல்விக்கண் திறந்த காமராஜர் அனைத்துக் கிராமத்திலும் பள்ளிகள் திறந்தார். அனைவருக்கும் கல்வி கிடைக்கப் பாடுபட்டார். 
ஆனால், தற்போது ஒவ்வொரு பள்ளியையும் எவ்வாறு மூடுவது என்றும் ஆசிரியர்களை எவ்வாறு களையெடுப்பது என்றும் எடப்பாடி அரசு ஆலோசித்து வருகிறது. அதற்கான முயற்சிகள் எடுப்பதை அரசு கைவிட வேண்டும். தேர்வு விகிதத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை அறிவிக்க அமைச்சர் செங்கோட்டையன் சொன்னது சிறப்பான விசயம். அதேநிலையில், அந்தக் கட்டுப்பாடு அரசுப்பள்ளிகளில் மட்டுமே கடைப்பிடிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் அதைக் கடைப்பிடிக்கவில்லை" என்று குற்றம்சாட்டினார்.

No comments:

Post a Comment

POPULAR POSTS