மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday 7 April 2018

அரசுப்பள்ளிக்கு கணினி மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கு உதவி.....!


அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி :

கடலூர் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் முன்னாள் மாணவர்கள் சார்பில் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
 கடலூர் முதுநகர் சான்றோர்பாளையத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1952-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் சராசரியாக 750 பேர் வரை படித்து வந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த நிலை, தற்போது 149 மாணவர்கள் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது.
 எனவே, இந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 40 பேர் ஒன்றிணைந்து மாணவர் சேர்க்கைக்காக வெள்ளிக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர். "நாங்களும் இந்தப் பள்ளியில் படித்து உயர்ந்தவர்களே' என்ற கோஷத்துடன் அந்தப் பகுதியில் உள்ள பெற்றோர்களிடம் தங்களது பிள்ளைகளை அரசு நடுநிலைப் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தினர். இதன்படி ஒரே நாளில் 15 மாணவர்களையும் சேர்த்தனர். அரசுப் பள்ளியில் சேருபவர்களுக்கு கூடுதலாக அரசு சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
 பேரணியில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜுலியா மேரி, கல்வி மேற்பார்வையாளர் சிவராமன், ஆசிரியைகள், சமூக ஆர்வலர் ரோஜா, பாரதி, காந்திமதி, உமா மகேஷ்வரி, யோகேஷ்வரி, வழக்குரைஞர் லெனின் ஆகியோர் கலந்துகொண்டனர். கணினி வழிக் கல்வி, தொழில்நுட்பக் கல்விக்கு உதவி புரிவதாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்ததாக பள்ளி ஆசிரியர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

POPULAR POSTS