இலவச கல்வி திட்டத்தில் சேர்ந்து இளங்கலை பட்டப் படிப்பு படிக்க ஏழை மாணவர் கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் இராம.சீனுவாசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஏழை மாணவர்கள் இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் கடந்த 2010 முதல் சென்னை பல்கலைக்கழக இலவச கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வருகிற கல்வி ஆண்டில் (2018-19) சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற தனியார் சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருப்பவை) சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், விவசாயம் மற்றும் இதர சிறு வேலை செய்யும் பெற்றோரின் பிள்ளைகள், குடும்பத்தில் பட்டப் படிப்புக்கு வரும் முதல்தலை முறையைச் சேர்ந்தவர்கள், கைம்பெண், கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளை கள் ஆகியோருக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப் படும். மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இலவச கல்வி திட்டத்தில் சேர்ந்து படிப்பதற்கான விண்ணப்பத்தையும் விவரங்களை யும் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.unom. ac.in) இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment