மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Monday, 9 April 2018

கணினி ஆசிரியர்களை அரசுப்பள்ளியில் நியமிக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில மாநாட்டில் வலியுறுத்தல்.!.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட மாநாடு கரூரில் நாரதகானசபாவில் நேற்று நடந்தது. மாநாட்டை மாநில தலைவர் முத்துச்சாமி தொடங்கி வைத்தார். 


ஆசிரியர்கள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு 10 லட்சம் தபால் அட்டைகள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. நாளை (இன்று) முதல் ஒரு ஆசிரியர்கள் 25 முதல் 100 தபால் அட்டை வரை அனுப்புவார்கள். பொதுமக்களிடமும் கையெழுத்து பெற்று அனுப்பப்படும்.


இடைநிலை ஆசிரியர்கள் 35 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 

அனைத்து நிலைகளிலும்
பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு முத்துசாமி கூறினார்.

முன்னதாக மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெரியசாமி  மாநாட்டு அறிக்கையை வாசித்தார்.

 மாநாட்டு அறிக்கை:

மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 

மருத்துவர்களுக்கு உள்ளதை போல ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்.

 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

 இதில் மாநாட்டு தலைவர் சுந்தரகணேசன், பொது செயலாளர் செல்வராசு, மாநில துணை தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி 
மதிப்புமிகு மாநில தலைவர் முத்துச்சாமி ஐயா அவர்களுக்கு
40000கணினி ஆசிரியர்கள்  குடுபத்தின்  சார்பாக மனமார்ந்த நன்றி பல ஐயா,


திரு வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச்செயலாளர் ,
9626545446 
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.

No comments:

Post a Comment

POPULAR POSTS