மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Monday 23 July 2018

அரசுப் பள்ளிகளில் 4 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 10 லட்சம் குறைவு!




10 ஆண்டுகள் முன்பு வரை,  அரசு பள்ளிகளில் 90 லட்சம் மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 30 லட்சம் மாணவர்களும் படித்து வந்தனர். இந்த நிலை தற்போது தலைகீழாக மாறியிருக்கிறது. அதுவும், கடந்த நான்கு ஆண்டுகளில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மிக கடுமையாக சரிந்திருக்கும் அதிர்ச்சித் தகவல், சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட புத்தகத்தின் மூலமாகவே வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது..


இதன்படி, 2014-15ல் அரசு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 56 லட்சத்து 55 ஆயிரத்து 628 மாணவர்கள் படிப்பதாக கூறப்பட்டது. இது, 2018 -19 ல் 46 லட்சத்து, 60 ஆயிரத்து 965 ஆக குறைந்துள்ளது, கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


நான்கே ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 10 லட்சம் சரிந்திருக்கிறது.


இதேநேரத்தில், தனியார் பள்ளி மாணவர் எண்ணிக்கையை பொறுத்தவரை, 2014-15-ல், 45 லட்சத்து 96 ஆயிரத்து 909 ஆகவும், 2018-19-ல் 52 லட்சத்து 71 ஆயிரத்து 543 ஆக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


நகரங்களுக்கு புலம் பெயரும் மக்கள், தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதே, அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிய முக்கிய காரணம் என கூறும், கல்வியாளர் அஜீத் பிரகாஷ் ஜெயின், தனியார் பள்ளிகளை போல், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் நவீன முறைகளில் பாடம் நடத்த பயிற்சி அளித்தால், மாணவர் எண்ணிக்கை மேலும் சரியாமல் இருக்கும் என்கிறார்.  



இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி, அவர்களுக்கான கட்டணத்தையும் அரசே கொடுக்கும் நிலை இருப்பதை சுட்டிக்காட்டும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், அதையும் தாண்டி, மாணவர்களை சேர்க்க ஆசிரியர்களும் பல்வேறு முயற்சிகளை எடுக்கிறோம் எனவும் தெரிவிக்கின்றனர்.



இதே நிலை இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடித்தால், அரசு பள்ளிகளே இல்லாத அபாய நிலை உருவாகிவிடும் என்பதால், இந்த விவகாரத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே கல்வியாளர்களின் வேண்டுகோள்

1 comment:

  1. அரசு பள்ளிகளின் கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டும். எந்த பள்ளி மாணவன் வகுப்பறை சுத்தம் செய்வதை எந்த பெற்றோர் ஏற்றுக்கொள்வார்கள்.

    ReplyDelete

POPULAR POSTS