தீபம் + ஒளி=தீபாவளி
- ஆம்,
தமக்குள் நிறைந்திருக்கும்
மாய இருள்தனைப் போக்க
அறிவுத்தீயை தீட்டி
வரிசை வரிசையாய் அகல் ஒளி ஏற்றி
வெளிச்சத்தை மூட்டி
நமக்குள் மறைந்திருக்கும்
தீய எண்ணங்களை
சாதி மத பேதம் துறந்து
பொறாமை கோபம் போன்ற
அழுக்குகளை இன்றோடு அகற்ற
நல்ல எண்ணெய் தேய்த்து குளித்து
மன மாற்றம் பெற்றிட
புத்தாடைகள் வாங்கி அணிந்து
புத்துணர்வோடு வெளிவந்து
ஒருவரோடு ஒருவர் பேசி
உணர்ந்து புரிந்து
அனைவரும் சமமாய் இணைந்து
இனிப்புகளைப் பகிர்ந்துண்டு
விட்டுக்கொடுத்து கொண்டாடி மகிழ்வோம்
இவ்வாண்டிலிருந்து... !
அனைவருக்கும் இனிதான தங்கள் இல்லத்தில் இறைவன் வாழ்த்த
தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்
இவண்..
திரு வெ.குமரேசன்,
9626545446,
மாநிலப் பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.® பதிவு எண்:655/2014.
No comments:
Post a Comment