முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமரும், பா.ஜ.க மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் இன்று மாலை 5.5 மணிக்கு காலாமானார். அவருக்கு வயது 93. உடல்நலக்குறைவு காரணமாக வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை நேற்று முதல் மோசமாகி வந்ததாக மருத்துமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்று இன்று மாலை அவர் உயிரிழந்தார். முன்னாள் பிரதமர் மறைவையடுத்து தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment