1.பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு 1000₹ வழங்கினோம்
2.சொந்த செலவில் ஸ்மார்ட் போர்டு வைத்தோம்
3.தரமான சீருடை கொடுத்தோம்
4.தரமான காலணி கொடுத்தோம்
5.பள்ளிக்கு வண்ணம் பூசினோம் வண்ண ஓவியம் வரைந்தோம்
6.ஸ்பான்சர் பிடிச்சி வகுப்பறை கட்டினோம் சுற்றுச்சுவர் கட்டினோம்
7.பசங்க பள்ளிக்கு வர சொந்த செலவில் வாகன வசதி செய்தோம்
8.கணினி வாங்கினோம் கக்கூஸ் கட்டினோம்
9.தரையோடு பதித்தோம்
10.குளிரூட்டப்பட்ட அறை அமைத்தோம்
#இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ஆசிரியர்களின் செயல்பாடுகளை...இது எ ல்லாம் எதற்கு யாருக்கும் இல்லா அக்கறை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் ஏன் ஏன்....
#தன்னை காப்பாற்றிக்கொள்ளவா
#மாணவர்களை தக்க வைக்கவா
#அரசுக்கு இல்லா அக்கறை ஆசிரியர்களுக்கா
#அரசு பள்ளிகளை காப்பாற்றவா
#மாணவர்கள் மீது உண்மை அக்கறையா
#மற்ற துறையில் உள்ளோர் தன் பணிபுரியும் இடத்தை முன்னேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் #கல்வித்துறையில் மட்டும் இந் நிலை ஏன்
#ஆக்கபூர்வ பதிலை எதிர்நோக்கி உங்களில் ஓர் ஆசிரியை by facebook.
இதற்கு எல்லாம் காரணம் அரசு தான். பணியிடங்களை உருவாக்குவதும் அரசு. பணி நிரவல் செய்வதும் அரசு. 25 சதவீத இடம் தனியார் பள்ளிகளுக்கு வழங்க சொல்லி விட்டு அரசே நம் பள்ளி ஆசிரியர் களின் தகுதிகளை மக்களிடம் எடை போட்டு பார்க்க வைத்து விடுகிறது. எவ்வளவு மாற்றம் வந்தாலும் அரசு பள்ளிகளின் கட்டிட அமைப்பு கூட்டி பெருக்க ஆள் போடாத சந்தர்ப்பத்தில் எப்படி மக்கள் அரசு பள்ளியை நாடுவர்.
ReplyDelete