மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Friday 1 June 2018

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்: விரைவில் வழங்க ஏற்பாடு


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்னும் சில தினங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 16-ஆம் தேதி வெளியிடப்பட்டன.


 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு மே 6-ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளன.


 இந்நிலையில் எம்.பி.பி.எஸ். பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே அதிகரித்துள்ளது.
 இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை உயரதிகாரி கூறியது:


 மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல் குறிப்பேடு தமிழக அரசின் ஒப்புதலுக்கு இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. அதனை உடனடியாகச் சமர்ப்பிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு தினங்களில் குறிப்பேடு சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கு அரசு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 தகவல் குறிப்பேடுக்கான ஒப்புதல் பெற்ற பிறகு விண்ணப்ப விநியோகம் தொடங்கும். எனவே, இன்னும் சில தினங்களிலேயே விண்ணப்ப விநியோகம் தொடங்கும்.

No comments:

Post a Comment

POPULAR POSTS