கடந்த ஆண்டு, ஒரு லட்சத்து 76 ஆயிரம் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த மாணவர்களில் சுமார் 2 ஆயிரம் மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
ஒரு லட்சத்து 46 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். 30 ஆயிரம் இடங்களில் யாரும் விண்ணப்பிக்கவில்லை. இந்த நிலையில், இன்ஜினியரிங் கலந்தாய்வின் முடிவில், 89 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன.
மொத்த இடங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் மாணவர்கள் சேரவில்லை.
இந்த ஆண்டு முழுமையாக இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுவதால் தகுதியுள்ளவர்களின் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதனால் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.
முக்கிய அரசுக்கல்லூரிகள் அல்லது பிரபலமான தனியார் கல்லூரிகளில் சேர்ந்தால் மட்டுமே இன்ஜினியரிங் படித்து முடித்தும் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்று மாணவர்கள், பெற்றோர் நினைக்கிறார்கள்.
இதனால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும், 50 சதவீத இடங்கள் காலியாக இருக்க வாய்ப்புள்ளதாக இன்ஜினியரிங் பேராசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment