ஊரு உலகமே கம்ப்யூட்டர்ல தான் இப்போ இயங்கிட்டு இருக்கு!
மூலை முடுக்கெல்லாம் கணினி மயமா மாறிட்டு இருக்கு. அப்புறம் ஏன் இந்த கவர்மெண்ட் மட்டும் இந்த விஷயத்தில் இவ்வளவு அசட்டையா இருக்கு.
அவங்களுக்கு கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல படிக்கிற பசங்களை பற்றி அக்கறையே இல்லியா?
நாமெல்லாம் கம்ப்யூட்டர் சயின்ஸ்ல பி.எட். படிச்சதனால் வேலை வேணும்னு கேட்கிறதை இரண்டாம்பட்சமா வச்சிகட்டும். ஒவ்வொரு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியுளும் தேவையான அளவுக்கு கணிணி ஆசிரியர்களை ஏன் நியமிக்காம இருக்காங்க.
கண்கெட்ட பிறகு எதுக்கு சூர்ய நமஸ்காரம் அப்படீங்கிற மாதிரி இந்த கணிப்பொறி யுகத்தில் வாழ்ந்துகிட்டு, ஒரு முன் யோசனை இல்லாமலா ஒரு கல்வித்துறை இயங்கிட்டு இருக்கு?
இதெல்லாம் பெரிய கொடுமை, நம்மளை மாதிரி கிராமப்புற, ஏழை குடும்பங்கள் எல்லாம் நிறைய அரசாங்க பள்ளிக்கூடங்களை நம்பி தான் அவங்க பசங்களை படிக்க அனுப்பறாங்க. அவங்களுக்கு இப்போதைக்கு அடிப்படை தேவையான கணினி அறிவியலை கற்பிக்க வைக்கணும்னு ஏன் ஒரு கல்வியாளருக்கும், கல்வித்துறையில் இருக்கும் உயரதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் தோன்றவே இல்லை.
இப்போ கணினி இல்லாத துறை எது இருக்கு? அப்படி இருக்கறப்போ அதை பள்ளியில் கற்பிக்கணும்னு ஏன் ஒருத்தருக்கும் தோணலை?-உங்களில் ஒருவன்..
No comments:
Post a Comment