மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Monday, 28 May 2018

Flash News : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை தமிழக அரசு வெளியீடு - அறிவிப்பு

Flash News : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை தமிழக அரசு வெளியீடு - அறிவிப்பு.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் 100 நாட்களாக அமைதியான முறையில் போராடி வந்தனர். 100வது நாளில் போடப்பட்ட 144 தடை உத்தரவை மீறி மக்கள் போராட்ட்த்தில் ஈடுபட்ட்தால் அவர்களை கட்டுப்படுத்த அரசு அவ்ர்கள் மீது துப்பாக்கி சூட்டினை நட்த்தியது இதில் 13 பேர் உயிரிழந்தனர் 19பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் இன்று தூத்துகுடியில் இயல்பு நிலை திரும்பியதை ஒட்டி துணை முதல்வர் பன்னீர் செல்வமும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் காயமுற்றவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினர்.
பின் மதியம் சென்னை அமைச்சர்கள் முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையின் முடிவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணையை வெளியிட்டுள்ளார். ஆலைக்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்திரவிட்டதையொட்டி ஸ்டெர்லைட் நிறுவனம் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்காடி மீண்டும் காப்பர் தயாரிக்க அனுமதி பெற்றது. இதனையொட்டி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் இந்த அரசாணை முக்கியத்துவம் வாய்ந்த்தாக கருதப்படுகிறது.
ஜல்லிக்கட்டுக்கு பிறகு மீண்டுமொரு மக்கள் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. இந்த வெற்றி 13 பேர்களின் உயிரை பழிவாங்கியே கிடைத்துள்ளது என்பதை இனி வரும் ஆட்சியாளர்களும் மக்களும் மறக்காமல் இருக்கவேண்டும்.


அரசாணை 
அரசாணை வெளியீடு
இந்த நிலையில் தமிழக அரசு விதிகளையும், பசுமை கட்டுப்பாட்டு விதிகளையும் மதிக்காத ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராடினார்கள். மேலும் ஆலையை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் ஆலையை மூட வேண்டும் தமிழக அரசு அரசாணை முடிவெடுத்துள்ளது. என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

POPULAR POSTS