மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Wednesday 9 May 2018

ஆசிரியர்கள் பள்ளி நேரத்தில் செல்போன் பேச தடை: CEO தகவல்


விழுப்புரம்:விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டிற்கான ஆயத்த கூட்டம் நடைபெற்றது.விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடந்த கூட்டத்தில், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் உள்ள 133 அரசு பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு தலைமை தாங்கி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பேசியதாவது:அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் சேர்க்கையை அதிகபடுத்துவதோடு, அது சம்பந்தமாக விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்த வேண்டும். அதில், அரசு பள்ளிகளின் பெருமை மற்றும் மாணவர்களின் சேர்க்கை, பள்ளி வளாகத்தை துாய்மையாக வைத்து கொள்ளுதல் ஆகியவற்றை வெளிப்படுத்த வேண்டும். பள்ளிகளின் சுற்றுசுவற்றில் ஒட்டப்பட்டுள்ள சினிமா மற்றும் அரசியல் சுவரொட்டிகளை அகற்றி விட்டு, திருக்குறள் வாசகங்களை எழுதி வைக்க வேண்டும்.அது மட்டுமின்றி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும். ஆறு முதல் 9ம் வகுப்புகள் வரையுள்ள மாணவர்களின் தேர்வு முடிவுகளை வரும் 14ம் தேதி வெளியிட வேண்டும். இந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் மட்டுமின்றி, வகுப்பறைகளில் ஆசிரியர்களும் கூட மொபைல் பயன்படுத்துதல் கூடாது என தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் நீலாம்பாள், சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர்கள் ராஜேந்திரன், காளிதாஸ், பள்ளி துணை ஆய்வாளர் இருதயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்

No comments:

Post a Comment

POPULAR POSTS