மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Monday 7 May 2018

சிபிஎஸ்இ, என்சிஇஆர்டிக்கு இணையாக பாடத்திட்டத்தை கொண்டுவர: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!!



நீட் போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (என்சிஇஆர்டி) இணையாக மேம்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


தேசிய அளவில் நடத்தப்படும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் போன்ற போட்டித் தேர்வுகளுக்கும், மத்திய அரசு பாடத் திட்டங்களான சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி பாட திட்டங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.


தமிழக பாட திட்டத்தின் கீழ் நன்றாக படிக்கும் மாணவர்களால் இந்த போட்டித் தேர்வுகளில் வெற்றியடைய முடியவில்லை எனக் கூறி, சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி பாட திட்டத்துக்கு இணையாக பாட திட்டத்தை மேம்படுத்த கோரி வக்கீல் மார்ட்டின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன், நீதிபதி சேஷசாயி அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் வாதிடும்போது, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகள், மாநில பாட திட்டத்தை சிபிஎஸ்இக்கு இணையாக மேம்படுத்தியுள்ளன. 


தமிழக பாடத் திட்டத்தை மேம்படுத்த கோரிய போது, அது மாநில அரசின் கொள்கை  சார்ந்த விஷயம் என்பதால் எதுவும் செய்ய முடியாது என்று வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment

POPULAR POSTS