வேலூர், மே 26: பள்ளி திறக்கும் நாளன்று அனைத்து ஆசிரியர்களும் ஸ்மார்ட் போன் கையாள தெரிந்து கொண்டு பள்ளிக்கு வரவேண்டும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளை தமிழக மாணவர்களும் எளிதில் எதிர்கொள்ளும் வகையில் பழைய பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 2018-19ம் இந்த கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பியில் தீவிரமாக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் புதிய பாடத்திட்டத்தின்படி குயிக் ரெஸ்பான்ஸ் கோடு மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். இந்த திட்டத்துக்கு ஸ்மார்ட் போன் இருந்தால்தான் பாடங்களை கற்பிக்க இயலும். எனவே அனைத்து ஆசிரியர்களும் ஸ்மார்ட் போன் வாங்கி கையாள தெரிந்து கொண்டு பள்ளி திறக்கும் நாளன்று பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழத்தில் இந்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி பாடத்திற்கு இணையாக பாடப்புத்தங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. சில முக்கிய பாடங்கள் அனைத்தும் கணினி மூலம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குயிக் ரெஸ்பான்ஸ் கோடு இணைவது குறித்து அனைத்து ஆசிரியர் குழுவிற்கும் வாட்ஸ் அப் அனுப்பப்பட்டுள்ளது.
ஐ��
No comments:
Post a Comment