மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Monday 21 May 2018

50 கோடிப் பேருக்குத் திறன் பயிற்சி!


தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2022ஆம் ஆண்டுக்குள் 50 கோடி இந்தியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா புவனேஷ்வரில் மே 21ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடியால் 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டம் நாட்டு மக்களுக்கு பல்வேறு தொழில் பிரிவுகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குவதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வெல்டிங் முதல் கணினி தகவல் வரையில் பல்வேறு வகையான வேலைகளுக்கான திறன் பயிற்சி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

புவனேஷ்வரில் அமைக்கப்பட்டுள்ள திறன் மேம்பாட்டு நிறுவனம் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதேபோன்ற திறன் மேம்பாட்டு நிறுவனங்களை விசாகப்பட்டினம், கொச்சி, அகமதாபாத், கவுகாத்தி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 60 ஏக்கர் நிலத்தில் 46.17 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் மிகப்பெரிய மாதிரி திறன் மேம்பாட்டு அகாடமியை சர்வதேசத் தரத்துக்கு அமைக்கும் பணி தொடங்கவுள்ளது. இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க இயலும்” என்றார்


No comments:

Post a Comment

POPULAR POSTS