திருவண்ணாமலையில், சிறப்பு வகுப்புக்கு மாணவர்களை அழைத்து சென்ற, தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்ததில், 20 மாணவர்கள் காயமடைந்தனர்.
திருவண்ணாமலை மணலூர்பேட்டை ரோட்டில், முருகையா மெட்ரிக்குலேசன் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. மாணவ, மாணவியருக்கு கோடை விடுமுறையை விடப்பட்டாலும், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்காக, பள்ளி பஸ் நேற்று காலை, 9:00 மணிக்கு, 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை ஏற்றி கொண்டு, திருவண்ணாமலை - மணலூர் பேட்டை சாலையில், தச்சம்பட்டு அருகே சென்று கொண்டிருந்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில், எட்டு மாணவியர், 12 மாணவர்கள் என, 20 பேர் காயமடைந்தனர். அனைவரும், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை மீறி, கோடை விடுமுறையில், சிறப்பு வகுப்புகள் நடத்தியது குறித்து, விளக்கம் கேட்டு, பள்ளி நிர்வாகத்துக்கு, அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்
No comments:
Post a Comment