அனுமதியின்றி உயர்கல்வி பயின்றோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் 4,322 ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஆசிரியர்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்கப்படுத்த அரசு ஊக்க ஊதிய உயர்வு அளிக்கிறது. கடந்த காலங்களில் தொடக்கக்கல்வித் துறை ஆசிரியர்கள் உயர்கல்வி படிக்க முறையாக அனுமதி பெற்றனர். காலப்போக்கில் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் உயர்கல்வி படிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அனுமதி பெறாமலேயே உயர்கல்வி பயின்று, பின்னேற்பு ஆணை பெற்று வந்தனர். திடீரென பின்னேற்பு ஆணை வழங்குவதை கல்வித்துறை நிறுத்தியது.
இதனால் மாநிலம் முழுவதும் அனுமதி பெறாமல் பயின்ற 4,322 பேர் பாதிக்கப்பட்டனர். பின்னேற்பு அனுமதி வழங்க வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் போராடின. பாதிக்கப்பட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் அனுமதியின்றி உயர்கல்வி பயின்றதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து 17 ஏ குறிப்பாணை கொடுத்து ஆசிரியர்களிடம் விளக்கம் பெறப்பட்டு வருகின்றன. தொடர்ந்து அவர்களது பணிப்பதிவேட்டில் 'கண்டனம்' என்ற தண்டனை பதியப்பட்டு வருவதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உயர்கல்விக்கு பின்னேற்பு ஆணையும் வழங்கப்படுகின்றன
No comments:
Post a Comment