உயர்கல்வி படிக்கவுள்ள ஆசிரியர்கள், முன் அனுமதி கடிதத்துடன், முக்கிய சான்றிதழ்கள் இணைத்து அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், உயர்கல்வி படிக்கும் பட்சத்தில், ஊக்க ஊதியம் அளிக்கப்படுகிறது. இதற்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம், முன் அனுமதி பெறுவது அவசியம். இதை முறையாக பின்பற்றாதோரிடம், சமீபத்தில் விளக்கம் அளிக்க கோரி, கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், வருங்காலங்களில் உயர்கல்வி படிப்போர், அடிப்படை தகவல்களுடன், சில சான்றிதழ்கள் இணைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'பகுதிநேரமாக எம்.பில்., பி.எச்.டி., படிக்க விரும்பும் ஆசிரியர்கள், முன் அனுமதி பெறுவது அவசியம். இதற்கான ஒப்புதல் கடிதத்தோடு, படிக்கவுள்ள பல்கலை பெயர், கல்வி பயிலும் ஆண்டு, தற்காலிக தேர்வு கடிதம், வழிகாட்டியின் கடிதம் இணைத்து, பணியாளர் தொகுதியில் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், ஊக்கத்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்படாது' என்றனர்.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், உயர்கல்வி படிக்கும் பட்சத்தில், ஊக்க ஊதியம் அளிக்கப்படுகிறது. இதற்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம், முன் அனுமதி பெறுவது அவசியம். இதை முறையாக பின்பற்றாதோரிடம், சமீபத்தில் விளக்கம் அளிக்க கோரி, கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், வருங்காலங்களில் உயர்கல்வி படிப்போர், அடிப்படை தகவல்களுடன், சில சான்றிதழ்கள் இணைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'பகுதிநேரமாக எம்.பில்., பி.எச்.டி., படிக்க விரும்பும் ஆசிரியர்கள், முன் அனுமதி பெறுவது அவசியம். இதற்கான ஒப்புதல் கடிதத்தோடு, படிக்கவுள்ள பல்கலை பெயர், கல்வி பயிலும் ஆண்டு, தற்காலிக தேர்வு கடிதம், வழிகாட்டியின் கடிதம் இணைத்து, பணியாளர் தொகுதியில் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், ஊக்கத்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்படாது' என்றனர்.
No comments:
Post a Comment