மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Monday, 9 April 2018

கோடை விடுமுறை அறிவிப்பு பள்ளிக்கல்வி இயக்குனரக அதிகாரி தகவல்!!



அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு வருகிற 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரி கூறினார். 21-ந்தேதி முதல் விடுமுறை தமிழகத்தில் 3 ஆயிரத்து 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளும், 2 ஆயிரத்து 900 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் கடந்த (மார்ச்) மாதம் 16-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. அந்த தேர்வு வருகிற 20-ந்தேதி முடிவடைகிறது. பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி கடந்த 6-ந்தேதி முடிவடைந்தது. இந்த வருடம் முதல் முதலாக பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கடந்த (மார்ச்) மாதம் 7-ந்தேதி முதல் தேர்வு தொடங்கியது. தேர்வு வருகிற 16-ந்தேதி முடிவடைகிறது. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 20-ந்தேதி பள்ளிக்கூட இறுதி வேலை நாட்களாகும். இதைத்தொடர்ந்து 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகள் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் 32 ஆயிரம் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு 19-ந்தேதிதான் இந்த கல்வி ஆண்டில் இறுதி வேலைநாள். 20-ந்தேதி முதல் இந்த பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஆகும். விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் ஜூன் மாதம் 1-ந்தேதி திறக்கப்படுகின்றன. ஏப்ரல் மாதம் இறுதி நாள் வரை தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் செயல்படும். இந்த வருடம் தான் முதல் முதலாக ஏப்ரல் 19-ந்தேதி கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டது. புதிய பாடத்திட்டம் வருகிற கல்வி (2018-2019) ஆண்டில் 1-வது வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, 11-வது வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது இந்த கோடை விடுமுறை நாட்களிலா, அல்லது கோடை விடுமுறை முடிந்தா? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுபற்றி பின்னர் அறிவிக்கப்படும். இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment

POPULAR POSTS