மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Thursday 19 April 2018

`ஒரு கண்ணில் வெண்ணெய்... மற்றொன்றில் சுண்ணாம்பு' - அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் ஆசிரியர் சங்கம்



➠❄கணினி கல்வியின் புதுமை❄➠

``எங்களது பல கோரிக்கைகளை நிறைவேற்றும் எந்த முயற்சிகளையும் இந்த அரசு எடுக்கவில்லை. அதற்கான அறிகுறியும் தெரியவில்லை. எனவே, திட்டமிட்டபடி வரும் மே 8-ம் தேதி கோட்டை முற்றுகைப் போராட்டம் நடக்கும்" என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள் நால்வருக்கு விருதுகள் வழங்கும் விழா தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன்செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "எங்களது முக்கிய கோரிக்கைகளான 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்' ரத்து உள்ளிட்ட எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையையும் இந்த அரசு செய்யவில்லை. நாங்களும் தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை அரசுடன் நடத்தியபோதெல்லாம் எங்களது கோரிக்கைகளை அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்ற உத்தரவாதமும் உறுதியும் தரப்பட்டது. ஆனால், அவற்றில் எதுவும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் உண்மையாகவும் இருக்கிறது. எனவே, ஜாக்டோ ஜியோ அமைப்பின் முடிவின்படி, பல லட்சம் ஊழியர்களைத் திரட்டி, சென்னைக்குச் செல்கிறோம். அங்கு கோட்டை முற்றுகைப் போராட்டத்தை வருகிற மே 8 அன்று திட்டமிட்டபடி நடத்துகிறோம். குறைந்தபட்ச மாணவர்களைக் கொண்ட பள்ளிகளையும் மேல்நிலைப் பள்ளிகளையும் பொறுத்தவரையில் சில குறிப்பிட்ட பாடப்பிரிவுகளையும் மூடுவதற்கு இயக்குநர் வழியாக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மேலும், 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர்களைக் கணக்கிட்டு இதரப் பணியிடங்களை  உபரிப் பணியிடங்களாக அரசு கணக்கிட முடிவெடுத்திருக்கிறது. இந்தப் போக்கு, மாணவர்களின் உயர்கல்வி கனவை தகர்ப்பதோடு எதிர்காலத்தில் கல்வி கற்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதைக் கவனத்தில் கொண்டு தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும். தேவையான புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஒரு கண்ணில் வெண்ணெய் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற மாற்றான்போக்கு மனநிலையை அரசு செயல்படுவதைத் தவிர்த்துவிட்டு, அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர் அனைவருக்கும் ஊதியக்குழு நிலுவையை வழங்கிட அரசு முன்வர வேண்டும். சத்துணவு திட்டம் 10 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையை மேலும், விரிவுபடுத்தி பசியோடு கல்வி கற்கும் ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

ஏனைய பாடங்களைப்போல, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களுக்கும் ஒரே தாள் முறையை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். நடுநிலைப்பள்ளிகளில் கடந்த காலங்களில் நேரடி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முறையான பதவி உயர்வு வாய்ப்பு கிடைக்காத சூழ்நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, நேரடியாக நியமிக்கப்படும் முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவிகித பணியிடங்களாக வகைமாற்றம் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும். கல்லூரிகளில் முழுவதுமாக நேரடி நியமனங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. உரிய அனைத்து தகுதிகளுடன் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களைக் கல்லூரி விரிவுரையாளர்களாக ஈர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்

No comments:

Post a Comment

POPULAR POSTS