சாதிக்கும் எண்ணமும் விடாமுயற்சியும் இருந்தால், எங்கிருந்தாலும் வெற்றியாளனாக வலம்வர முடியும் என நிரூபித்துக் காட்டியிருக்கிறார், ம.ஹரிஹரன்
கரூர் மாவட்டம், வெள்ளியணை கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் டூ படிக்கிறார் ஹரிஹரன். இவரின் அறிவியல் ஆர்வம், ஜப்பானுக்குச் செல்லும் வாய்ப்பை வழங்கியுள்ளது. அதுகுறித்து பள்ளியின் ஆசிரியர் பெ.தனபால், ``நான் இந்தப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக, இளம் விஞ்ஞானிகள் குழு வழிகாட்டிப் பணியாற்றி வருகிறேன். 12 ஆண்டுகளாக மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தையும் சிந்தனையையும் வளர்த்தெடுக்க, பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறேன். மாணவர்களும் ஆர்வம் மற்றும் உற்சாகத்துடன் பங்களித்து வருகிறார்கள். நான் கல்லூரியில் படிக்கும்போது ஓர் அறிவியல் ஆராய்ச்சி மையத்துக்குச் சென்றிருந்தேன். ஆனால், சரியான சூழல் இல்லாததால் அங்கே தேர்ந்தெடுக்கப்படவில்லை. என்னால்தான் இதுபோன்ற பெரிய அறிவியல் மையங்களுக்குச் செல்லமுடியவில்லை. என்னிடம் படிக்கும் மாணவர்களையாவது உயர்த்த தகுந்த பயிற்சி அளிக்க வேண்டும் என உறுதியேற்றேன்.
No comments:
Post a Comment