மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Thursday 5 April 2018

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களின் நியமனங்களுக்கு அரசு ஒப்புதல்: பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியீடு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களின் நியமனங்களுக்கு அரசு ஒப்புதல்: பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியீடு



அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள ஓர் அரசாணையில் (அரசாணை எண் 64, நாள்: 3.4.2018) கூறப்பட்டி ருப்பதாவது:அரசு நிதியுதவி பெறும் உயர் நிலைப்பள்ளிகள்மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை (இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், ஆய்வக உதவியாளர்) நிரப்புவது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநருக்கு வழங்கப்பட்ட உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.
 அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 15.3.2016-ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டபடி, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அனுமதியளிக்கப்பட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்பு தல் அளிக்கவேண்டும்.
ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்களை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி, மதிப்பீடு செய்து மிகுதியான பணியிடங்கள் திரும்பப் பெற வேண்டும். அந்த பணியிடங்களில் தற்போது பணி புரிவோர் ஓய்வுபெற்ற பின்னர் அந்த பணியிடங்கள் ரத்துசெய்யப்பட வேண்டும்.
நூலகர், நூலக உதவியாளர், தோட்டக்காரர், தண்ணீர் கொண்டு வருபவர் உள்ளிட்ட பணியிடங்கள் அரசு பள்ளி களுக்கே ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உள்ள மேற்கண்ட பணியிடங்களைத் திரும்ப எடுத்துக்கொள்வதுடன் தற்போது அந்த பணியிடங்களில் பணி புரிந்து வருவோர் ஓய்வுபெற்ற பின்னர் அல்லது பதவி உயர்வு பெற்ற பின்னர், அப் பணியிடங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புதலைத் திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அந்த அரசாணை யில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

POPULAR POSTS