மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Wednesday 11 April 2018

வளர்ந்து வரும் அரசுப்பள்ளி ! முடக்கும் நினைக்கும் தனியார் பள்ளிகள்!


தனியார் பள்ளி மோகத்தால் படையெடுக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு விண்ணப்பம் வாங்குதற்காக காத்திருக்கும் பெற்றோர்கள் என்றெல்லாம் செய்திகள் படித்திருக்கிறோம். எப்படியாவது யாரைப்பிடித்தாவது தன் பிள்ளையை அந்த தனியார் பள்ளியில் சேர்த்து விட்டாலே போதும் அதுவே தன் வாழ்நாள் லட்சியமாக கருதும் பெற்றோர்கள் தான் தற்போது அதிகமாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் காலத்தில் ஓர் அரசுப்பள்ளி 2018-2019 கல்வி ஆண்டிற்கான அட்மிசன் இல்லையென்று பள்ளிக்கு வெளியே போர்டு வைத்திருக்கிறார்கள் என்றால் அது ஆச்சர்யமாகத் தானே இருக்கும்.


சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ராமநாதன் செட்டியர் உயர்நிலைப்பள்ளியானது இயங்கி வருகிறது. இப்பள்ளி காரைக்குடி நகராட்சி பள்ளியாகும்.  இங்கு ``6-ம் வகுப்பு ஆங்கில வழி கல்வியில் 50 மாணவர்களும், 6-ம் வகுப்பு தமிழ்வழி கல்வியில் 35 மாணவர்களும் மட்டுமே சேர்க்க இடவசதி உள்ளது. மேலும் பிற வகுப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க இயலாத நிலையில் உள்ளோம் என்பதை கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதற்கு பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு தந்து உதவுமாறு அன்புடன் கேட்க்கொள்கிறோம்' என்று விளம்பர பலகை வைத்திருப்பதை பார்த்து பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் மல்லுக்கு நிற்கிறார்கள்.
கூடுதல் வகுப்பறை, கழிப்பறைகள் எல்லாம் பற்றாக்குறையாக இருப்பதால் அட்மிசன் போட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார் தலைமை ஆசிரியர் பீட்டர்ராஜா. தனியார் பள்ளிக்கு போட்டியாக தமிழ், ஆங்கிலத்தில் மாணவ, மாணவிகள் தங்கள் திறமைகளை இங்கு வெளிக்காட்டி வருகிறார்கள். ஆகையால் பெற்றோர்கள் இந்த அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்காக எம்.எல்.ஏ, எம்.பி சிபாரிசு கடித்தை பெற்றுக்கொண்டு வந்து குவிகிறார்கள். ஆனால் தனியார் பள்ளிகள் இந்த அரசுப்பள்ளியை முடக்கி வைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதில் ஒன்று தான் அடிப்படை வசதிகள், இடவசதி குறைவுகள். நகராட்சி ஆணையர் இப்பள்ளி வளர்ச்சி பெறுவதை விரும்பவில்லை என்கிற குற்றச்சாட்டை பெற்றோர்கள் முன் வைக்கிறார்கள். இதே அரசுப்பள்ளியில் தான் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

POPULAR POSTS