கணினி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பதாக அறிவிப்பு...
கோவை: பிளஸ்1 கணினி அறிவியல் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப்போவதாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து மாநில துணை ஒருங்கிணைப்பாளர் கலைவாணன் கோவையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: 11ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் இயற்பியல், வேதியியல் போன்ற 70 மதிப்பெண் கொண்ட பாடங்களை திருத்துவதற்கு ஒரு வேளைக்கு 10 விடைத்தாள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அதே 70 மதிப்பெண்கள் கொண்ட கணினி அறிவியல் பாடத்திற்கு ஒரு வேளைக்கு 15 விடைத்தாள் வழங்க ஒரு தலைப்பட்சமாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இது கணினி ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இயற்பியல், வேதியியல் போன்று கணினி அறிவியல் விடைத்தாள் திருத்துவதற்கு, ஒரு வேளைக்கு 10 விடைத்தாள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கத்தலைவர் செல்வக்குமார் தலைமையிலான நிர்வாகிகள் கடந்த மாதம் 22ம் தேதி அரசுத்தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்திராதேவி நேரில் சந்தித்து தெரிவிக்கப்பட்டது. எங்கள் கோரிக்கை ஏற்காதபட்சத்தில் தமிழகம் முழுவதும் 11ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் கணினியில் மதிப்ெபண் பதிவேற்றும் பணி ஆகியவற்றை புறக்கணிப்போம். இதுதொடர்பாக தேர்வுத்துைறக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது கணினி ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இயற்பியல், வேதியியல் போன்று கணினி அறிவியல் விடைத்தாள் திருத்துவதற்கு, ஒரு வேளைக்கு 10 விடைத்தாள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கத்தலைவர் செல்வக்குமார் தலைமையிலான நிர்வாகிகள் கடந்த மாதம் 22ம் தேதி அரசுத்தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்திராதேவி நேரில் சந்தித்து தெரிவிக்கப்பட்டது. எங்கள் கோரிக்கை ஏற்காதபட்சத்தில் தமிழகம் முழுவதும் 11ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் கணினியில் மதிப்ெபண் பதிவேற்றும் பணி ஆகியவற்றை புறக்கணிப்போம். இதுதொடர்பாக தேர்வுத்துைறக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment