சேலம் மாவட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள காளியம்மன்புதூர் மற்றும் செல்லப்பன்நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் போதியளவு மாணவ - மாணவியர் இல்லாததால், எதிர்வரும் கல்வியாண்டில் இந்த இரு பள்ளிகளையும் மூடிவிட்டு, அருகிலுள்ள பள்ளிகளோடு இணைக்க கல்வித் துறை பரிசீலனை செய்து
வருகிறது.
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 11 நடுநிலைப் பள்ளிகள் உள்பட மொத்தம் 62 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. 232 ஆசிரியர்கள், ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். 4,600 மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர்.
வாழப்பாடி பேரூராட்சிக்கு உள்பட்ட செல்லப்பன்நகர் கிராமத்தில் கடந்த 1973-ஆம் ஆண்டு ஆரம்பப்பள்ளி துவக்கப்பட்டது. அப் பகுதி மக்களுக்கு தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால், 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வந்த அப் பள்ளியில், கடந்த சில
ஆண்டுகளாக படிப்படியாக எண்ணிக்கை குறைந்து, ஒற்றை இலக்கமானது.
நடப்பு கல்வியாண்டில் ஒரு தலைமையாசிரியை, ஒரு உதவி ஆசிரியை என, இருவர் பணிபுரிந்து வரும் அப் பள்ளியில், 3 மாணவ,
மாணவியர் மட்டுமே பயின்று வருகின்றனர். அதேபோல, வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி, காளிம்மன்புதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும், இரு ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே 5 மாணவ, மாணவியர் மட்டுமே படித்து வருகின்றனர். இந் நிலையில், ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மாணவ, மாணவியர் படித்து வரும் பள்ளிகளை மூடிவிட்டு, அப் பள்ளியில் படிக்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவ, மாணவியரை, அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்க பள்ளிக் கல்வித் துறை
திட்டமிட்டுள்ளது.
இத் திட்டத்தின் கீழ், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் ஒற்றை இலக்கத்தில் மாணவ, மாணவியர் எண்ணிக்கை கொண்ட காளியம்மன்புதூர் மற்றும் செல்லப்பன் நகர் ஆகிய இரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளையும் மூடிவிட்டு, அந்த இரு பள்ளிகளிலும் படித்து வரும் 8 மாணவ-மாணவியரையும், அவர்களது பெற்றோர் விருப்பப்படி அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் இணைத்து கற்பிக்க கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியது:
வாழப்பாடி ஒன்றியத்தில் காளியம்மன்புதூர், செல்லப்பன்நகர் தொடக்கப் பள்ளிகள் மட்டுமின்றி, ஜம்பூத்துமலை தொடக்கப் பள்ளியிலும் ஒற்றை இலக்கத்திலேயே மாணவ, மாணவியர் எண்ணிக்கை உள்ளது.
ஜம்பூத்துமலை தொடக்கப்பள்ளி, மலை கிராமத்தில் அமைந்துள்ளதாலும், அது புதிய ஆசிரியர்களுக்கான மலை சுழற்சிப் பள்ளி என்பதாலும், அப் பள்ளியைத் தவிர்த்து மற்ற இரு பள்ளிகளையும், எதிர்வரும் கல்வியாண்டில் மூடிவிட்டு, அப் பள்ளி மாணவ, மாணவியரை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் இணைக்க கல்வித் துறை திட்டம் வகுத்துள்ளது.
இரு பள்ளிகள் மூடப்படுவதால், இரு தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் இரு உதவி ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அதனால், ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வு கிடைப்பது தாமதமாகும்.
அதுமட்டுமின்றி, இந்த ஒன்றியத்தில் ஆசிரியர் பணியிடம் குறைக்கப்பட்டால், வேறு ஒன்றியத்தில் இருந்து இந்த ஒன்றியத்துக்கு மாறுதலாகி வந்த இரு ஆசிரியர்கள், மீண்டும் அதே ஒன்றியத்துக்கு திரும்பிச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படும் என்றனர்.
வருகிறது.
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 11 நடுநிலைப் பள்ளிகள் உள்பட மொத்தம் 62 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. 232 ஆசிரியர்கள், ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். 4,600 மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர்.
வாழப்பாடி பேரூராட்சிக்கு உள்பட்ட செல்லப்பன்நகர் கிராமத்தில் கடந்த 1973-ஆம் ஆண்டு ஆரம்பப்பள்ளி துவக்கப்பட்டது. அப் பகுதி மக்களுக்கு தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால், 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வந்த அப் பள்ளியில், கடந்த சில
ஆண்டுகளாக படிப்படியாக எண்ணிக்கை குறைந்து, ஒற்றை இலக்கமானது.
நடப்பு கல்வியாண்டில் ஒரு தலைமையாசிரியை, ஒரு உதவி ஆசிரியை என, இருவர் பணிபுரிந்து வரும் அப் பள்ளியில், 3 மாணவ,
மாணவியர் மட்டுமே பயின்று வருகின்றனர். அதேபோல, வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி, காளிம்மன்புதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும், இரு ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே 5 மாணவ, மாணவியர் மட்டுமே படித்து வருகின்றனர். இந் நிலையில், ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மாணவ, மாணவியர் படித்து வரும் பள்ளிகளை மூடிவிட்டு, அப் பள்ளியில் படிக்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவ, மாணவியரை, அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்க பள்ளிக் கல்வித் துறை
திட்டமிட்டுள்ளது.
இத் திட்டத்தின் கீழ், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் ஒற்றை இலக்கத்தில் மாணவ, மாணவியர் எண்ணிக்கை கொண்ட காளியம்மன்புதூர் மற்றும் செல்லப்பன் நகர் ஆகிய இரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளையும் மூடிவிட்டு, அந்த இரு பள்ளிகளிலும் படித்து வரும் 8 மாணவ-மாணவியரையும், அவர்களது பெற்றோர் விருப்பப்படி அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் இணைத்து கற்பிக்க கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியது:
வாழப்பாடி ஒன்றியத்தில் காளியம்மன்புதூர், செல்லப்பன்நகர் தொடக்கப் பள்ளிகள் மட்டுமின்றி, ஜம்பூத்துமலை தொடக்கப் பள்ளியிலும் ஒற்றை இலக்கத்திலேயே மாணவ, மாணவியர் எண்ணிக்கை உள்ளது.
ஜம்பூத்துமலை தொடக்கப்பள்ளி, மலை கிராமத்தில் அமைந்துள்ளதாலும், அது புதிய ஆசிரியர்களுக்கான மலை சுழற்சிப் பள்ளி என்பதாலும், அப் பள்ளியைத் தவிர்த்து மற்ற இரு பள்ளிகளையும், எதிர்வரும் கல்வியாண்டில் மூடிவிட்டு, அப் பள்ளி மாணவ, மாணவியரை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் இணைக்க கல்வித் துறை திட்டம் வகுத்துள்ளது.
இரு பள்ளிகள் மூடப்படுவதால், இரு தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் இரு உதவி ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அதனால், ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வு கிடைப்பது தாமதமாகும்.
அதுமட்டுமின்றி, இந்த ஒன்றியத்தில் ஆசிரியர் பணியிடம் குறைக்கப்பட்டால், வேறு ஒன்றியத்தில் இருந்து இந்த ஒன்றியத்துக்கு மாறுதலாகி வந்த இரு ஆசிரியர்கள், மீண்டும் அதே ஒன்றியத்துக்கு திரும்பிச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படும் என்றனர்.
No comments:
Post a Comment