என்ஜினீயரிங் கவுன்சிலிங் ஆன்லைன் மூலம் நடத்தப்படுவது தொடர்பான விளக்க நிகழ்ச்சி கோவையில் இன்று நடந்தது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது-
முன்னாள் முதல்- அமைச்சர் மறைந்த ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வரும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் பள்ளி கல்வித்துறைக்கு 27 ஆயிரத்து 850 கோடி நிதி ஒதுக்கி உள்ளனர்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது-
முன்னாள் முதல்- அமைச்சர் மறைந்த ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வரும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் பள்ளி கல்வித்துறைக்கு 27 ஆயிரத்து 850 கோடி நிதி ஒதுக்கி உள்ளனர்.
இது இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செய்ய முடியாத ஒன்று ஆகும். 1,6,9,11 ஆகிய வகுப்பு பாடத்திட்டத்தில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை விட சிறந்த கரிகுல பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பள்ளி தேர்வு முடிவுகள் காலமாதம் ஆகும் என சிலர் கூறுகிறார்கள். அறிவித்த தேதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும். எஸ்.எம். எஸ் மூலம் 2 நிமிடத்தில் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் முடிவுகள் வெளியிடப்படும். முதியோர் இல்லம் இல்லாத நிலையை கொண்டு வர இந்த அரசு பாடுபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் சில தனியார் பள்ளிகள் கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்துகிறதே? என கேள்வி எழுப்பிய போது, அவ்வாறு நடத்தும் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்படும். அதன் பிறகும் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறும் போது, 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இது நியாயமான தீர்ப்பு. மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
அவரிடம் தினகரன்- திவாகரன் மோதல் குறித்து கேட்ட போது, தினகரன் அவரது கட்சி நிர்வாகிகளை அவராகவே வெளியேற்றி விடுவார் என்றார். திவாகரன் வந்தால் உங்கள் கட்சியில் சேர்த்து கொள்வீர்களா? என கேட்ட போது அதனை முதல்-அமைச்சர் எடப்பாடியும், துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் முடிவு செய்வார்கள் என்றார். #TNMinister #Sengottaiyan #EXamResults.
பள்ளி தேர்வு முடிவுகள் காலமாதம் ஆகும் என சிலர் கூறுகிறார்கள். அறிவித்த தேதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும். எஸ்.எம். எஸ் மூலம் 2 நிமிடத்தில் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் முடிவுகள் வெளியிடப்படும். முதியோர் இல்லம் இல்லாத நிலையை கொண்டு வர இந்த அரசு பாடுபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் சில தனியார் பள்ளிகள் கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்துகிறதே? என கேள்வி எழுப்பிய போது, அவ்வாறு நடத்தும் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்படும். அதன் பிறகும் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறும் போது, 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இது நியாயமான தீர்ப்பு. மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
அவரிடம் தினகரன்- திவாகரன் மோதல் குறித்து கேட்ட போது, தினகரன் அவரது கட்சி நிர்வாகிகளை அவராகவே வெளியேற்றி விடுவார் என்றார். திவாகரன் வந்தால் உங்கள் கட்சியில் சேர்த்து கொள்வீர்களா? என கேட்ட போது அதனை முதல்-அமைச்சர் எடப்பாடியும், துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் முடிவு செய்வார்கள் என்றார். #TNMinister #Sengottaiyan #EXamResults.
No comments:
Post a Comment