மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Sunday, 15 April 2018

எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும்: ஆந்திர அரசு அ திரடி !!



➠❄கணினி கல்வியின் புதுமை❄➠

பரவிய செய்தி :
ஆந்திராவில் அரசு பிரதிநிதிகளின் குழந்தைகள் கட்டாயமாக அரசு பள்ளிகளில் மட்டுமே பயில வேண்டுமென சட்டம் கொண்டுவர உள்ளனர்.

மதிப்பீடு :
ஆந்திராவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளையும் நவீனமயமாக்கப்பட்ட பின் இச்சட்டத்தை அமல்படுத்த உள்ளனர். தற்போது இதற்கான சட்ட வரைவை மட்டும் தயார்படுத்தி வருகின்றனர்.

விளக்கம் :
ஏழை மக்களின் குழந்தைகள் மட்டுமே அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளின் தரம் குறைவாக இருப்பதினால் மக்கள் தனியார் பள்ளிகளை நாடிச் செல்கின்றனர். இதை பயன்படுத்தி தனியார் பள்ளிகளும் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றனர்.

இதை மாற்றியமைக்க, அரசு பிரதிநிதிகளின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் மட்டுமே பயில வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டுவர ஆலோசித்து வருகிறது ஆந்திர அரசு. இச்சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், ஆந்திர அரசு தலைமையின் கீழ் செயல்படும் எம்.எல்.ஏக்கள். எம்.சிக்கள், அமைச்சர்கள் ஆகியோரின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் மட்டுமே பயில வேண்டும் என்று கட்டாயமாக்கப்படும்.

இது குறித்து பேசிய ஆந்திரா சுற்றுலா துறை அமைச்சர் பூமா அகிலா, அனைவருக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பது முதல்வரின் கனவு. அதனை நிறைவேற்ற, அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் தரம் உயர்த்தி நவீனமயமாக்கப்பட்டு தரமான கல்வி வழங்கப்படும்.

இதற்கான சட்ட வரைவை மட்டுமே தற்போது தயார்படுத்தி வருவதாகவும், இந்த சட்டம் அமலுக்கு வருவதற்குள் அனைத்து அரசு பள்ளிகளும் நவீனமயமாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடினார் என்றும் கூறியுள்ளார்.

என்.ஆர்.ஐ தெலுங்கு சமூகத்தின் உதவியுடன் ஆந்திர அரசு மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளின் சூழலை மேம்படுத்த உள்ளது. இவ்வருடத்தின் இறுதிக்குள் மாநிலத்தில் உள்ள 5,000 அரசு பள்ளிகளை என்.ஆர்.ஐ-ஸ் உதவியுடன் மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. 

கடந்த ஆண்டில் மட்டும் ஆந்திர அரசின் கீழ் செயல்படும், 13 மாவட்டங்களில் உள்ள 9,000 அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் போதிய மாணவர்கள் இல்லாத காரணத்தினால் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

  அரசு தலைமையில் உள்ளவர்களின் குழந்தைகள் மட்டுமின்றி அரசு பணியில் உள்ள அனைவரது குழந்தைகளும் கட்டாயம் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் ஓர்  சட்டம் அமல்படுத்தினால், நாட்டில் உள்ள பல அரசு பள்ளிகளின் தரம் உயர்வதோடு ஏழை குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கும்.

ஆதாரம்
New Andhra Pradesh law
https://youturn.in

No comments:

Post a Comment

POPULAR POSTS