மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Sunday, 1 April 2018

நம்பர் ஒன் இடத்துக்கு வந்த இந்தியா !!!!

அலுவலகம், வீடு என எந்த நேரமும் வாட்ஸ்அப், பேஸ்புக்கில் மூழ்குவதால் நம்பர் ஒன் இடத்துக்கு வந்த இந்தியா: இணைய பயன்பாடு அமோகம்.



புதுடெல்லி: எந்த நேரமும் வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் மூழ்குபவர்களால் இந்தியா இணைய பயன்பாட்டில் நம்பர் ஒன்  இடத்தை பிடித்துள்ளது.ஸ்மார்ட்போன் வருகையால் இன்டர்நெட் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், உலக அளவில்  இந்தியாவில் இணைய வேகம் மோசமாகவே இருக்கிறது.  கடந்த பிப்ரவரி மாத புள்ளி விவரப்படி இந்தியாவின் சராசரி வேகம்  நொடிக்கு 9.01 எம்பி. நவம்பரில் இது நொடிக்கு 8.8 எம்பியாக இருந்தது. உலக அளவில் ஏறக்குறைய கடைசியாக 109 இடத்தில்  இந்தியா உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள இணைய வேகம் தொடர்பாக ஆய்வு செய்த நிறுவனம்  இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.  உலக நாடுகளில் அதிகபட்ச வேகத்துடன் நார்வே முதலிடத்தில் உள்ளது. ஐஸ்லாந்து, நெதர்லாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு  நாடுகள், கத்தார், ஆஸ்திரேலியா, ஹங்கேரி, கனடா, பெல்ஜியம் ஆகியவை முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. ஆனால் இந்தியா  9.01 எம்பி டவுன்லோடு வேகத்துடன் கடைசி இடத்தில் இருக்கிறது என புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால்,  மொபைல் இணையதளத்தை அதிகமாக பயன்படுத்துவதில் மற்ற நாடுகளை இந்தியா விஞ்சிவிட்டது என்பதை மற்றொரு  ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

 உலக அளவில் இன்டர்நெட் எந்த நாட்டில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றி அந்த ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது. இதில் கடந்த ஓராண்டு இணைய பயன்பாட்டுடன் ஒப்பிடுகையில் தற்போது இந்தியாவில் இணைய  பயன்பாடு 5 மடங்கு அதிகரித்துள்ளது ஒரு மாதத்தில் சராசரியாக 2.1 எக்சாபைட் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு  எக்சாபைட் என்பது 10 லட்சம் டெராபைட்டை குறிக்கும். ஒரு டெராபைட் ஆயிரம் ஜிபி. வட அமெரிக்கா 1.8 எக்சாபைட்டுடன்  இரண்டாவது இடத்தில் உள்ளது. ஐரோப்பிய யூனியன் 1.2 எக்சாபைட், லத்தீன் அமெரிக்க நாடுகள், சீனா தலா 1 எக்சாபைட், கிழக்கு ஐரோப்பா 0.7 எக்சாபைட், மத்திய  கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகள் 0.6 எக்சாபைட் பயன்படுத்தியுள்ளன.  உலக அளவில் இந்தியாவின் இணைய பயன்பாடு அதிகரிப்பதற்கு ஜியோவின் வருகை மிக முக்கியமானதாக  கருதப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு நிபுணர்கள் கூறியதாவது: இந்தியாவில் இணைய பயன்பாட்டுக்கான கட்டணம் அதிகமாக இருந்தது. மாதத்துக்கு 2 ஜிபி பயன்படுத்தவே 200 ரூபாய்க்கு  மேல் பேக்கேஜ் கட்டணம் அளிக்க வேண்டி வந்தது. இதுதவிர பேசுவதற்காகவும் தனியாக செலவிடவேண்டும். ஆனால் 4ஜி  சேவையை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ, துவக்கத்தில் இலவசமாகவே அளித்தது. தற்போது மொபைல்  நிறுவனங்களிடையே உள்ள போட்டி காரணமாக ஒரு ஜிபி 12 ரூபாயில் இருந்து சுமார் 5 ரூபாயாக குறைந்து விட்டது. அதிலும்  போஸ்ட் பெய்டை விட ப்ரீ பெய்டு இணைய மற்றும் அழைப்புகளுக்கான பேக்கேஜ் கட்டணம் மிக குறைவு.

 முந்தைய அளவுடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய இணைய கட்டணம் சுமார் 60 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதனால்  ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் அதிகமாக இணையதளங்களை பார்த்துள்ளனர். குறிப்பாக அலுவலகத்திலும்,  வீட்டிலும், பயணங்களின்போதும் வாட்ஸ் ஆப், பேஸ்புக், யூடியூப் என எந்த நேரமும் மொபைலிலேயே இந்தியர்கள்  மூழ்கியதற்கு இணைய கட்டணம் குறைவு மற்றும் இலவச சேவைகள்தான் காரணம். இதனால்தான் உலக அளவில் இந்தியா  முதலிடத்தை பிடித்துள்ளது. அலுவலகத்தில் வேலை பார்க்காமல் வாட்ஸ்ஆப், பேஸ்புக் பார்ப்பதால் வேலைத்திறன்  குறைகிறது என அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

POPULAR POSTS