மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Sunday, 1 April 2018

காவிரிக்காக பதவியை துறந்த 2-ஆவது அரசியல்வாதி முத்துக்கருப்பன்...

டெல்லி: காவிரி விவகாரத்துக்காக தனது பதவியை ராஜினாமா செய்த 2-ஆவது அரசியல்வாதியாக முத்துகருப்பன் அறியப்படுகிறார்...




காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது 100 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போராட்டம். மத்தியில் யார் தலைமையில் ஆட்சி நடைபெற்றாலும் காவிரிக்காக தமிழக அரசு கர்நாடகத்துடன் போராடும் நிலையே உள்ளது.
காவிரி நீரை பெற்று தரவும், மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் அரசியல்வாதிகள் அரசியல் செய்து வருகின்றனர்.

ராஜினாமா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், நடுநிலையாளர்களின் கோரிக்கை ஆகும். ஆனால் பதவியை விட்டு கொடுக்க மனமில்லாத அரசியல்வாதிகள் போராட்டம், மிரட்டல் என ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யாமல் உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கெடுவை வீணடித்துவிட்டனர்..


ராஜினாமா செய்த அரசியல்வாதி

இந்நிலையில் காவிரி நீர் இல்லாத நிலை பதவி ஒரு கேடா என்று ஆவேசமடைந்த முத்துகருப்பன் கடந்த வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன்படி இன்று குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

முத்துகருப்பன் 2-ஆவது அரசியல்வாதி

காவிரிக்காக முத்துகருப்பன் தனது பதவியை உதறியதன் மூலம் அவரது நோக்கம் பதவியல்ல, மக்கள் நலன்தான் என்பதை நிரூபித்துவிட்டார். இதன் மூலம் காவிரிக்காக மக்கள் நலனுக்காக பதவியை துறந்த 2-ஆவது அரசியல்வாதியாக முத்துகருப்பன் மக்கள் மனதில் இடம்பெறுவார்

No comments:

Post a Comment

POPULAR POSTS