➠❄கணினி கல்வியின் புதுமை❄➠
மத்திய அரசின், 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர, வரும் 20ம் தேதி முதல், அனைத்து கல்வித்துறை அலுவலகங்களிலும், ஆன்லைன் முறையில்விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தெரிவித்தார்.கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்கள் படிக்க, 25 சதவீத இடஒதுக்கீடு முறை, கடந்த 2013ல் கொண்டுவரப்பட்டது. இதன்படி, ஆண்டு வருமானம், 2 லட்சத்திற்குட்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கியோர், நலிவடைந்த பிரிவை சேர்ந்த குழந்தைகள், தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்கலாம். இவர்களுக்கான கல்விக்கட்டணம், அரசே செலுத்தி வருகிறது.
கடந்தாண்டு முதல் இத்திட்டத்திற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. வரும் கல்வியாண்டிற்கு, இலவச எல்.கே.ஜி., அட்மிஷன், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும் 20 முதல் மே 18ம் தேதி வரை, விண்ணப்பிக்கலாம் என, கல்வித்துறை அறிவித்துள்ளது.இதில், தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள், மே 23ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவுள்ளது. அனைத்து கல்வி அலுவலகங்களிலும், பெற்றோர் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில், ''மத்திய அரசின், 25 சதவீத இடஒதுக்கீடு திட்டத்தில், சிறுபான்மையற்ற அனைத்து மெட்ரிக், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளிலும் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆன்லைன் முறையில், பள்ளிகள் தேர்வு செய்யலாம். முதன்மை கல்வி அலுவலகம் உட்பட அனைத்து கல்வித்துறை அலுவலகங்கள், இ-சேவை மையங்களில், விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், மே 29ம் தேதிக்குள், தகுந்த ஆவணங்களுடன் உரிய பள்ளிக்கு நேரில் சென்று, அட்மிஷன் உறுதி செய்து கொள்ளலாம். இதுசார்ந்த புகார்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை நேரிலோ அல்லது, 0422 - 2391062 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்
No comments:
Post a Comment